என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்.
- சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் வைக்கம் விருதுசெயல்பட்டவர்.
சென்னை:
2024-ம் ஆண்டிற்கான "வைக்கம் விருது" கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (12-ந்தேதி) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்குகிறார்.
- ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது.
- மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.
கடலூர்:
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ந் தேதி காலை பலவீனமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புயல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பெண்ணாடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகின்றது.
ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குடைப்பிடித்த படியும், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மழையில் பலர் நனைந்த படி சென்றதைக் காண முடிந்தது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது சிறிதளவு தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் தென்பெண்ணை கரையோரம் ஆங்காங்கே கரைகள் சேதமடைந்து தற்போது மணல் மூட்டைகள் அடுக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இருந்தபோதிலும் சாத்தனூர் அணையிலிருந்து மீண்டும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இன்று முதல் 13-ந் தேதி வரை மழை இருக்கும் என்பதால் ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்து உள்ளனர்.
- வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000-ம் நாள் வருகிற 24-ந் தேதி வருகிறது.
- காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000-ம் நாள் வருகிற 24-ந் தேதி வருகிறது. அன்று தான் சமூகநீதிக்காக குரல் கொடுத்த தந்தைப் பெரியாரின் நினைவு நாள். அந்த நாளில், அதாவது வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாள் வன்னிய மக்கள் தொடங்கிய போராட்டத்தால் 21 இன்னுயிர்களை இழந்தாலும் கூட, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தது. இப்போது அவரது நினைவு நாளில் தொடங்கும் அடுத்தக்கட்ட போராட்டமும் வெற்றியில் தான் முடியும்; வன்னியர் சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும், உறுதியும் எனக்கு அதிகமாகவே இருக்கின்றன.
காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார். மற்ற இடங்களில் நடைபெறும் இந்த போராட்டங்களை பா.ம.க.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்துவர். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடைபெறும் இந்தப் போராட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பள்ளிகளின் தூய்மைப்பணியாளர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை வாயிலாகவே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
- எதற்கெடுத்தாலும் சமூகநீதி அரசு, சமூக நீதி அரசு என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, இது தான் சமூகநீதியின் அடையாளமா? என்பதை விளக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியாளர்களாக பணியாற்றி வரும் 30 ஆயிரம் பேருக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மிக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தைக் கூட ஓராண்டாக வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.1000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளிகளில் ரூ.1500, உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.2,250, மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.3000 என்ற அளவில் தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஒருவரால் கண்ணியமாக வாழ முடியாது. ஆனால், இந்தத் தொகையையே ஓராண்டாக வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது என்றால், சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் தூய்மைப்பணியாளர்களின் நலனில் அது எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளிகளின் தூய்மைப்பணியாளர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை வாயிலாகவே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்களின் ஊதியத்திற்கான நிதியை அத்துறை நிறுத்தி விட்டதால் தான் ஊதியம் வழங்க முடியவில்லை என்று அத்துறையின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தூய்மைப்பணியாளர்கள் தான் சமூகத்தில் மிகவும் அடிமட்ட நிலையில் இருப்பவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கான ஊதியத்தை இறுதி செய்து விட்டு தான் மற்ற செலவுகளை அரசு செய்ய வேண்டும். ஆனால், யாருக்கும் பயனற்ற நிகழ்வுகளுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு தூய்மைப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயமாகும். எதற்கெடுத்தாலும் சமூகநீதி அரசு, சமூக நீதி அரசு என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, இது தான் சமூகநீதியின் அடையாளமா? என்பதை விளக்க வேண்டும்.
ஒருபுறம் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியமாகப் பெறும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு கோரி போராடுகின்றனர், இன்னொருபுறம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் மறுக்கப்படுகிறது. ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ, இவை குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்த முனைகின்றனர். மக்களின் துயரம் கோபமாக மாறும் போது, அந்த கோப வெள்ளத்தில் அனைத்து அநீதிகளும் அடித்துச் செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து மதுரை மக்களை அகதிகளாக்கக்கூடாது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமம் ஏலம் எடுத்ததாக கூறப்பட்டது. இதற்கு அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதன் விவரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகவும், தெற்குத்தெரு மேலநாட்டார் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி டோல்கேட் அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மோகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலையில் தொடங்கிய தர்ணா போராட்டம் மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்றவர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து மதுரை மக்களை அகதிகளாக்கக்கூடாது. அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தர்ணா போராட்டத்தை முன்னிட்டு மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- டெல்லி-சென்னை விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.
- 7 விமானங்கள் நீண்டநேரம் வானில் வட்டமடித்தபடி பறந்தன.
ஆலந்தூர்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.
இதையடுத்து இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் நீண்டநேரம் வானில் வட்டமடித்தபடி பறந்தன. பின்னர் வானிலை ஓரளவு சீரானதும் பத்திரமாக தரையிறங்கியது.
இந்தநிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு 152 பயணிகளுடன் விமானம் வந்த போது பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் வானிலை சீரடைந்த பின்னர்விமானம் திரும்பி வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் காலை 10:45 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப் பட்டு செல்லும் மற்றொரு விமானமும் மோசமான வானிலை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
இதனால் சென்னையில் இருந்து டெல்லிக்கு 10.45 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய அந்த விமானம், இன்று பகல் ஒரு மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் டெல்லிக்கு செல்ல இருந்த 148 பயணி கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.
இதைப்போல் மங்களூ ரில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக, இன்று காலை 11:40 மணிக்கு சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
- தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.
- மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்து உள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டு உள்ளது. ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.
திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- தேர்தல் முடிவுகள் வெளியான பின் வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
- கடைசியாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
52 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கிளப்பின் பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவின் கோரிக்கையின் பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, 25 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் மற்றும் ஐந்து கமிட்டி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் டிசம்பர் 15-ந்தேதி அன்று நடத்தப்படுவதாக பாரதிதாசன் அறிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், மெய்யறிவாளன் (எ) விஸ்வநாதன் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் தேர்தல் நடைமுறைகளில் தலையிட முடியாது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனால், மீண்டும் தேர்தல் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடைசியாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகளாக பத்திகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்த முயன்றும் நடைபெறவில்லை. 2005-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயன்றபோது அசத்துல்லா நீதிமன்றம் சென்று தடை பெற்றார். 2012-ம் ஆண்டு தேர்தல் நடவடிக்கை தொடங்கியபோது பெருமாள் (எ) பாரதிதமிழன் நீதிமன்றம் சென்று தடை பெற்றார்.
அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு, தேர்தல் நடவடிக்கை ஏறக்குறைய முடிவடையவுள்ள நிலையில் இவர்களின் நண்பர் மெய்யறிவாளன் (எ) விஸ்வநாதன் தடைகோரி நீதிமன்றத்தை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநிலத்தின் செலவைக் குறைக்க தி.மு.க. அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
- தகுதியான ஆசிரியர்களை நியமித்து கணினி அறிவியலை போதிக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நிதியின் மூலம் கணினி அறிவியல் பாடத்திற்கென்று பாடத்திட்டத்தினை உருவாக்கி, கணினி பயிற்றுநர்களைக் கொண்டு கணினி பாடத்தை மாணவ, மாணவியருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் பணியிடை பயிற்சிகள் மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், மேற்படி நிதியில் இருந்து மாணவ, மாணவியருக்கு கணினி அறிவியல் பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய தி.மு.க. அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கணினி அறிவியல் பட்டம் படித்த கல்வியியல் பட்டதாரிகளை பணியிடங்களில் அமர்த்தி மாணவ, மாணவியருக்கு கணினிப் பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலையில், அதனைச் செய்யாமல், இந்தப் பணிகளில் தன்னார்வலர்களை நியமித்து உள்ளது.
மாநிலத்தின் செலவைக் குறைக்க தி.மு.க. அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
மாநிலத்தின் செலவைவிட மிக முக்கியமானதாக விளங்குவது முறையான கல்வித் தகுதி பெற்ற கணினி ஆசிரியர்களை நியமிப்பதும், மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதும் தான் என்பதை தி.மு.க. அரசு புரிந்து கொண்டு தகுதியான ஆசிரியர்களை நியமித்து கணினி அறிவியலை போதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
- மகா தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடு புதைந்தது. வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இதையடுத்து புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கார்த்திகை தீபத்திருவிழாவினை ஒட்டி திருவண்ணமலை வரும் பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது.
* மலையில் மகாதீபம் ஏற்றப்படும்போது பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது என மாவட்ட கலெக்டர் அறிவிப்பார்.
* திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
* தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* கோவிலில் இருந்து பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
- தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞர்.
- தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்தநாள். கவிதைகள் மூலம் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞரான பாரதியாரை அவரது பிறந்தநாளில் போற்றுவோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!
- தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார்.
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!
தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!
மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய! என்று தெரிவித்துள்ளார்.






