என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் அறிவிப்பு
    X

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் அறிவிப்பு

    • புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
    • மகா தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடு புதைந்தது. வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

    இதையடுத்து புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.

    திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கார்த்திகை தீபத்திருவிழாவினை ஒட்டி திருவண்ணமலை வரும் பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது.

    * மலையில் மகாதீபம் ஏற்றப்படும்போது பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது என மாவட்ட கலெக்டர் அறிவிப்பார்.

    * திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    * தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    * கோவிலில் இருந்து பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

    Next Story
    ×