search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cuddalore rain"

    • கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் சேதமான விளைநிலங்களை நேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வெள்ளப்பாதிப்பு தடுப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    கடலூர்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதால் தமிழகம் மற்றும் புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. குறிப்பாக கடலோர பகுதியில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 8-ந்தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக சிதம்பரம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கனமழை நீடித்தது. சிதம்பரத்தில் மட்டும் ஒரே நாளில் 30 செ.மீ. மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 8-ந்தேதி முதல் 28 மணி நேரத்தில் 33.25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதன் பின்னர் மறுநாள் ஓரளவு மழை குறைந்தது.

    மறுநாள் அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. அப்போது விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் கடலூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடானது. கடலூர் நகர் பகுதியான பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், குண்டுஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

    கடலூர் சிப்காட் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் உள்ளதால் தற்போதும் அந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    சிதம்பரம் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் 23,118 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. 242 வீடுகள் மழைக்கு இடிந்தது.

    மேலும் கனமழைக்கு 30 பசுமாடுகளும், 37 ஆடுகள் உள்ளிட்ட 108 கால்நடைகள் பலியானது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தண்ணீரால் சூழப்பட்ட நெற்பயிர் 1 ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்வரை பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    எனவே நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், கடலூர், சீர்காழி பகுதிகளில் வெள்ள சேதங்களை இன்று காலை (14-ந் தேதி) ஆய்வு செய்வதாக அறிவித்தார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புதுவையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு இரவு தங்கினார்.

    இன்று காலை புதுவையில் இருந்து கார் மூலம் கடலூர் புறப்பட்டார். கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் சேதமான விளைநிலங்களை நேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வெள்ளப்பாதிப்பு தடுப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெள்ள பாதிப்பை விளக்கி கூறினார்.

    அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏ.வ.வேலு, சி.வே.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் வடிகால் வசதி சீரமைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகை பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரால் சூழப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி சார்பில் வெள்ளபாதிப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்ட எல்லையில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்று (29-ந்தேதி) தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.

    இதன் காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுதவிர கடலூர் மாவட்டத்தில் தொடர்கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர வீராணம், பெருமாள் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூர்:

    மத்திய வங்கக்கடலில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த மழை கடலூர் நகரம், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் நீடித்தது. விடிய விடிய பெய்த மழை இன்று காலையும் தொடர்ந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் அவதிபட்டனர்.

    தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்த தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியை அடுத்த வாணாதி ராயபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி கட்டிடத்தின் சுற்றுவர் மழையில் நனைந்து சேதமடைந்தது.

    நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழைபெய்து வருகிறது. வாணாதிபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது.

    இதன் காரணமாக அந்த பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின்காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்று வாணாதிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வராததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.

    கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்த தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம்:

    தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதையடுத்து விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோகைப்பாடி, நன்னாடு, வழுதரெட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து லேசாக மழை தூரிக்கொண்டிருந்தது. இரவு 9.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    2 மணி நேரம் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இன்று காலையும் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், அரசூர், மயிலம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்யத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை தொடர்ந்து தூரிக்கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்தமழை சிறிது நேரம் நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியும் வாகனங்களை ஓட்டிசென்றனர். தொடர்ந்து மழை லேசாக விட்டு விட்டு தூரிக்கொண்டே இருந்தது.

    பெண்ணாடம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் நேற்று காலை 7 மணியில் இருந்து லேசாக மழை பெய்தது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதைத்தொடர்ந்து மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள பெண்ணாடம் கடை வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான அம்புஜ வல்லி பேட்டை, கள்ளிப்பாடி, காவனூர், எசனூர், வெங்கடசமுத்திரம், நகரபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    1 மணிநேரம் பெய்த மழையினால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டர்) பின்வருமாறு:-

    சிதம்பரம்-35, கொத்தவாச்சேரி-32, அண்ணாமலைநகர்-31, சேத்தியாத்தோப்பு-30, புவனகிரி-27, ஸ்ரீமுஷ்ணம்-23.40, பரங்கிப்பேட்டை-23, காட்டு மன்னார் கோவில்-22, வடக்குத்து-19, குறிஞ்சிப்பாடி-15, கடலூர்-15.80, லால்பேட்டை-13.80, கீழ்செறுவாய்-13, வேப்பூர்-11, தொழுதூர்-7, விருத்தாசலம்-5.30, பண்ருட்டி-3.

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை

    கடலூர்:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிமுதல் மழை பெய்யத்தொடங்கியது. கடலூர் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 1 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து பெய்தது.

    நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்றும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    கடலூர், திருப்பாதிரி புலியூர், நெல்லிக்குப்பம் போன்ற இடங்களில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதுபோல் சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர், வளையமாதேவி, மஞ்சக்கொல்லை, வீரமுடையான் நத்தம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அதுபோல் ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், புதுகுப்பம், சேத்தம்பட்டு, காவனூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், அண்ணாகிராமம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் செல்லும் நிலை ஏற்பட்டது.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா போன்ற பகுதிகளில் இன்றும் கடல் கொந்தளிப்பும், பலத்த காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் இன்று2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    பரங்கிப்பேட்டை 6 மில்லி மீட்டர்.

    அண்ணாமலைநகர் -58.80

    சிதம்பரம் -46.80.

    கடலூர்-29.30

    வானமாதேவி-16.50

    பண்ருட்டி-9.20

    ஸ்ரீமுஷ்ணம்-9.10

    குப்பநத்தம்-7.50

    மாவட்டம் முழுவதும் 461.25 மி.மீ. மழை பெய்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் சாரல்மழை பெய்தது. மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, எண்டியூர், பிரம்மதே‌ஷம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. 9 மணி வரை பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    எக்கியார்குப்பம், கூனிமேடுகுப்பம், கீழ்புத்துப்பட்டு, அனிச்சக்குப்பம் உள்பட 19 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் கொந்தளிப்பும், சூறைகாற்று வீசுவதால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டன.

    கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, காட்டு மன்னார்கோவில், பெண்ணாடம், விருத்தாசலம், நெய்வேலி போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. நேற்று இரவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குளிர்ந்தகாற்று தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தது.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி போன்ற கடல் பகுதிகளில் இன்றும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டது.

    கடலூர் நகரில் இன்று காலையிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. சாலையின் இருபுறமும் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சம்பா நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது.

    அதேபோல் நெல்லிக்குப்பம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. அந்த பகுதியில் உள்ள வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல் பண்ருட்டி, சிதம்பரம் போன்ற பகுதிகளிலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான வயல் மழைநீரில் மூழ்கியது.

    இதில் நடப்பட்ட ஒருவாரமே ஆன நாற்றுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன.

    கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மயிலத்தில் 50 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரத்தில் மழை பெய்தது. இந்த மழை 6.20 மணி வரை நீடித்தது. அதன்பிறகு இரவு 12 மணி அளவில் இடி-மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் பெய்தது.

    இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, குணமங்கலம், வெளியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.

    தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அடித்த சூறாவளி காற்றால் மயிலம், ரெட்டணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் பல மரங்கள் மேலே சென்ற மின்வயர்கள் மீது விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வயர்கள் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்ததால் இரவு முழுவதும் மின்சாரம் வரவில்லை. விடிய விடிய மின்தடை நீடித்தது. இன்று காலை 10 மணி வரை மின்சாரம் வரவில்லை. இரவில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் முதியவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    திருவெண்ணைநல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தன. தற்போது பெய்த இந்த மழையால் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எலவ னாசூர் கோட்டை, மடப்பட்டு, களமருதூர், காட்டு நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இடை விடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் கடலூரிலும் நேற்று மாலை 6 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலையோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

    இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணியில் இருந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணி வரை இந்த மழை நீடித்தது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    வீராணம் ஏரி மற்று அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமாலை லேசான மழை பெய்தது. இன்று காலை ஏரியின் நீர் மட்டம் 46.80 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 256 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் சென்னை குடி நீருக்காக 74 கனஅடி தண்ணீர் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. 

    ×