கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தது.
மழை
மழை
Published on

கடலூர்:

உள் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை முதல் 31-ந்தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலையில் சென்றனர். மேலும் திடீர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்றதையும், சிலர் மழையில் நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது.

இது தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் பனிமூட்டம், மதியம் சுட்டெரிக்கும் வெயில், மாலை குளிர்ந்த காற்று என்று இருந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் திடீரென்று மழை பெய்து வந்ததால் சீதோஷ்ண மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லிமீட்டர் அளவில் பின்வருமாறு:-

பரங்கிப்பேட்டை-1.4 கடலூர்-0.9 கலெக்டர் அலுவலகம்- 0.2 மில்லிமீட்டர் அளவு பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com