என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம்.
    • கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    உடுமலை:

    தமிழகத்தில் மொத்தமாக 4.42 லட்சம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள தென்னை சாகுபடியில் நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இப்பிரச்சினைக்கு தீர்வாக தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டியும், கள்ளை உணவு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் தமிழ்நாடு கள் இயக்கம், இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து திண்ணைக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறியதாவது:-

    தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம். ஆனால் அரசு கண்டு கொள்ளாததால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எவ்வித தீங்கும் இல்லாத கள் விற்பனையால் டாஸ்மாக் வருவாய் பாதிக்கும் என்பதால் அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இதே நிலை நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யவும் திட்ட மிட்டுள்ளோம் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக் கூடாது.
    • அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வா.புகழேந்தி கூறியதாவது:-

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு. தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும் என்று ஒரு அருமையான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையாணை நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இனி என்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். எனவே பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக் கூடாது. கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது. சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனி அவர் ஊர் உலகத்தை ஏமாற்ற வேண்டாம்.

    இனி இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கும். நாங்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி செல்வோம். எனது நோக்கம் எம்.ஜி.ஆர். கொடுத்த இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பது அல்ல. அது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடாது என்பது

    தான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது.

    அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை. இது கண்டிக்கத்தக்கது. இந்த பாராட்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பவர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வீட்டிலிருந்து வெளியே எறிந்து விடுங்கள். ஜெயலலிதாவின் புகழை மறைக்க நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்த என் முன்னோர்கள் எல்லாம் இப்படி வியூகம் வகுக்கவில்லை.
    • பிரசாத் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்.

    திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இது தொடர்பாக சீமான் கூறியதாவது.

    * விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்தித்துக்கொண்டார்கள் என்று உங்கள் செய்தியை பார்த்து தெரிந்துகொண்டேன்.

    * வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை.

    * இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்த என் முன்னோர்கள் எல்லாம் இப்படி வியூகம் வகுக்கவில்லை. எங்க தாத்தா பெருந்தலைவர் காமராஜரோ, பேரறிஞர் அண்ணா போன்றோர்களே இதுபோல் வியூகம் வகுக்கவில்லை.

    * என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை எதை எப்படி செய்தால் சரியாக வரும் என்று தெரியாத நான் இந்த வேலைக்கு ஏன் வர வேண்டும்.

    * யாரை எங்கு நிறுத்தினால் வெல்லலாம் என்று இது கூட தெரியாமல் நான் எப்படி...

    * எனக்கு நிறைய மூளை இருக்கு. காசு தான் இல்லை. அதனால் எனக்கு அது தேவையில்லை. அதற்கு வியூகம் வகுத்து என்ன பயன்.

    * கத்தரிக்காய் என்று தாளில் எழுதி பயன் இல்லை. நிலத்தில் இறங்கி, விதை விதைத்து, செடியை வளர்த்து, உரம் வைத்து, வளர்த்து விளைய வைக்க வேண்டும். அப்போது தான் கத்தரிக்காய் கிடைக்கும்.

    * குறிப்பிட்ட காலமாய் இந்த நோய் வந்துவிட்டது.

    * பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். எத்தனை ஆறு, ஏரி, குளம், சமூக மக்கள், என்ன பிரச்சனை என்று எப்படி தெரியும்.

    * பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். நாம் இதையெல்லாம் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

    • 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு-அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.
    • ஜெயலலிதா, அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித்துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமாகும்.

    இந்தத் திட்டத்திற்கு தி.மு.க. அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957 ஆம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை ஜெயலலிதா அவர்களையே சாகும். மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் ஜெயலலிதா.

    மேலும், 07-08-2015 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது. தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை பாரதப் பிரதமரிடம் வழங்கினார்கள்.

    இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு-அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.

    இதனைத் தொடர்ந்து 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு அவினாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தவர் ஜெயலலிதா.

    இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித் துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 இலட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலையொட்டி சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்ட ஜெயலலிதா, அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

    ஜெயலலிதா அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம், ஆளுமை, பன்மொழித் திறன் காரணமாக, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள்.

    இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா பாதையில் நடைபெற்ற ஆட்சி, அவர்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியது. ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்த நிலையில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது ஜெயலலிதா அவர்களின் ஆட்சி. ஜெயலலிதாவின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான், இன்றைக்கு. அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் ஜெயலலிதா தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களின் நலன் கருதி தேவையான நிதியை வாங்கி கொடுத்து விட்டு அந்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
    • போதிய நிதி வராததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி பட்டியலைத்தான் நான் வெளியிட்டுள்ளேன். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒன்றிய அரசிடம் சென்று நிதியை வாங்கி வரவேண்டியது தானே. அதை விட்டு விட்டு உங்கள் கட்சி செய்யும் தவறுகளை நியாயப்படுத்தலாமா? மாணவர்களின் நலன் கருதி தேவையான நிதியை வாங்கி கொடுத்து விட்டு அந்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

    ரூ.2155 கோடி பணத்தை கொண்டு வந்து கொடுங்கள். போதிய நிதி வராததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு செயற்கை நிதி நெருக்கடி செயலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள், இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான்.
    • நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், குப்பம் பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- நான் கோவை மாவட்டம் போரூரில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று இருந்தேன். வேறு எங்கும் செல்லவில்லை. நான் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபடவில்லை.

    யாரையும் ஆலோசனைக்கு அழைக்கவில்லை. எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான். நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூரை சேர்ந்த நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவிலுக்கு சென்றதற்கு ஆதாரமாக பிரசாத தட்டை நிருபர்களிடம் காண்பித்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார். பின்னர் அ.தி.மு.க நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து பேசி விட்டு அவர் வீட்டில் இருந்து கிளம்பி சென்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பரபரப்பு விவாதத்திற்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • அவல நிலைக்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடியா தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு உள்ளது.

    விடியா தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை, அனைத்து இடங்களிலும் மாணவிகளுக்கு எவ்வித அச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்து உள்ளனர். இந்த அவல நிலைக்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையிலும்; கழக மாணவர் அணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணி மாநில துணை நிர்வாகிகளும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மாணவர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக மாணவர் அணியினரும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை.
    • அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.

    அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. உறுப்பினர் என்ற போர்வையில் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

    * இல்லாத அதிகாரம் இருப்பதாகக்கூறி தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    * அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை.

    * அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் பிரச்சனை இருந்தால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே விதி

    * உட்கட்சியில் பிரச்சனை இருந்தால் அதில் தலையிட நீதிமன்றங்களக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    * கட்சி விதி திருத்தங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலை.

    * அ.தி.மு.க. உறுப்பினர் என்ற போர்வையில் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * கட்சி விதி திருத்தங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை.

    * மூல வழக்கில் வரும் தீர்ப்பை செயல்படுத்துவோம் என ஆணையமும் கூறி உள்ளது.

    * விதிகள் திருத்தம் மாற்றங்கள் குறித்த தகவல் தெரிவிக்க மட்டுமே செய்ய வேண்டும்.

    * ஓபிஎஸ்-ஆல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் புகழேந்தி.

    * கட்சி எங்களுடையது என மனு அளித்தால் அதனை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்.

    * அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.

    * தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

    * கட்சியில் இல்லாதவர்கள், துரோகிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கக்கூடாது என அ.தி.மு.க. வாதிட்டது.

    * உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க அதிகாரமில்லை என முன்னதாக தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

    * அ.தி.மு.க.வின் கோரிக்கைகளை வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    * அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்த பின்னரே தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் களத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.

    கோபி:

    அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அக்கட்சி யில் பல்வேறு பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும்.

    தற்போது கே.ஏ.செங் கோட்டையன் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய லாளராகவும் இருந்து வருகிறார்.

    சமீப காலமாக கட்சியின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து வந்த நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 9-ந் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது கடும் சர்ச்சையானது.

    இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மீண்டும் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக கூறப்பட்டது.

    இதற்கு விளக்கம் அளித்து கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழாவில் எனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள், பேனர் அழைப்பிதழில் இடம் பெறவில்லை.

    இந்த திட்டத்திற்கு முதல் முதலாக நிதியை ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். இதனால் தான் அந்த பாராட்டு விழாவில் நான் பங்கேற்கவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை. புறக்கணிக்கவில்லை என்று சொல்வதைவிட எனது உணர்வுகளை வெளிப்படுத்தினேன் என்றார்.

    இந்நிலையில் நேற்று இரவு கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டில் திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரது வீட்டில் நுழைவாயில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. இது குறித்து விசாரித்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு செங்கோட்டையன் வீட்டுக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு கே.ஏ.செங்கோட்டையன் திடீரென கோவை மாவட்டத்தில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு அவர் அங்கேயே தங்கி விட்டார்.

    இதுகுறித்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறும்போது, நேற்று இரவு செங்கோட்டையன் கோவை மாவட்டத்தில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். கோவையில் அவரது மகன் குடும்பத்துடன் வசித்து வருவதால் அவர் வீட்டில் தங்கி இருக்கலாம் என்றனர்.

    மேலும் இன்று மாலை கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அவர் நிச்சயமாக பங்கேற்பார் என்றனர்.

    இதனால் அரசியல் களத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட் டையன் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொது கூட்டத்தில் பங்கேற்பாரா? என உறுதியான தகவல் தெரிய வில்லை. அவ்வாறு அவர் பங்கேற்றால் என்ன பேசப் போகிறார்? என கட்சியினர் இடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியுள்ளது.

    இன்று 2-வது நாளாக செங்கோட்டையன் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. செங்கோட்டையன் வீட்டுக்கு வருபவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக அவர் வீட்டுக்கு செல்கிறீர்கள்? போன்ற விவரங்களை சேகரித்து அதன் பிறகு உள்ளே அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டி பாளையம், அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன் குவிந்தனர்.

    முதலில் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.

    அதன் பின்னர் தற்போது வீட்டின் கேட் திறக்கப்பட்டு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டுக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டையன் இன்று மதியம் வீட்டுக்கு வருவதாக வந்த தகவலை அடுத்து ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு முன்பு திரண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம்.
    • மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா நேற்று நடந்தது.

    இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழா நடைபெற்று வந்தது. நேற்று காலை தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம், மகா தீபாரதனையும், காவடி பூஜையும், நடைபெற்றது.

    பிற்பகல் 2 மணி அளவில் பாலதண்டாயுதபாணி சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று பக்தர் ஒருவருக்கு மார்பு மீது மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செடல் சுற்றுதல் தீமிதித்தல், தேர் வீதி உலா ஆகியவை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவதானம் பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
    • தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுகிறது. அ.தி.மு.க. உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம். தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து திருப்தி அடைந்த பிறகு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்.

    இந்த நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்றைக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்கின்ற உரிமை இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் மூலமாக ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின்படி, நீதிமன்றத்திற்கு எந்தெந்த அதிகாரங்கள் இருக்கிறதோ.. அந்த அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது என்பது அந்த மனுவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்று வழங்கப்பட்டு இருக்கின்ற தீர்ப்பு தேர்தல் ஆணையம் மனுவை விசாரிக்கலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி போட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்றைக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்றார். 

    ×