என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால்... விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கலாய்த்த சீமான்
- இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்த என் முன்னோர்கள் எல்லாம் இப்படி வியூகம் வகுக்கவில்லை.
- பிரசாத் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்.
திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக சீமான் கூறியதாவது.
* விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்தித்துக்கொண்டார்கள் என்று உங்கள் செய்தியை பார்த்து தெரிந்துகொண்டேன்.
* வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை.
* இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்த என் முன்னோர்கள் எல்லாம் இப்படி வியூகம் வகுக்கவில்லை. எங்க தாத்தா பெருந்தலைவர் காமராஜரோ, பேரறிஞர் அண்ணா போன்றோர்களே இதுபோல் வியூகம் வகுக்கவில்லை.
* என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை எதை எப்படி செய்தால் சரியாக வரும் என்று தெரியாத நான் இந்த வேலைக்கு ஏன் வர வேண்டும்.
* யாரை எங்கு நிறுத்தினால் வெல்லலாம் என்று இது கூட தெரியாமல் நான் எப்படி...
* எனக்கு நிறைய மூளை இருக்கு. காசு தான் இல்லை. அதனால் எனக்கு அது தேவையில்லை. அதற்கு வியூகம் வகுத்து என்ன பயன்.
* கத்தரிக்காய் என்று தாளில் எழுதி பயன் இல்லை. நிலத்தில் இறங்கி, விதை விதைத்து, செடியை வளர்த்து, உரம் வைத்து, வளர்த்து விளைய வைக்க வேண்டும். அப்போது தான் கத்தரிக்காய் கிடைக்கும்.
* குறிப்பிட்ட காலமாய் இந்த நோய் வந்துவிட்டது.
* பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். எத்தனை ஆறு, ஏரி, குளம், சமூக மக்கள், என்ன பிரச்சனை என்று எப்படி தெரியும்.
* பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். நாம் இதையெல்லாம் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.






