என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும்.
    • லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர்.

    புதுச்சேரி:

    புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:-

    வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர். மேலும் உங்களின் வாட்ஸ் ஆப் ஹாக் செய்யப்படும்.

    இதுபோன்று சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

    மேலும் இணைய வழி சம்பந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413 2276144, 9489205246 எண்களில் இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் வரப்போகிறது மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

    புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றும் தேசிய இவிதான் செயலியை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடியின் 3-வது முறையான ஆட்சி 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஒரு பிரதமர் தொடர்ந்து 3 முறை இருந்ததில்லை. நரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். நாட்டின் வளர்ச்சி, வேகம் 11 ஆண்டில் எவ்வித தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

    140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 27 கோடி மக்களை 11 ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளோம் என உலக வங்கி கூறியுள்ளது.

    டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், படிப்பு விஷயம் தெரியாதவர்கள், அவர்கள் செல்போன் பயன்படுத்த தெரியாது, இதை எப்படி பயன்படுத்துவார்கள்? என கேள்வி கேட்டார். ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

    சத்தியமங்கலம் காட்டில் வெள்ளரிக்காய் வாங்கியபோது, பணத்தை வங்கியில் செலுத்தும்படி கூறியது. முன்பு ஆட்சி செய்தவர்கள் திட்டங்களை தீட்டவோ, நிறைவேற்றவோ தைரியம் இல்லாமல் இருந்தனர். பிரதமராக மோடி வந்த பின் தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டது.

    உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2-வது இடத்தை இந்தியா பெற்று சாதனை பெற்றுள்ளது. இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3-ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறியிருக்கும்.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் பிரதமர் மோடி மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளார். இங்கிருந்தே தாக்குதல் நடத்தும் அளவுக்கு ராணுவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 2014-க்கு முன்பு ராணுவ தளவாடங்கள் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டது.

    ஆனால் பிரதமராக மோடி வந்த பின்பு தொழில்நுட்பம் வளர்ந்து, ரூ.50 ஆயிரம் கோடிக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது.

    தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது இவிதான் செயலி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சட்டசபையில் கேள்விகளை உடனடியாக செயலகத்துக்கு அனுப்ப முடியும். சட்டசபை அலுவல் பட்டியலை பார்க்கலாம். சட்டசபை, பாராளுமன்றத்தில் நடப்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது இந்த இவிதான் செயலி மூலம் கொண்டுவரப்பட உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

    நம் இந்திய நாடு 2027-ல் மிகச்சிறந்த வல்லரசு நாடாக, வளர்ச்சியடைந்த பாரதமாக, உலகின் விஸ்வகுருவாக திகழ வேண்டும் என பிரதமர் மோடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

    உலகின் முதல் ஜனாப் பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். புல்லட் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறையிலும் நாடு முன்னேறி வருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தை இயற்றும் பணியில் இந்த செயலி உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
    • வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு:

    காரைக்காலில் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் மற்றும் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகப்பகுதியான நாகப்பட்டினம், தஞ்சாவூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    அதனை ஏற்று இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.

    • சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு காலை இயக்கப்படும் மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட ரெயில்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புதுச்சேரிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 66063) மெமு ரெயிலும், புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 66064) மெமு ரெயிலும் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்கு புதுவைக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 66051) வசதியான இடத்தில் வருகிற 8 மற்றும் 10-ந்தேதிகளில் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். அதேபோல் புதுவை-திருப்பதி ரெயிலும் (வண்டி எண் 16112) வருகிற 11, 12-ந்தேதிகளில் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

    புதுச்சேரி-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12868) வருகிற 11 மற்றும் 18-ந் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு பதிலாக 3.05 மணிக்கு (50 நிமிடம் தாமதமாக) புறப்படும்.

    மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பருவமழை காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் பெரியளவில் இல்லை.
    • இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைந்தது.

    பருவமழை காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் பெரியளவில் இல்லை. ஆனால் அதன்பின் கடந்த 1-ந் தேதி முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து 100 டிகிரியை எட்டி வெயில் வாட்டி வதைத்தது.

    இந்த நிலையில் மேற்கு திசை காற்று மாறுபாட்டால் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரியில் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இரவு 10.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து புதுச்சேரியில் குளர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர். இருப்பினும் இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டியது.

    • மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கன்னடத்தை விட தமிழ்தான் முதல் மொழி என்று கூறியுள்ளார்.
    • மூக நலன் சார்ந்து இருமாநில அரசுகள் முடிவெடுத்து வன்முறை நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. வடமாவட்டங்களில் உழைக்கும் வர்க்கங்களான வன்னியர், ஆதி திராவிடர் மக்களை இணைத்து களமாடியிருந்தால் வீழ்ச்சிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்காது. ராமதாசின் பணிகள் தமிழுக்கு மிகப்பெரிய சான்றாக இருந்துள்ளது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் ராமதாஸ் கண் கலங்கியிருப்பது வருத்தத்திற்குரியது.

    பா.ம.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், ராமதாஸ் வைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் அன்புமணிதான் விளக்கம் தர வேண்டும்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கன்னடத்தை விட தமிழ்தான் முதல் மொழி என்று கூறியுள்ளார். ஒரு தமிழனாக தமிழ் மொழியை தூக்கி பிடிப்பதில் தவறில்லை. தமிழ் மீதுள்ள ஆழ்ந்த புரிதலை அவர் வெளிகாட்டியுள்ளார்.

    கன்னடத்தில் கமல் நடித்த தமிழ் படத்தை திரையிடமாட்டோம் என கன்னடர்கள் கூறுவது சரியில்லை. இது மொழி வெறியை குறிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கன்னட படம் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்படும். ஒரு நல்லிணக்கனம் இப்போதுதான் உருவாகியுள்ளது. இது இரு மாநில பிரச்சனையாகி அசாதாரணமான சூழல் உருவாகக்கூடாது. சமூக நலன் சார்ந்து இருமாநில அரசுகள் முடிவெடுத்து வன்முறை நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்காதது கவலையளிக்கிறது. வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    மக்கள் நீதி மையத்துக்கு சட்டமன்ற தேர்தலின்போது போட்ட ஒப்பந்தப்படி எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. நடவடிக்கையில் நாங்கள் குறை காணவில்லை. எங்கள் தலைவருக்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் உள்ளது. தனிப்பட்ட முறையில் வருத்தம் இருந்தாலும் கட்சி நலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடந்த அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் வியட்நாம் விடுதலை 50-ம் ஆண்டு விழாவில ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    • 750 மி.லி. கொண்ட முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது.
    • இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.

    புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. 750 மி.லி. கொண்ட முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது.

    பீருக்கான விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு பிராண்டிற்கு தகுந்தபடி கணக்கிடப்படும்.

    • புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகள் உள்பட நகரின் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
    • விளம்பர பேனர்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ,ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் ஆகும். இதையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் மத்திய ஆயுஷ் அமைச்சக மெரார்ஜி தேசாய் தேசிய யோகா இன்ஸ்டிடியூட் சார்பில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் கலந்துகொண்டு யோகாவை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

    இதற்காக புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகள் உள்பட நகரின் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் யோகா குறித்து இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. எந்த இடத்திலும் இல்லாத வகையில் முழுவதுமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து புதுச்சேரி மக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடி நடவடிக்கையாக நேற்று இரவோடு இரவாக கடற்கரை சாலை உள்பட நகரில் பல்வேறு இடங்களில் யோகா விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த இந்தி விளம்பர பேனர்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக அரசு சார்பில் தமிழில் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன.

    • ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) சர்வதேச யோகா மஹோற்சவ விழா நடக்கிறது.

    புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.

    சாலைகளின் முக்கிய சந்திப்புகளான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.

    புதுவையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.

    இந்த நிலையில் யோகா நாள் விழாவிற்காக சிவாஜி சிலை அருகே அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்தி விளம்பர பலகைகளில் இந்தி மொழியை புதுவை மாநில தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

    • மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடக்கிறது.
    • யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடக்கிறது.

    புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.

    சாலைகளின் முக்கிய சந்திப்புகளுக்கான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.

    புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்

    இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.

    • நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
    • முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். அவர் நிதி பொறுப்பையும் வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.

    இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்கும்போதெல்லாம், அப்புறம் சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே கூறி வந்தார்.

    ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.

    அவர் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை. நேற்று அவர் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது பா.ஜ.க. கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • துணைநிலை ஆளுநர் மாளிக்கைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
    • கடந்த 2 மாதங்களில் 6ஆவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

    மிரட்டலை தொடர்ந்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு கடந்த 2 மாதங்களில் 6ஆவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×