என் மலர்
கேரளா
- பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்.
- ரூ1.57 கோடி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஆண்டுதோறும் வருவார்கள்.

பத்மநாபசுவாமி கோவிலுக்கு கட்டிடங்கள், சிறப்பு பூஜைகள், யானை ஊர்வலத்துக்கான வாடகை, படங்கள்-உடைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை என பல்வேறு வகைகளில் வருமானம் வருகிறது. அவற்றில் ஜி.எஸ்.டி.யின் கீழ் வரும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும்.
ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ1.57கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டப்படாமல் இருப்பதாகவும், அதனை உடனடியாக கட்டவேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. துறை கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த நிலுவை தொகையை கோவில் நிர்வாகம் செலுத்தாமல் இருந்திருக்கிறது.
ஆகவே நிலுவையாக உள்ள ரூ1.57 கோடியை உடனடியாக செலுத்துமாறு பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளைக்கு ஜி.எஸ்.டி. துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் விலக்கு உள்ள பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோவில் அதிகாரிகள் பதில் அனுப்பியுள்ளனர்.
- ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.
- 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடை முறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன. அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள், பம்பைக்கு வந்து செல்ல ஆன்லைன் மூலமாகவே பஸ் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும்.
கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தலைமையில் நடந்த முன்னேற்காடு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து மந்திரி கணேஷ்குமார் கூறி யிருப்பதாவது:-
சபரிமலைக்கு யாத்திரை வரும் 40 பேர் கொண்ட குழுக்கள் 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே 220 பஸ்கள் அரை நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- வருகிற 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.
- புஷ்பாபிஷேகத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மலர்களை கொண்டு வரக்கூடாது.
திருவனந்தபுரம்:
சபரிலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
இந்த சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது.
இதற்கிடையே நடப்பு சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதி, சாலை மேம்பாடு, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு பாதுகாப்பில் அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, சபரிமலையில் தேவையற்ற பொருட்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சபரிமலையில் நடத்தப்படும் புஷ்பாபிஷேகத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மலர்களை கொண்டு வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தற்போது சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரின் ஆலோசனையின் பேரில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களது இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் தடை விதித்து உள்ளது.
மேலும் பம்பை ஆற்றில் பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலைகள் உள்ளிட்டவற்றை போட்டு செல்வதற்கும் தடை விதித்துள்ளது.
- துபாய் ஓட்டலில் வைத்து நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.
- தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிவின் பாலி மறுத்தார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரங்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை அம்பலமாக்கியது. அதன் தொடர்ச்சியாக பல நடிகைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.
இதனையடுத்து, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துபாய் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி மீது வழக்கு பதியப்பட்டது.
தன் மீது புகார் கூறிய அந்த பெண் யார் என்பது தனக்கு தெரியாது என்றும், அந்த பெண்ணை தான் சந்தித்ததே இல்லை என்றும் நடிகர் நிவின் பாலி கூறினார்.
மேலும் புகார் கூறிய பெண் தனது குற்றச்சாட்டில், குறிப்பிடப்பட்டிருந்த நாளில் தான் துபாயில் இல்லை எனவும், கேரளாவில் இருந்ததாகவும் தெரிவித்த நிவின் பாலி அதற்குரிய ஆதாரங்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில், மலையாள நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், நம்பத்தகுந்த எந்த ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில், பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் இடத்தில் நிவின் பாலி இல்லை. அவரது பயண விபரங்கள், க்ரெடிட் கார்டு பரிவர்த்தனை உள்ளிட்ட விபரங்கள் திரட்டப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, "என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எல்லா அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்று நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர பூஜையின் போது ஸ்பாட் புக்கிங்கிற்காக 3 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
- மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் சபரிமலைக்கு சிரமமின்றி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வதற்கு தேவையான வசதிகள் தேவசம் போர்டு சார்பில் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.
அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' அடிப்படையில் 70 ஆயிரம் பேர், 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் 'ஸ்பாட் புக்கிங்' செய்வதற்கு வசதியாக பம்பை, எருமேலி, பர்மேடு ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது.
கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர பூஜையின் போது ஸ்பாட் புக்கிங்கிற்காக 3 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
'ஸ்பாட் புக்கிங்' செய்யும் பக்தர்களுக்கு, அவர்களின் விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் 'கியூ-ஆர் கோர்டு' மற்றும் புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக அமைப்பை தயார் செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
மேலும் சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள், இருமுடி கட்டில் சாம்பிராணி, கற்பூரம் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.
மேலும் கற்பூரம், சாம்பிராணி போன்றவை பூஜை பொருட்களாக இருந்தாலும், தீ ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- தனது முதல் நாள் வேலையை, ஸ்விப்ட் பஸ்சில் கண்டக்டராக பணி புரியும் தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார்.
- யமுனா கண்டக்டராகவும், அவரது மகன் ஸ்ரீராக் டிரைவராகவும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி யமுனா. இவர்களது மகன்கள் சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக். யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் 2009-ம் ஆண்டில் இருந்து தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
அவருக்கு தனது மகன் ஸ்ரீராக்கை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிக்கு சேர்த்து விட வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தது. இதற்காக அவர் தனது மகனை டிரைவராக பயிற்சி பெற செய்தார். பயிற்சி முடிந்ததும் வனத்துறையில் தற்காலிக டிரைவராக ஸ்ரீராக் பணிக்கு சேர்ந்தார்.
அதில் இருந்து கொண்டே அவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அதன் பலனாக கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஸ்ரீராக்கிற்கு டிரைவர் வேலை கிடைத்தது. அவருக்கு திருவனந்தபுரம் நகரில் ஓடக்கூடிய அரசு போக்குவரத்து கழக மின்சார ஸ்விப்ட் பேருந்தில் டிரைவர் வேலை கிடைத்தது.
தனது முதல் நாள் வேலையை, ஸ்விப்ட் பஸ்சில் கண்டக்டராக பணி புரியும் தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார். தன்னுடைய இந்த விருப்பத்தை போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார்.
இதையடுத்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு செல்லும் மின்சார பேருந்தை முதன்முதலாக ஸ்ரீராக் இயக்கினார். அவரின் விருப்பப்படி அவரது தாய் யமுனா அதே பஸ்ஸில் கண்டக்டராக இருந்தார்.
தாய் கண்டக்டராகவும், மகன் டிரைவராகவும் இருந்து இயக்கிய பஸ்சை பலரும் ஆர்வமாக பார்த்தனர். தாயும் மகனும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்த அந்த நிகழ்வை காண யமுனாவின் மற்ற மகன்கள், ஸ்ரீராக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் முன்னிலையில் யமுனா கண்டக்டராகவும், அவரது மகன் ஸ்ரீராக் டிரைவராகவும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்தனர். மேலும் வேலை இடைவேளையின்போது தாய்-மகன் இருவரும் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை ஒரே இடத்தில் அமர்ந்து பகிர்ந்து சாப்பிட்டனர். தன்னுடைய மகனுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் வேலை கிடைத்தது மட்டுமின்றி, அவர் ஓட்டிய பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய நிகழ்வு யமுனாவுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.
மகன் ஓட்டிய அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய யமுனா 2022-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் ஸ்விப்ட் பஸ்சின் முதல் பெண் ஊழியர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வயநாடு தேர்தலில் வளர்ச்சி என்பது முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.
- வளர்ச்சி பிரச்சனைகள் குறித்து விவாதிக்காமல் பிரியங்கா ஓடுகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.
பிரியங்கா காந்தி கடந்த மாதம் வேட்புமனு தாக்கல் செய்தபோதே, தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை கடந்த 3-ந்தேதி தொடங்கி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே இருப்பதால் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா வேட்பாளர் நவ்யா ஹரிதாசும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பத்தேரி தொகுதியில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் அவர் பேசியிருப்பதாவது:-
வனவிலங்குகள் தாக்குதல், ரெயில்வே, மருத்துவம், பழங்குடியினர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வயநாடு தொகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. இதுபோன்ற விஷயங்களை புரிந்து கொள்ளாமல் பிரியங்கா காந்தி, கைத்தட்டலுக்காக அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வருகிறார்.
இந்த விவகாரங்களில் பிரியங்கா நேர்மையாக இருந்தால் விவாதத்திற்கு தயாராக இருக்க வேண்டும். வயநாடு தேர்தலில் வளர்ச்சி என்பது முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. வளர்ச்சி பிரச்சனைகள் குறித்து விவாதிக்காமல் பிரியங்கா ஓடுகிறார்.
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.
- மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
- பக்தர்களை வேகமாக ஏற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 15-ந்தேதி மாலை கோவிலின் நடை திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல், அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதில் சரியாக கவனம் செலுத்தாததன் காரணமாக அடிக்கடி நெரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அதுபோன்று இந்த சீசனில் நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத் துள்ளது. அதன்படி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனின் போது தினமும் 80 ஆயிரம் பக்தர்களை மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பதினெட்டாம் படி ஏறும் பக்தர்களுக்கு உதவ தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் அனுபவம் வாய்ந்தவர்களுடன், முன் அனுபவம் இல்லாத போலீசாரையும் தேர்வு செய்ய முதலில் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே சபரிமலையில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ள போலீசாரை மட்டும் பக்தர்களை படியேற்றும் பணியில் ஈடுபடுத்த தற்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பணியாற்றிய போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு பதினெட்டாம் படியில் பக்தர்களை வேகமாக ஏற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நான்கு ஷிப்டுகளாக பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல்.
- மொத்தம் 16 பேர் போட்டியிடுகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார்.
அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதி காலியானது. வயநாடு மக்களவை தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 16 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரியங்கா காந்தியை பொருத்தவரை வேட்புமனு தாக்கல் செய்த கடந்தமாதம் 23-ந்தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தார். அதன் பிறகு அவர்கள் இருவரும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர்.
இந்தநிலையில் பிரியங்கா காந்தி இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 3-ந்தேதி கேரளா வந்தார். அவர் தனது சகோதரரான ராகுல்காந்தியுடன் 3 மற்றும் 4-ந்தேதிகளில் வயநாடு தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர்கள் இருவரும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள்.
2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி டெல்லி திரும்பிய நிலையில், வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடியும், பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசியும் ஆதரவு திரட்டி வருகிறார்.
மேலும் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி வருகிறார். அவர் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்களோடு மக்களாக இருந்து சகஜமாக பேசுவது அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.
தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில், பிரியங்கா காந்தி தனது பிரசாரத்தை நாளை மறுநாளுடன் முடித்துக் கொள்கிறார்.
அவர் இன்று கோழிக்கோடு திருவம்பாடி, மலப்புரத்தில் உள்ள வண்டூர், ஏர்நாடு, நிலம்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
அவர் நாளை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதன்பிறகு மீதமுள்ள நாட்களில் அவருக்கு ஆதரவாக கட்சியின் நிர்வாகிகள் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
- ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கடிதம்.
- மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங் இந்தியில் பதில் கடிதம்.
பாராளுமன்றத்தில் உள்ள தென்இந்திய எம்.பி.க்கள் கேள்விகள் கேட்டு மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினால் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்புவது வழக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக தென்இந்திய எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினால் அதற்கு இந்தியில் பதில் கடிதம் அனுப்புவது அதிகரித்து வருகிறது.
கேரள எம்.பி.க்.கு இந்தியில் பதில் கடிதம்
அந்த வகையில்தான் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ்க்கு நடந்துள்ளது. ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு ரவ்நீத் சிங் இந்தியில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இணை மந்திரி இந்தியில் கடிதம் அனுப்பியதை கண்டிக்கும் வகையில் ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக எம்.பி.-க்கும் இதுபோல் நடந்த சம்பவம்
கடந்த மாதம் இதேபோல் இந்தியில் கடிதம் எழுதிய ரெயிலவே இணை அமைச்சருக்கு தி.மு.க.எம்.பி. அப்துல்லா தமிழில் பதில் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மண்டல பூஜை அடுத்தமாதம் 26-ந்தேதி நடக்கிறது.
- ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடக்கிறது.
இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள்(16-ந்தேதி) முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை தேவசம் போர்டு செய்தது.
அதன் ஒரு பகுதியாக சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவால் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறி ஸ்பாட் புக்கிங் அடிப்படையிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது.
பக்தர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக கேரள மாநில அரசு ஆலோசித்து வந்தது. இந்நிலையில் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்பாட் புக்கிங் மூலமாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்காக பம்பை, எரிமேலி, பீர்மேடு உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்கள் செயல்படும் என்றும், அந்த மையங்களில் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகளை காண்பித்து அனுமதி பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
- மோடி மக்களின் நல்வாழ்வை நிராகரித்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.
- நளினியை நினைத்து வருந்துகிறேன் என்று பிரியங்கா என்னிடம் கூறினார்
வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தங்கைக்கு ஆதரவாக அண்ணன் ராகுல் காந்தியும் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார். தன்னை எம்.பி.ஆக்கி அழகு பார்த்த வயநாடு தொகுதியில் நேற்றைய தினம் பிரியங்காவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆனது முதல் பிரதமர் மோடிக்கு எதிரான அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்து பாஜகவினரைக் கொந்தளிக்க வைத்த ராகுல் காந்தி நேற்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை பற்றி அதிகம் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.
அதற்கான காரணத்தையும் அவர் மேடையிலேயே தெரிவித்தார். முன்னதாக தனது உரையில் பிரதமர் மோடி மக்களின் நல்வாழ்வை நிராகரித்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்திருந்தார். இதன்பின் பேச வந்த ராகுல் காந்தி, இந்த கூட்டத்தில் என் முன் இரண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று அரசியல் ரீதியாக பேசுவது மற்றொன்று குடும்ப உறுப்பினர்களான உங்களுடன் சகஜமாகக் கலந்துரையாடுவது. நான் உங்களோடு பேசுவதை தேர்வு செய்கிறேன்.

உங்களின் வேட்பாளரை [பிரியங்காவை] பற்றியே பேசுகிறேன். பிரதமர் மோடியை பற்றி பிரியங்கா ஏற்கனவே ஒருமுறை பேசிவிட்டார். எனவே அவரைப் பற்றி இரண்டாவது முறை இந்த மேடையில் பேச வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் அவர் BORE அடித்துவிட்டதால் அதை தவிர்த்து விடலாம் என்று ராகுல் தெரிவித்தார்.
அதன்பின் தன் தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினியை பிரியங்கா சிறையில் சந்தித்து பேசியதையும் ராகுல் குறிப்பிட்டார். நளினியை நினைத்து வருந்துகிறேன் என்று பிரியங்கா தன்னிடம் கூறியதாக ராகுல் தெரிவித்தார். நமது நாட்டுக்கு தற்போது இந்த மன்னிக்கும் மனப்பாங்குள்ள அரசியல் தான் தேவை என்றும் ராகுல் வலியுறுத்தினார்.






