என் மலர்
நீங்கள் தேடியது "Kerala Medical Waste"
- கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
- தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயம்.
- 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று கொட்டப்பட்டு கழிவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
கேரளா மாநில மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு ஒரு குழுவை அமைத்து கழிவுகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது.
அதனைத்தொடர்ந்து 8 பேர் கொண்ட கேரள மாநில அதிகாரிகள் குழு இன்று கழிவுகள் கொட்டப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. எந்த வகையான கழிவுகள் கொட்டப்பட்டன. அவைகள் அபாயகரமானதா? என்பது குறித்த தரவுகளை இந்த குழுவினர் சேகரித்தனர். இது தொடர்பாக அவர்கள் கேரள மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழு "மருத்துவக் கழிவுகளில் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன. கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது இல்லை. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கழிவுகளை அகற்றுவது பற்றி கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.
- மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலை.
நெல்லையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு பதிவு செய்யப்பட்டு, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்தில் இருந்து வக்கம்பாளையம் வரை சாலையின் இரு பகுதிகளி லும் சாக்கு மூட்டைகளில் கழிவுகள் அதிகாலை நேரத்தில் ஒரு லாரி கொட்டிச் செல்வதை பொது மக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், ஏட்டு காளிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் ராஜ்(30), பழனியை சேர்ந்த ஓட்டுனர் தில்லையப்பன்(52), உதவியாளர்கள் அம்பராம் பாளையத்தை சேர்ந்த ராமசாமி(55), காளிமுத்து(52) ஆகியோரை கைது செய்தது டன், லாரியையும் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரத்தில் இருந்து குச்சனூர் செல்லும் பாதையில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. இங்கு மானாவாரி சாகுபடி மூலம் விவசாயிகள் விளைநிலங்களில் காய்கறி மற்றும் நிலக்கடலை பயிரிட்டு வருகிறார்கள்.
எனவே இந்த பகுதி எப்போதும் பசுமையாக காட்சி தரும்.
இந்த பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வந்தது. துர்நாற்றம் வீசியதால் அங்குள்ளவர்கள் திரண்டனர். இது குறித்து உடனடியாக சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இடம் அமிர்தம்மாள் என்பவருக்கு சொந்தமானது இவர் கேரளாவில் உள்ளார். இவரது இடததில்தான் 12 டன் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனை எதற்காக இங்கு வந்து மர்ம நபர்கள் கொட்டினர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவ கழிவு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் இது எந்த வகையை சேர்ந்தது என தெரிய வரும்.
இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கிராம மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






