search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 death"

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

    முன்னர் பழைய பாராளுமன்றம் இருந்த போந்தேரே மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் ஒரு பெண் ராணுவ அதிகாரி, அவரது பாதுகாவலர் உள்பட 12 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சோமாலியா ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
    மதுரை அருகே மோட்டார்சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் போலீஸ் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் ஜோதி (34). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு ஜோதி, தனது உறவினர்கள் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சத்தியவாணி (44), அவரது மகள் சூர்யகலா (20) ஆகியோருடன் ஒரே மொபட்டில் வெளியே புறப்பட்டார்.

    டி.பி.கே. ரோட்டில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்று கொண்டிருந்த ஜோதி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. அதே வேகத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் ஆம்னி பஸ் மோதியது. இதில் மொபட், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    விபத்தில் ஜோதி, சத்திய வாணி, சூர்யகலா மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஆனந்தன் 28, விக்னேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி, சத்தியவாணி, ஆனந்தன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூர்யகலா, விக்னேஷ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை சிகிச்சை பலனின்றி சூர்யகலா பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விக்னேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் பலியான சத்தியவாணி விருதுநகர் நகராட்சி அலுவலகத்திலும், ஆனந்தன் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

    விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#MaduraiAccident
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் தம்பிக்கு அரசு வேலை கிடைத்த பொறாமையால் வீட்டுக்கு அண்ணன் தீ வைத்த சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #Mansetsafire #brothergettinggovtjob
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள மடன்டோலா கிராமத்தை சேர்ந்தவர், கெடு மொன்டல். இவருடைய 4 மகன்களும் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். தேசிய தன்னார்வலர் படையில் பணியாற்றிவந்த கெடு மொன்டல் தனது பணிக்காலத்தின்போது சமீபத்தில் மரணம் அடைந்தார்.

    கெடு மொன்டலின் மறைவுக்கு பின்னர் அவரது இளைய மகன் கோபின்டா மொன்டல் என்பவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்பட்டது. தனக்கு கிடைக்காமல் தம்பிக்கு மட்டும் அரசு வேலை கிடைத்ததால் கெடு மொன்டலின் மகன்களில் ஒருவரான மக்கான் மொன்டல்(30) என்பவர் ஆத்திரம் அடைந்தார்.

    நேற்றிரவு, மடன்டோலா கிராமத்தில் உள்ள கெடு மொன்டலின் பூர்வீக வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். மனஉளைச்சலில் இருந்த மக்கான் மொன்டல்(30) திடீரென்று வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

    இதில் உள்ளே இருந்த கோபின்டா(28) அவரது மூத்த சகோதரர் பிகாஷ் மொன்டல்(32) மூன்று மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளான கோபின்டாவின் இரு மகள்கள் ஆகிய 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    பிகாஷ் மொன்டலின் மனைவி, மகன், மகள் மற்றும் கோபின்டா மொன்டலின் மனைவி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மால்டா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மனிக்ச்சக் காவல் நிலைய போலீசார், தலைமறைவாக இருக்கும் மக்கான் மொன்டலை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர். #Mansetsafire #brothergettinggovtjob
    சிவகாசியில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடித்த நண்பர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருதுநகர்:

    சிவகாசி லிங்காபுரம் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை(எண்-11851) உள்ளது. இங்கு நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் மது பாட்டில்களை வாங்கியுள்ளனர். அவர்கள் மதுபாட்டில்களுடன் சிறுகுளம் கண்மாய் கரை பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். மது குடித்த சில நிமிடங்களிலேயே காமராஜர் காலனியை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் கணேசன்(வயது21) வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதைப்பார்த்ததும் மற்றவர்கள் பயந்து போய் கணேசனின் தம்பி சக்திவேலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் ஆட்டோவில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் அங்கு வந்து சேருவதற்குள் மதுகுடித்த மேலும் 3 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அனைவரையும் சக்திவேல் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள்அறிவுறுத்தினர்.

    உடனே அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கணேசன், வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஷேக் ஜமாலுதீன் என்பவரது மகன் சையது இப்ராகிம்ஷா என்கிற ஜம்பு(22), லிங்காபுரம் காலனி அய்யாத்துரை என்பவரது மகன் கவுதம்(15) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

    இதுகுறித்து சக்திவேல் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் கணேசனுடன் சேர்ந்து மது குடித்த முத்தாட்சிமடத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் அய்யப்பன்(22), காமராஜபுரம் காலனியை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஜனார்த்தனன்(14), லிங்காபுரம் காலனியை சேர்ந்த முருகன் மகன் சரவணகுமார்(23), சிவஞானபுரம் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் அரிகரன் என்கிற அந்தோணி(22) ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களை உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் அந்தோணி மட்டும் சிவகாசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    3 பேர் உயிரிழந்த நிலையில் அந்தப்பகுதி முழுவதுமே பரபரப்பும் பதற்றமும் உருவானது. எத்தனை பேர் மது குடிக்க சென்றனர், எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் அய்யப்பனின் அண்ணன் முருகன்(27) தனது வீட்டில் சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார். இதனால் அவரும் நண்பர்களுடன் சென்று மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த ராஜாமுகமது(60), கருப்பையா(62), ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் சிவகுமார்(28), விசுவநத்தம் கணேசன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்த ராசையா மகன் கருப்பசாமி(33) ஆகியோரும் மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் கருப்பசாமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மூவருக்கும் சிவகாசியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இவர்கள் 4 பேரும் சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில்(எண்-11848) மது வாங்கி குடித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சிவகாசியில் 2 கடைகளில் மது வாங்கி குடித்திருப்போர் பாதிக்கப்பட்டிருப்பதால் காலாவதியான மது அங்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. அந்த இரு கடைகளும் உடனடியாக மூடப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் சிவகாசிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.  #tamilnews
    ×