என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார் குண்டு தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்22 May 2019 8:11 PM IST (Updated: 22 May 2019 8:11 PM IST)
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
மொகடிஷு:
சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
முன்னர் பழைய பாராளுமன்றம் இருந்த போந்தேரே மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் ஒரு பெண் ராணுவ அதிகாரி, அவரது பாதுகாவலர் உள்பட 12 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சோமாலியா ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
முன்னர் பழைய பாராளுமன்றம் இருந்த போந்தேரே மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் ஒரு பெண் ராணுவ அதிகாரி, அவரது பாதுகாவலர் உள்பட 12 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சோமாலியா ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X