என் மலர்tooltip icon

    இந்தியா

    அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

    • வயநாட்டை சேர்ந்த இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் திரும்பினார்.
    • தனிமையில் உள்ள அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.

    அபுதாபியில் இருந்து திரும்பிய 26 வயது இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து அதிகமானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அரபுநாடுகளில் அதிகமாக கேரளா மக்கள் பணி செய்து வருகின்றனர்.

    கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்த 26 வயது இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமையில் உள்ள அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணூரில் மற்றொருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நோயாளிகளும் பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×