என் மலர்
ஜார்கண்ட்
- சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் முதல் மந்திரியாக இருந்தார்.
- சம்பாய் சோரன் நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் அவர் முதல் மந்திரியாக இருந்தார்.
ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் ஜாமின் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல் மந்திரி பதவியில் இருந்து விலகினார். அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே, சம்பாய் சோரன் சமீபத்தில் டெல்லி சென்று பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்தித்தார். அப்போதே அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என தகவல் பரவியது.
சம்பாய் சோரன் நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பழங்குடியின தலைவருமான சம்பாய் சோரன், வரும் 30-ம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்ற எனது முடிவானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் நலன்களைச் சார்ந்தது. நான் போராட்டங்களுக்கு பழக்கப்பட்டு விட்டேன். விரைவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் விலகுவேன் என தெரிவித்தார்.
- லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது.
- அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ராஞ்சி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி நடந்து வருகிறது. இதில் லோக் ஜனசக்தி கட்சி தலைவரான சிராக் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிராக் பஸ்வான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அக்கட்சியின் தலைவராக இருப்பார்.
மேலும் அரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது பேசிய சிராக் பஸ்வான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். அது அரசாங்கத்திடம் சரியான எண்ணிக்கை இருப்பதை உறுதிசெய்யும். ஆனாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் பொதுவில் வருவதை விரும்பவில்லை. அது ஒரு விரிசலை உருவாக்கலாம் என தெரிவித்தார்.
பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து உருவானது லோக் ஜனசக்தி கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
- சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.
- 'ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள்'
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முக்கியத் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல் மந்திரியாகப் பதவி ஏற்றார். அவர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்தார்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வதந்திகள் பரவின. மேலும் சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது. ஆனால் தான் சொந்த வேலையாகவே டெல்லி வந்துள்ளதாகச் சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் அவரது எக்ஸ் பதிவில், கட்சித் தலைமை தன்னை அவமதித்து விட்டது.எனது பதவிக்காலத்தில் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்கமுடியுமா?தனது கட்சி தன்னை அவமதித்து விட்டதாகவும் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது, தனிக்கட்சி தொடங்குவது அல்லது வசதியான வேறு ஒரு துணையுடன் இணைந்து பயணிப்பது என அனைத்து சாய்ஸ்களும் என் முன் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் புது கட்சி தொடங்கும் முடிவை சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ஜார்கண்ட் திரும்பியுள்ள சம்பாய் சோரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,'என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இனி புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. நான் அரசியலிலிருந்து ஒருபோதும் விலகப் போவது இல்லை. என்னுடைய ஆதரவாளர்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடனான எனது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாக ஒன்றை [அரசியல் கட்சியை] நான் தொடங்க உள்ளேன்' என்று தெரிவித்தார்.
ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கட்சி தொடங்க நிறைய நேரம் இல்லையே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சம்பாய் சோரன், அது உங்களின் பிரச்சனை இல்லை, ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள், அப்படி இருக்கும்போது புதிதாக [கட்சி] தொடங்குவதில் எனக்கு என்ன பிரச்சனை.
ஒரே வாரத்துக்குள் ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதிய கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் நான் ஈடுபடுவேன். இந்த பயணத்தில் பயணத்தில் புதிய நண்பர்கள் கிடைத்தால் [கூட்டணி] அவர்களுடன் இணையவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- சிறுவனின் பெயர் அமித் சிங் என அடையாளம் காணப்பட்டார்.
- பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் சிங்பூமில் நேற்று வீட்டில் தனது படுக்கையில் சென்போனில் கேம் விளையாடியபடி, ரசகுல்லா (இனிப்பு) சாப்பிட்ட 17 வயது சிறுவன் இனிப்புதொண்டையில் அடைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வெளியான தகவல்களின்படி, சம்பவத்திற்குப் பிறகு சிறுவன் சில நிமிடங்களுக்கு மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். பிறகு, உயிர் இழந்துள்ளான். அந்த சிறுவனின் பெயர் அமித் சிங் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெளி ஊரில் வேலைசெய்துவிட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் மாமா ரசகுல்லா வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளான். அப்போது, ரசகுல்லா சிறுவனின் தொண்டையை அடைத்துள்ளது. அப்போது, சிறுவன் மூச்சுவிட சிரமப்படுவதைப் பார்த்த அமித் சிங்கின் மாமா ரஸ்குல்லாவை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை.
அதன்பிறகு, சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு மீட்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ரசகுல்லா சாப்பிட்டு உயிரிழந்த சிறுவனின் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.
- பிப்ரவரி 2-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்தார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல் மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்தார்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில், சம்பாய் சோரன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமை தன்னை அவமதித்து விட்டது.
எனது பதவிக்காலத்தில் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன்.
ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்கமுடியுமா?
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, தனிக்கட்சி தொடங்குவது அல்லது வசதியான வேறு ஒரு துணையுடன் இணைந்து பயணிப்பது என அனைத்து சாய்ஸ்களும் என் முன் உள்ளன.
நான் உள்ளிருந்து உடைந்தேன். என்ன செய்வதென புரியவில்லை. இரு நாட்கள் அமைதியாக உட்கார்ந்து சுயபரிசோதனை செய்து, முழு சம்பவத்திலும் என் தவறைத் தேடிக்கொண்டிருந்தேன்.
எனக்கு அதிகார பேராசை கொஞ்சம் கூட இல்லை. ஆனால் என் சுயமரியாதையை யாரிடம் காட்டுவது?
எனது சொந்த மக்கள் படும் வேதனையை நான் எங்கே வெளிப்படுத்த முடியும்? என பதிவிட்டுள்ளார்.
- அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.
- பிப்ரவரி 2-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்தார்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் வலுக்கட்டாயமாக முதல்வர் பதவியை ஜனவரி 31-ந்தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் ஜூன் 28-ந்தேதி ஹேமந்த் சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் ஜூலை 4-ந்தேதி ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பிப்ரவரி 2 முதல் ஜூலை 3-ந்தேதி வரை மட்டுமே சம்பாய் சோரன் முதல்வராக இருந்தார். தற்போது ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் நீர்வளத்துறை மந்திரியாக உள்ளார். கல்வி உள்ளிட்ட முக்கியமான துறைகள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் சம்பாய் சோரன் பாஜக-வில் இணையப்போவதாக வதந்திகள் பரவத்தொடங்கியது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சம்பாய் சோரன் பதில் அளித்து கூறியதாவது:-
என்ன வகையிலான வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. என்ன விதமான செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாதால் அது சரியா? தவறா? என என்னால் கூற இயலாது. எனக்கு அதுப்பற்றி ஏதும் தெரியாது. நான் இங்கே (ஹேமந்த் சோரன் கட்சி) மட்டுமே இருக்கிறேன்.
இவ்வாற சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
சம்பாய் சோரன் செய்த தவறு என்ன?- கேள்வி எழுப்பிய பாஜக
சம்பாய் சோரன் மிகப்பெரிய ஆளுமை. அவருடைய பணியால் ஜார்க்கண்ட்டின் 3.5 கோடி மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், முதல்வர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது. நல்ல நபர் முதல்வர் பதவியில் இருந்து விலக்கப்படுவது பின்னடைவாகும். அவர் செய்த தவறு என்ன? என பாஜக எம்.பி. தீபக் பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும், சம்பாய் சோரனை கட்சியில் சேர்ப்பது மத்திய தலைவர்களை சார்ந்தது என்றார்.
- மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இந்த தருணத்தை பாஜக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக ஹேமந்த் சோரன் பயன்படுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வராக இருந்த , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவர் ஹேமந்த் சோரன் கடத்த ஜனவரி 31-ந்தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இருப்பினும் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் கடந்த ஜூலை 3 அன்று வெளியில் வந்தார். அதனைதொடர்ந்து மீண்டும் அவர் ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று [ஆகஸ்ட் 10] ஹேமந்த் சோரன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தருணத்தை பாஜக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக ஹேமந்த் சோரன் பயன்படுத்தியுள்ளார்.
அதாவது, சிறையில் இருந்து வெளிவரும்போது, அதிகாரிகள் தனது கையில் குத்திய கைதி முத்திரையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஹேமந்த் சோரன், இது எனக்கு இடப்பட்ட முத்திரை மட்டுமல்ல, இது தற்போது நமது ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள சவால்களைக் குறிக்கும் முத்திரை என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரை அரசியல் ஆதாயங்களுக்காக பலரை தேர்தலின்போது திட்டமிட்டு சிறையில் அடைந்ததாகவும் இதற்கு ஜனநாயக அமைப்பின் அங்கங்களுக்கான அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றைத் தவறாக பயன்படுத்தியாகவும் ஆளும் மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஒருவர் அவருடைய சாதி பெயரை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி சாத்தியம்?.
- ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சாதி குறித்து கேட்ட முடியும். நாங்கள் அவருடைய சாதி குறித்து கேட்க முடியாது.
நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது பாஜக எம்.பி. சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசுகிறார்கள் என ராகுல் காந்தியை மறைமுக விமர்சனம் செய்தார். இதனால் ராகுல் காந்தியை இழிவுப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் ஒருவரை அவருடைய சாதியை பெயரை வெளிப்படுத்தும்படி கூற முடியாது எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அசாம் மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஒருவருடைய சாதியை வெளிப்படுத்தாமல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பார்முலாவை ராகுல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான பாஜக கட்சியின் இணை-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹிமாந்தா பிஸ்வா சர்மா இது தொடர்பாக கூறியதாவது:-
ஒருவருடைய சொந்த சாதியை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான பார்முலாவை நாங்கள் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இதற்கான பார்முலாவை தெரியப்படுத்தட்டும். அதன்பின் இது தொடர்பாக முடிவு செய்கிறோம்.
பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இது நாடு முழுவதும் நடத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது வேறு விசயம். ஆனால், ஒருவர் அவருடைய சாதி பெயரை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி சாத்தியம்?
ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சாதி குறித்து கேட்ட முடியும். நாங்கள் அவருடைய சாதி பற்றி கேள்வி கேட்க முடியாது.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
- ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜ.க.வும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததால் அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து, அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் நாளை பிற்பகல் 2 மணி வரை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சட்டசபையின் லாபியில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.
- 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது. இந்த ரெயிலானது இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் இந்த விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 6 நபர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சிக்கிய 80 சதவீத பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரெயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயிலின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 5 ரெயிலின் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரங்கள்
1 - 22861 ஹவுரா - தித்லாகார்க்- கண்டாபஞ்சி எக்ஸ்பிரஸ்
2- 08015/ 18019 கராக்பூர்- ஜார்கிராம்- தன்பந்த் எக்ஸ்பிரஸ்
3- 12021/ 12022 ஹவுரா- பர்பில் - ஜன் ஷடப்தி எக்ஸ்பிரஸ்
4 -18109 டாடாநகர் - இத்வாரி எக்ஸ்பிரஸ்
5- 18030 ஷலிமார் - LTT எக்ஸ்பிரஸ்
- ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.
- விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.
இந்த ரெயிலானது இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் இந்த விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 6 நபர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமுற்றவர்களை மீட்ட அதிகாரிகள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் ரெயிலின் பத்து பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
- நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.
- பா.ஜ.க. எம்.எல்.ஏவான ஜெய் பிரகாஷ் பாய் படேல் காங்கிரசில் இணைந்தார்.
ராஞ்சி:
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதல் மந்திரியாக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி 31-ம் தேதி நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.
இதனால் அவரது கட்சியின் சம்பாய் சோரன் முதல் மந்திரியாக பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை யில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இதற்கிடையே, ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பில் நடத்தப்பட்டது. நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததால், ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.வான லோபின் ஹெம்ப்ரோம் மற்றும் காங்கிரஸ் எம் எல் ஏவான ஜெய் பிரகாஷ் பாய் படேல் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஜெய் பிரகாஷ் பாய் படேல் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






