என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி- பாரதிய ஜனதா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • ஜார்க்கண்டில் பிரதமர் மோடி 7 தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி- பாரதிய ஜனதா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி வருகிற 4-ந்தேதி ஜார்க்கண்டில் பிரசாரம் செய்கிறார்.

    அந்த மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். ஜார்க்கண்டில் உள்ள தார்வா பகுதியில் ஆதரவு திரட்டுகிறார். ஜார்க்கண்டில் பிரதமர் மோடி 7 தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜார்க்கண்டில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • எம்.எஸ். டோனி தனது படத்தை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் கமிஷன் அவரை தேர்தலுக்கான தூதராக நியமனம் செய்துள்ளது. எம்.எஸ். டோனி சட்டமன்ற தேர்தலுக்கான தனது படத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணை அதிகாரி கே. ரவி குமார் தெரிவித்துள்ளார்.

    எம்.எஸ். டோனி அவரது படத்தை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளார். மற்ற விவரங்களுக்காக அவரை தொடர்பு கொண்டுள்ளோம். எம்.எஸ். டோனி வாக்களர்களை திரட்டும் (வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்) பணியில் ஈடுபடுவார்" எனத் தெரிவித்துள்ளார்.

    நவம்பர் 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந்தேதி 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது.
    • மனைவி கல்பனா சோரனும் காண்டே தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது.

    முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஹேமந்த் சோரன் பக்கம் இருந்த முக்கிய தலைவர் சம்பாய் சோரனை தங்கள் பக்கம் இழுத்து சீட் கொடுத்துள்ளது பாஜக. ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் வியூகங்களை வகுத்து வருகிறது.

    இந்நிலையில் ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதேசமயம் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் காண்டே தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இவர்களை உள்ளடக்கிய 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன
    • தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

    ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள பர்ஹைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் ஹேமந்த் சோரனின் சகோதரரான பசந்த் சோரன் தும்கா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

    • லோயிஸ் மராண்டி ஹேமந்த் சோரனை தோற்கடித்தவர் ஆவார்.
    • ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்தவர் கட்சி மாறிய நிலையில், தற்போது 3 இணைந்துள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் பா.ஜ.க.-வின் முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் பல தலைவர்கள் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இது பா.ஜ.க.-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    லோயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் டுடு ஆகிய மூன்று பா.ஜ.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை ஹேமந்த் சோரன் வரவேற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த கேதார் ஹஸ்ரா மற்றும் ஏ.ஜே.எஸ்.யு. கட்சி தலைவர் உமாகந்த் ரஜக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் கடந்த 18-ந்தேதி இணைந்த நிலையில் தற்போது இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.

    லோயிஸ் மராண்டி 2014 தேர்தலில் ஹேமந்த் சோரனை 5262 வாக்குகள் வித்தியாசத்தில் தும்கா தொகுதியில் தோற்கடித்தவர் ஆவார்.

    2019-ல் ஹேமந்த் சோரன் தும்கா தொகுதியில் 13,188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும், அந்த தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பர்ஹைத் தொகுதி எம்.எல்.ஏ.-வாக நீடித்தார். அவரது சகோதரர் பசந்த் சோரன் லோயிஸ் மராண்டியை 6842 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மராண்டி மாநில தலைவருக்கு, தன்னைப் போன்ற அர்ப்பணிப்பு தொண்டர்கள் புறக்கணிக்கப்பு மற்றும் கட்சியில் உள்ள பிரிவினைவாதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோட்டையான தும்காவில் 2014-ல் பா.ஜ.க. எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குணால் சாரங்கி ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க.-வின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விலகிய பின், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார்.

    லக்ஷ்மண் டுடு 2014-ல் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ராம்தாஸ் சோரனை கட்ஷிலா தொகுதியில் 6403 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    இவர்களுடன் செரைக்கேலா, கணேஷ் மஹ்லி, பாஸ்கோ பெஸ்ரா, பாரி முர்மு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர்.

    ஜார்க்கண்ட்ல் அடுத்த மாதம் 13-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. நவம்பர் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. நேற்று முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சுமார் 2.60 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

    • ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • முதல் கட்டமாக 66 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.

    தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவானது.

    மொத்தமுள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் இணைந்து 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல் கட்டமாக 66 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.

    மாநில தலைவர் பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியிலும், முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும், முன்னாள் முதல் மந்திரி மதுகோடா மனைவி கீதா கோடா ஜகன்நாத்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.

    தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவானது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டி என்ற விவரங்களை இந்தியா கூட்டணி வெளியிடவில்லை.

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

    • தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.

    இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் பாபுலால் மராண்டி, ஏ.ஜே.எஸ்.யூ. தலைவர் சுதேஷ் மஹடோ, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான், துணை பொறுப்பாளர் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன்படி, பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

    • வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் பொருத்தும் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
    • ராஞ்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஜனவரி 5-ந்தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிகிறது. நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் பொருத்தும் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பான பண மோசடி தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

    தலைநகர் ராஞ்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மணீஷ் ரஞ்சன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி மிதிலேஷ் குமார் தாகூரின் தனிப்பட்ட ஊழியர், சில அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

    • அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பால் பாஜக கலக்கத்தில் உள்ளது
    • மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை விமர்சித்து வந்த பாஜக தற்போது ரூட்டை மாற்றியுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.கடைசியாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றிய ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சியமைத்தது. 25 தொகுதிகளை பாஜகவும், 16 தொகுதிகளைக் காங்கிரசும் கைப்பற்றியிருந்தன.

    இந்நிலையில் நடந்து முடித்த பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காதது, தற்போது நடந்த அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வெளிவந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் உள்ளிட்டவற்றால் பாஜக கலக்கத்தில் உள்ளது.

    முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கியத் தலைவர் சம்பாய் சோரனை தங்கள் பக்கம் இழுத்தும் வெற்றி கிடைக்குமா என்பதில் சந்தேகத்துடன் உள்ள பாஜக வர உள்ள தேர்தலுக்கு இலவசங்களை அள்ளி வீசி வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை விமர்சித்து வந்த பாஜக தற்போது தங்கள் கொள்கையையும் தளர்த்தி ரூட்டை மாற்றியுள்ளது.

    ஜார்கண்ட்டில் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே பாஜக முந்திக்கொண்டு வெளியிட்ட இலவச அறிவிப்பு வாக்குறுதிகள் கீழ்வருமாறு,

    ➼18 வயதுக்கு மேலான மகளிருக்கு மாதம் ரூ. 2100 வழங்கும் திட்டம்

    ➼1 சிலிண்டர் ரூ.500 க்கு வழங்கப்படும்

    ➼பண்டிகை காலங்களில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர்கள்

    ➼5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

    ➼போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை

    ➼வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம்

    உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது.

    • அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கினார்.
    • முன்னதாக டோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சென்னை பயணம் செய்தார்.

    இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம்.

    இந்த நிலையில், எம்.எஸ். டோனியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர் ஒருவர் டெல்லியில் இருந்து 1200 கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்து ராஞ்சி வந்தடைந்தார். ராஞ்சியில் உள்ள எம்.எஸ். டோனியின் வீட்டு வாசலில் கூடாரம் அமைத்து தங்கிய ரசிகர், டோனினை சந்திக்காமல் வீடு திரும்புவதில்லை என்ற கணக்கில் அங்கேயே தங்க ஆரம்பித்தார்.

    டெல்லியை சேர்ந்த கௌரவ் குமார், தனது சைக்கிள் பயணம் மற்றும் எம்.எஸ். டோனியை பார்க்கும் ஆசை மற்றும் அதற்கான முயற்சி உள்ளிட்ட தகதவல்களை தனது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அதன் மூலம் டோனிக்கு எப்படியும் தகவல் கிடைத்து, அவரை பார்க்க முடியும் என்று அவர் கணக்கிட்டு இருந்தார்.

    கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை எம்.எஸ். டோனியை சந்திக்க அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கிய நிலையில் கௌரவ் குமார் ஒருவழியாக எம்.எஸ். டோனியை சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "நான் டெல்லியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து டோனியை சந்திக்க திட்டமிட்டேன், ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லி வந்துவிட்டேன்."

    "தற்போது டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு பயணம் செய்தேன். அங்கு 5-6 நாட்கள் காத்திருந்த பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்ககு. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் அடுத்த பயணத்தை துவங்க தயாராகி இருக்கிறேன்," என பேசியுள்ளார்.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் மீண்டும் ஒருமுறை பங்கெடுக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது.
    • திட்டங்கள் பழங்குடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும் என்றார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதிக்கு பிரதமர் இன்று வருகை தந்திருந்நதார். அங்கு, ரூ.83,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 15-ந்தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்நிைலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் மீண்டும் ஒருமுறை பங்கெடுக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜாம்ஷெட்பூரில் பல நூறு கோடிகள் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தேன்.

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்டில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்கள் ஜார்க்கண்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் பழங்குடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×