என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஜார்கண்ட்
- நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம்.
- மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தில் சம்பாய் சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பான தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது சம்பாய் சோரன் "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்தது. பொய் வழக்குகளில் ஹேமந்த் சோரனை சிக்க வைக்க பா.ஜனதா விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. என்னுடைய அரசு ஹேமந்த் சோரனின் நிர்வாகத்தில் 2-ம் பகுதி ஆகும்" என்றார்.
ஹேமந்த் சோரன் பேசும்போது "நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும். மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.
நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31 இந்திய வரலாற்றில் கருப்பு நாள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுகிறேன். இதை பா.ஜனதாவுக்கு சவலாக விடுகிறேன்" என்றார்.
- நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக ஜார்கண்ட் சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர்.
- அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த சோரன் வாக்களிக்க வந்தபோது முழக்கமிட்டனர்.
ஜார்கண்ட மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை கைதால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். இன்று அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.
இதற்காக இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உரையுடன் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சட்டசபைக்கு வந்தார். சட்டசபைக்குள் வந்ததும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் ஹேமந்த் சோரன் ஜிந்தாபாத் என முழங்கினர்.
- ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததால், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
- குதிரை பேரம் நடக்காமல் இருக்க ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தெலுங்கான அழைத்துச் செல்லப்பட்டனர்.
அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன்படி ஜார்கண்ட் சட்டமன்றத்தில் சம்பாய் சோரன் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றனர். பா.ஜனதா குதிரை பேரம் பேசிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டைச் செய்தனர். இன்று காலை அவர்கள் ஜார்கண்ட் அழைத்து வரப்பட்டனர். அழைத்து வரப்பட்ட அவர்கள் நேராக சட்டமன்றம் சென்று வாக்கெடுப்பில் பங்கேற்க வைக்கப்படுவார்கள்.
81 இடங்களை கொண்ட ஜார்கண்டில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. ஜார்கண்ட் மோர்ச்சா கூட்டணிக்கு 47 இடங்கள் உள்ளது. இதில் 43 எம்.எல்.ஏ.க்கள் சம்பாய் சோரனுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க உள்ளனர்.
ஜார்கண்டில் பா.ஜனதாவுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் அமைப்பிற்கு 3 எம்.எல்.ஏ.-க்களும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர்.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ஜார்கண்டில் நடைபெற்று வருகிறது.
- இன்று அனைத்து பொதுத்துறை உருக்கு ஆலைகளையும் மோடி அரசு விற்கிறது என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
ராஞ்சி:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். யாத்திரை தற்போது
ஜார்கண்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் இன்று 22-வது நாள். நாம் தன்பாத்தில் இருக்கிறோம். விரைவில் பொகாரோவுக்குப் போகிறோம்.
கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் பொகாரோவுக்கு வர வேண்டும்.
இன்று அனைத்து பொதுத்துறை உருக்கு ஆலைகளையும் மோடி அரசு விற்கிறது.
81 இடங்கள் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. ஹேமந்த் சோரனுக்கு கூட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது அமலாக்கத் துறையின் சதி. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை இந்திய கூட்டணி உறுப்பினர்களுக்கு எதிராக மோடி அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. அவை சுதந்திரமான நிறுவனங்கள் அல்ல என தெரிவித்தார்.
- அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே பிரதமர் மோடி தான் அவரது மூலதனம்.
- மோடி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கோட்டாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் தொடர்புடைய மசோதாவை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே பிரதமர் மோடி தான் அவரது மூலதனம் என்பதை மக்கள் ஒரு நொடியில் புரிந்து கொள்வார்கள்.
பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாடு முழுவதும் வெறுப்பை பரப்பி வருகிறது என குற்றம் சாட்டினார்.
- கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
- இதையடுத்து, சம்பாய் சோரன் முதல் மந்திரியாக நேற்று பதவி ஏற்றுள்ளார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திவருகிறது.
பதவி ஏற்றுக்கொண்ட சம்பாய் சோரன் 10 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இதனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தமுடியாத வகையில், அவர்கள் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திங்கட்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி கோர்ட் அனுமதி
அளித்து உத்தரவிட்டுள்ளது.
- அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
- சம்பாய் சோரன் ஆட்சியமைக்க உரிமைக்கோரி, முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
பதவி ஏற்றுக் கொண்ட சம்பாய் சோரன், 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.
10 நாட்கள் இருப்பதால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்களிடம் குதிரை பேரம் நடத்த முடியாத வகையில், அவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் மெஜாரிட்டியை நிரூபிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
2022-ல் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் 48 உறுப்பினர்கள் ஆதரவை பெற்றிருந்தார். ஊழல் குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற மிரட்டல் இருந்த நிலையில், மெஜாரிட்டியை நிரூபித்தார்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு 46 எம்.எல்.ஏ.க்கள் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 28, காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் 1, சிபிஐ (எம்எல்) விடுதலை 1) உள்ளனர்.
- ஜேஎம்எம் கட்சியின் சட்டசபை தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
- சம்பாய் சோர்ன் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, தனக்கு 43 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், அதற்கான ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அத்துடன் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரினார்.
அதனைத் தொடர்ந்து நேற்றிரவு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் 10 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ஜார்கண்டில் இன்று நுழைந்தது. இந்த யாத்திரையில் முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சம்பாய் சோரன் பங்கேற்றுப் பேசினார்.
#WATCH | Jharkhand Chief Minister Champai Soren participates in Congress' Bharat Jodo Nyay Yatra in Pakur. The yatra entered Jharkhand today. pic.twitter.com/d4F4J9wDKf
— ANI (@ANI) February 2, 2024
- காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி.
- சிறையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டம்.
நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.
நேற்று அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சோரணை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஹேமந்த் சோரணை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், ஹேமந்த் சோரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து அவரிடம் சிறையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற ஜேஎம்எம் கட்சியின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
- 43-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தனக்கு 43 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
அத்துடன் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமைக் கோரினார். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
#WATCH | JMM vice president Champai Soren takes oath as the Chief Minister of Jharkhand, at the Raj Bhavan in Ranchi.This comes two days after Hemant Soren's resignation as the CM and his arrest by the ED. pic.twitter.com/WEECELBegr
— ANI (@ANI) February 2, 2024
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சம்பாய் சோர்ன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இன்னும் 10 நாட்களுக்குள் சம்பாய் சோரன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
- சம்பாய் சோரன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஏற்கனவே ஆளுநரிடம் வழங்கிவிட்டார்.
- பதவி ஏற்ற 10 நாட்களில் பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சம்பாய் சோரன் ஆளுநரிடம் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு உள்ளது. அதனால் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமைக் கோரினார்.
ஆனால் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் சம்பாய் சோரனை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உளளார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்கும்போது, அவருடன் பலர் மந்திரிகளாக பதவி ஏற்கலாம் எனத்தெரிகிறது.
இது தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலளார் கூறுகையில் "பதவி ஏற்க சம்பாய் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தேதி தெரிவிக்க வேண்டும்" என்றார்.
பதவி ஏற்ற நாளில் இருந்து 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர் தெரிவித்துள்ளார்.
- அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
- சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
ராஞ்சி:
ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சம்பாய் சோரன் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களையும் அளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்