ஆன்லைன் மீட்டிங்கை ஹேக் செய்து ஆபாசப் படம் ஓட்டினார்கள் - சாம் பிட்ரோடா புகாருக்கு மத்திய அரசு பதில்

இதுதான் ஜனநாயகமா, இது நியாயமா?" என்று பேசியிருந்தார்.நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) பிம்பத்தை கெடுக்கும் முயற்சி என்று சாட்டியுள்ளது.
ஆன்லைன் மீட்டிங்கை ஹேக் செய்து ஆபாசப் படம் ஓட்டினார்கள் - சாம் பிட்ரோடா புகாருக்கு மத்திய அரசு பதில்
Published on

ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா. தான் ஐஐடி ராஞ்சி மாணவர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் இருந்தபோது ஹேக்கிங் மூலம் யாரோ ஆபாசப் படத்தை ஒளிபரப்பினர் என்ற குற்றச்சாட்டை சாம் பிட்ரோடா முன்வைத்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "பிப்ரவரி 22 அன்று, 'இந்தக் கொந்தளிப்பான காலங்களில் காந்தியின் பொருத்தம்' என்ற தலைப்பில் (ஜார்கண்ட் மாநிலம்) ராஞ்சி IIT- யை சேர்ந்த பல நூறு மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

யாரோ ஒருவர் ஹேக் செய்து ஆபாசப் படங்களை காட்டத் தொடங்கினார். இதனால் மீட்டிங் பாதியில் நின்றது. இதுதான் ஜனநாயகமா, இது நியாயமா?" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. ராஞ்சியில் ஐஐடி இல்லை, எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

ராஞ்சியில் ஒரு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) உள்ளது. ஆனால் சாம் பிட்ரோடாவை எந்த மாநாட்டு-கருத்தரங்கிற்கும் நேரில் அல்லது ஆன்லைன் விரிவுரை வழங்க அழைக்கவில்லை என்பதையும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) பிம்பத்தை கெடுக்க முயன்ற ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர் சாம் பிட்ரோடா அதற்கு பொறுப்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com