என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple visit"

    • ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலில் டோனி பிரார்த்தனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஐபிஎல் தொடங்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்தியாவில் வரும் மார்ச் 22-ம் தேதி 17-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடபடவில்லை. இருந்தாலும் ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி பேட்டிங் மட்டுமல்லாமல் உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு டோனி சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். டோனி ஒரு குழந்தையை கொஞ்சியது அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது.

    • ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலில் எம்.எஸ்.டோனி பிரார்த்தனை செய்தார்.
    • எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

    ராஞ்சி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.டோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்

    கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன்மூலம் எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

    ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி பேட்டிங் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு எம்.எஸ்.டோனி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    ×