என் மலர்
டெல்லி
- பா.ஜ.க. எம்.பி.க்களில் 3-ல் ஒருவருக்கு மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- 398 பா.ஜ.க. வேட்பாளர்களில் 66 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். பா.ஜ.க. மட்டும் 370 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது அவரது விருப்பமாகும்.
இதற்காக அவர் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக வேட்பாளர் தேர்வில் பிரதமர் மோடி இந்த தடவை அதிக கவனம் செலுத்தி உள்ளார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அவர் கடந்த 5 ஆண்டுகளாக கண்காணித்தும் ஆய்வு செய்தும் வந்தார். சரியாக செயல்படாத எம்.பி.க்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மாட்டாது என்று பல தடவை எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இது தொடர்பாக ஒரு பட்டியலும் தயாரித்து இருந்தார். வேட்பாளர் தேர்வின்போது சரியாக செயல்படாத தற்போதைய எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தார். இதன் காரணமாக தற்போதைய பா.ஜ.க. எம்.பி.க்களில் 3-ல் ஒருவருக்கு மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி இதுவரை 5 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை 111 வேட்பாளர்கள் கொண்ட 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மத்திய மந்திரி வி.கே.சிங் உள்பட 23 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இதுவரை 5 கட்டங்களாக பா.ஜ.க. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 398 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இடங்களில் ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த சுமார் 100 பேருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அதிரடி அறிவுரையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னமும் ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்காளம், பஞ்சாப் மாநிலங்களுக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. உத்தரபிரதேசத்திலும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. பாரதிய ஜனதா மத்திய தேர்தல் குழு இன்று இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.
எனவே மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் கல்தா கொடுக்கப்படும் பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களில் அதிகளவு பெண்களும், புதுமுகங்களும் இடம் பிடித்துள்ளனர்.
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 398 பா.ஜ.க. வேட்பாளர்களில் 66 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். பாரதிய ஜனதா கட்சி இதுவரை இவ்வளவு பெண்களை தேர்தலில் களம் இறக்கியது இல்லை.
2009-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. போட்டியிட்ட 433 இடங்களில் 45 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்று இருந்தனர். 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.போட்டியிட்ட 428 இடங்களில் பெண்களுக்கு 38 இடங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 436 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 55 பேர் பெண்கள். ஆனால் தற்போது இதுவரை 66 பெண்கள் தேர்தலில் போட்டியிட தேர்வாகி உள்ளனர்.
பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் இன்னமும் வர வேண்டி உள்ளது. அதிலும் பெண்கள் இடம் பெறும் பட்சத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிக பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த கட்சி என்ற சிறப்பை பாரதிய ஜனதா கட்சி பெறும்.
- அமலாக்கத்துறை அதிகாரிகளால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு.
- அவரை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடி வீட்டிடை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சில தினங்களுக்கு கைது செய்தது. அவரை காவலில் வைத்து விசாரிக்க ஒரு வாரம் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது கைது கண்டித்து பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எந்தவிதமான போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் நடத்தினால் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
வருகிற 31-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முற்றுகை போராட்டம் பேரணியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பா.ஜனதா பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இருந்து டெல்லி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
- டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி அறிவிப்பு.
- தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
அந்த வகையில், "நாட்டில் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி இன்று ஊடக பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளில் தங்கள் சுயவிவரப் படத்தை மாற்றுவார்கள்.
சுயவிவரப் படத்தில், "மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்" என்ற தலைப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்று உள்ளது.
நாட்டிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய ஒரே தலைவர் கெஜ்ரிவால் மட்டுமே. எனவே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
கலால் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய போதிலும் "ஒரு பைசா" ஆதாரத்தை கூட சமர்ப்பிக்க முடியவில்லை.
பாஜகவும் மோடியும் கெஜ்ரிவாலை நசுக்க விரும்புகின்றனர். ஆம் ஆத்மி, நாட்டில் "சர்வாதிகாரத்திற்கு" எதிரான போரை நடத்தி வருகிறது.
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது கெஜ்ரிவாலின் போராட்டம் மட்டுமல்ல, கட்சியின் சமூக ஊடக டிபி பிரச்சாரத்தில் சேரவும் மக்களை அவர் வலியுறுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
- சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி தனது காரை தென்கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்த புரியில் இருக்கும் பழுது பார்க்கும் மையத்தில் சோதனைக்காக கொடுத்திருந்தார்.
அந்த காரை அவரது டிரைவர் ஜோகிந்தர் திரும்ப பெற்று வந்தார். அந்த சமயத்தில் அந்த கார் திருட்டு போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த கார் குருகிராம் நகரை நோக்கி சென்றதாக சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த காரை மீட்டு தருமாறு நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
- பா.ஜனதா நேற்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் நவீன் ஜிண்டால் பெயர் இடம் பெற்றிருந்தது.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் உடனடியாக பா.ஜனதா வாய்ப்பு வழங்கியுள்ளது.
2024 மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராமாயணம் டி.வி. தொடரில் ராமர் வேடத்தில் நடித்துள்ள அருண் கோவில் (Arun Govil), தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் பல வருடங்களாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார். பா.ஜனதாவில் இணைந்துள்ள நிலையில் அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நவீன் ஜிண்டாலுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "உங்களுக்கு ராட்சத அளவிலான வாஷிங் மெஷின் தேவைப்படும்போது, இது (ஜிண்டால் பாஜக-வில் இணைந்தது) நிகழத்தான் செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்கு ஒரு பங்களிப்பை கூட வழங்காத நிலையில், நான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் எனச் சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில், ஜிண்டால் மத்திய புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்டு வந்தார். இது தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை பா.ஜனதா தனது கட்சியில் இணைத்துக் கொள்ளும்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து வாய் திறப்பதில்லை என அடிக்கடி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
நவீன் ஜிண்டால் இரண்டு முறை குருஷேத்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- நிலவின் தென் துருவத்தின் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
- விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வில் ஈடுபட்டது.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆராய்சி கழகத்தின் (இஸ்ரோ) சார்பில் நிலவை ஆராய்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி சதீஷ்த வான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
சுமார் 1 மாதத்திற்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்ட இடத்தை சென்றடைந்தது.
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. மேலும் விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வில் ஈடுபட்டது.
இந்த திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தின் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிரதமர் மோடி இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியதை குறிக்கும் வகையில் ஆகஸ்டு 23-ந் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு 'சிவசக்தி' என்று பிரதமர் மோடி பெயர் சூட்டினார். சிவம் மனித குல நன்மைகளுக்கான தீர்வை கொண்டு இருக்கிறது. சக்தி அந்த தீர்வுகளை செயல் படுத்துவதற்குரிய ஆற்றலை வழங்குகிறது. இதன் காரணமாக சிவசக்தி என பெயரிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி சூட்டிய சிவசக்தி பெயருக்கு சர்வேதேச விண்வெளி யூனியனின் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு அங்கீகாரம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அந்த இடம் இனி சிவசக்தி என்றே விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் அடையாளப்படுத்தப்படும். இது இந்தியாவிற்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்று கருதப்படுகிறது.
- ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் சார்பில் போட்டியிட்ட தனஞ்ஜெய் 2598 வாக்குகள் பெற்றார்.
- ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்றார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த இடதுசாரி குழு, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ABVP) ஆகிய இரண்டு அணிகள் போட்டியிட்ட ஒருங்கிணைந்த இடதுசாரி குழு ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் (AISA) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த அணி சார்பில் தனஞ்ஜெய் போட்டியிட்டார். ஏபிவிபி சார்பில் உமேஷ் சி அஜ்மீரா போட்டியிட்டார்.
இதில் தனஞ்ஜெயா 2598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தனஞ்ஜெயா பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1996-97-ல் பட்டி லால் பைர்வா என்பவர் மாணவர்கள் சங்கம் தேர்தல் வெற்றி பெற்றிருந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தார். அதன்பின் சுமார் 27 வருடங்கள் கழித்து தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஜேஎன்யு மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற தனஞ்ஜெய் கூறுகையில் "இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் வெறுப்பு அரசியல், வன்முறையை நிராகரித்துள்ளனர். மாணவர்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் மாணவர்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.
- 111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
- வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
இதில், இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இன்று பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்கொள்கிறார்.
ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் போட்டியிடுகிறார்.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராம ராவின் மகளும், அம்மாநில பாஜக தலைவருமான புரந்தேஷ்வரி, ஆந்திராவின் ராஜாமுந்திரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
- மக்கள் இன்று முதலே பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்த தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலத்தை சேர்ந்த மக்கள் இன்று முதலே வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது
- மோடி அரசு சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது
டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து 'இந்தியா' கூட்டணி சார்பில் மார்ச் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய அரசின் அடக்குமுறையை கண்டித்தும், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்' என்ற கருப்பொருளில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன
டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. அவரை மார்ச் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது அவர் அமலாக்கத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளார்
இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியும், அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் போராட்டம் நடத்துவதற்காக இந்தியா கூட்டணித் தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
அதில், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு சமமான வாய்ப்புகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை அடக்க மோடி அரசு இடைவிடாமல் சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
- டெல்லியில் 2 கோடி மக்களின் குடும்ப உறுப்பினராக அவர் தன்னை கருதுகிறார்.
- அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
தான் சிறையில் இருந்தபடியே ஆட்சி நடத்துவேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். அதன்படி இன்று அவர் சிறையில் இருந்தவாறு தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.
இந்த உத்தரவு நீர்த்துறை தொடர்பானதாகும். அந்த துறை மந்திரியான அதிஷிக்கு குறிப்பு மூலம் இந்த உத்தரவை அனுப்பினார்.
இதுகுறித்து மந்திரி அதிஷி நிருபர்களிடம் கூறும்போது, "எனக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதம் மற்றும் வழிகாட்டுதலை அனுப்பியுள்ளார். அதை படித்ததும் எனக்கு கண்ணீர் வந்தது. டெல்லி மக்களின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனைகளை தீர்க்க உத்தரவிட்டிருந்தார்.
அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியின் சில பகுதிகளில் தண்ணீர் விநியோகம் மற்றும் சாக்கடை பிரச்சனைகளை எதிர்கொள்வதை நான் அறிந்தேன். இதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். நான் சிறையில் இருப்பதால் மக்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்கக்கூடாது. கோடை காலம் வந்து விட்டது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளில் போதுமான டேங்கர்களை வழங்கவும். மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு வழிகாட்டுங்கள். மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால் லெப்டினன்ட் கவர்னரின் உதவியை நாடவும். அவர் நிச்சயம் உங்களுக்கு உதவுவார் என்று கூறியுள்ளார்.
சிறையில் இருக்கும் அவர் மக்கள் பிரச்சனைகளை நினைத்துக் கொண்டிருக்கிறார். டெல்லியில் 2 கோடி மக்களின் குடும்ப உறுப்பினராக அவர் தன்னை கருதுகிறார்.
அவரை சிறையில் அடைக்கலாம். ஆனால் டெல்லி மக்கள் மீதான அவரது அன்பையும், கடமை உணர்வையும் நீங்கள் (பா.ஜனதா) சிறையில் அடைக்க முடியாது என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் இன்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது.
டெல்லியில் உள்ள ஷாக்திபூங்காவில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அங்கு ஆம்ஆத்மி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பூங்காவிற்கு செல்லும் சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதே போல் மத்திய டெல்லியில் சில பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஐ.டி.ஐ. புட்ஓவர் பாலம் அருகே ஆம்ஆத்மி கட்சியினர் சிலர் பெரிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே இன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
- 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.
- படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது குறித்து மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.பி.எஸ்.) மற்றும் டாடா இன்ஸ்டியூடிட் சோசியல் சைன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின.
இதில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 10 மடங்கு அதிகமாக வீட்டு வேலைகளை செய்வது தெரிய வந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டு வேலைகளுக்கு 98 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள்.
அவர்களுடன் ஒப்பிடுகையில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.
இதன் மூலம் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்திய பெண்கள் ஊதியம் இல்லா வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பில் ஆண்களை விட 10 மடங்கு அதிகமாக வேலை செய்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெண்கள் ஆண்களை விட 3 மடங்கு அதிக நேரத்தை வீட்டு மற்றும் பராமரிப்பு வேலைகளில் செலவிடுகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 10 மடங்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று குடும்பம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வயது குழந்தைகளின் இருப்பு, ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் நேரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் வாழும் பெண்கள் சராசரியாக, பல தலைமுறை குடும்பங்களில் வசிப்பவர்களை விட அதிக ஊதியம் பெறாத வேலைகளை கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.






