என் மலர்tooltip icon

    பீகார்

    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டனர்.
    • வீடியோ ரீல்சுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.

    பொதுவாக ரெயில்களுக்குள் பைக்குகள், சுழற்சி வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பைக்குகளை விதிமுறைகளை பின்பற்றி பார்சல் மூலம் தொலை தூரங்களுக்கு அனுப்ப முடியும். இந்நிலையில் ஓடும் ரெயிலுக்குள் பயணிகள் அமர்ந்திருக்கும் பெட்டியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பீகாரின் சக்தி என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வாலிபர் பைக்கில் அமர்ந்து கொண்டு ஓட்டுவது போல காட்சிகள் உள்ளது. அதனை ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்த சம்பவம் பாட்னாவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டனர். இந்த வீடியோ ரீல்சுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.



    • சாதி கணக்கெடுப்பில் இரண்டு மாதிரிகள் உள்ளன.
    • ஒன்று பா.ஜ.க. மாதிரி, இன்னொன்று தெலுங்கானா மாதிரி.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டம் ராஜ்கிரில் அரசியல் சட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:

    ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதியின் பூமியாக பீகார் இருந்தது. இன்று இந்தியாவின் குற்ற தலைநகராக மாறிவிட்டது.

    மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஒருபோதும் உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தாது. அவர்கள் உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தும் நாளில், அவர்களின் அரசியலும் முடிவுக்கு வரும்.

    சாதி கணக்கெடுப்பில் இரண்டு மாதிரிகள் உள்ளன. ஒன்று பா.ஜ.க. மாதிரி, இன்னொன்று தெலுங்கானா மாதிரி. பா.ஜ.க. மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளைத் தீர்மானிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில் ஓபிசி, தலித் அல்லது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் இல்லை.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு சாதி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் எங்கு ஆட்சி அமைத்தாலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். அது பீகாரில் இருந்து தொடங்கும் என தெரிவித்தார்.

    • இரவு 11 மணியளவில் டிஜே சத்தமாக இசைக்கத் தொடங்கியது.
    • ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சை அளிப்பது போல் நடித்தனர்.

    பக்கத்து வீட்டு திருமண விருந்தில் இருந்து சத்தமாக டிஜே இசை கேட்டதால் இதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    பீகார் மாநிலம் ரஷித்பூராவை சேர்ந்தவர் பிங்கி. பிங்கியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பக்கத்து வீட்டில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. அங்கு இரவு 11 மணியளவில் டிஜே சத்தமாக இசைக்கத் தொடங்கியது. அப்போது பிங்கி மயங்கி விழுந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சிறுமி உயிரிழந்ததற்கு இதுவே காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மருத்துவமனை முன் கோஷங்களை எழுப்பினர். போலீசார் வந்து அவர்களை அமைதிப்படுத்தினர். இதன்பின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    ரிக்ஷா ஓட்டுநரான பிங்கியின் தந்தை, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சை அளிப்பது போல் நடித்து, பின்னர் ஏதோ கதையை உருவாக்கினர் என்று கண்ணீருடன் கூறினார்.

    • பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதையடுத்து, அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜன சுராஜ் கட்சி தலைவரான பிரசாந்த் கிஷோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி பீகாருக்கு வருகிறார், அது நல்ல விஷயம். அவர் இன்னும் வர வேண்டும்.

    ஆனால் காங்கிரஸ் தலைவரும் தெலுங்கானா முதல் மந்திரியுமான ரேவந்த் ரெட்டி, கூலி வேலை செய்வது பீகாரிகளின் டி.என்.ஏ.வில் உள்ளது என்று கேமராவில் கூறியதாக நான் பல மாதங்களாக அவரிடம் சொல்லி வருகிறேன்.

    ராகுல் காந்தி முதலில் தனது அன்புக்குரிய முதல் மந்திரியின் வார்த்தைகளுடன் உடன்படுகிறாரா இல்லையா என்பதைச் சொல்ல வேண்டும்.

    பீகாரிகள் கூலி வேலை செய்யப் பிறந்தவர்கள் என்றால் அவர்கள் ஏன் பீகாருக்கு வாக்கு கேட்க வருகிறார்கள்?

    தெலுங்கானாவில் அரசியல் செய்துவிட்டு அங்கிருந்து வாக்கு கேட்கிறார்கள்.

    நிதிஷ்குமார் உடல் ரீதியாக, மன ரீதியாக ஆரோக்கியமாக இல்லை. நான் ஏதாவது தவறு சொன்னால் அவர் எனக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும், எல்லாம் வெளியே வரும் என தெரிவித்தார்.

    • பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவடையவும் இல்லை, நிறுத்தப்படவும் இல்லை.
    • பயங்கரவாதம் பாம்பை போன்றது. மீண்டும் துலை தூக்கினால் நசுக்கப்படும்.

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் சென்றிருந்தார். கராகட் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    பஹல்காம் தாக்குதலில் நம்முடைய சகோதரிகள், அவர்களுடைய கணவர்களை இழந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு மதுபானி மாவட்டத்திற்கு வந்திருந்தேன். குற்றவாளிகள் தக்க தண்டனை பெறுவார்கள். அவர்கள் நினைத்து பார்க்க முடியாத வகையில் தண்டனை இருக்கும் என வாக்குறுதி அளித்திருந்தேன். நான் தெரிவித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர், இன்று மீண்டும் பீகார் வந்துள்ளேன்.

    இந்தியப் பெண்கள் அணியும் சிந்தூரின் (குங்குமம்) சக்தியை பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் கண்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். ஆனால் அவர்களை மண்டியிட வைத்தோம்.

    பாகிஸ்தானின் விமானப்படை தளங்களையும், அவர்களின் ராணுவ அமைப்புகளையும் அழித்தோம். இது புதிய இந்தியா (நயா பாரதம்), அதன் சக்தி அனைவரும் காணக்கூடியதாக உள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறு பொறிதான். அவற்றிற்கு எதிரான போர் முடிவடையவும் இல்லை. நிறுத்தப்படவும் இல்லை. பயங்கரவாதம் பாம்பை போன்றது. மீண்டும் துலை தூக்கினால் புற்றில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு, நசுக்கப்படும்.

    .இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி சாதனைப் படைத்தார்.
    • தொடக்க வீரராக களம் இறங்கி பயமின்றி அதிரடியாக விளையாடியது அனைவரையும் ஈர்த்தது.

    ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்திருந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனைப் படைத்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பீகார் சென்றிருந்த பிரதமர் மோடி, சூர்யவன்ஷி சந்தித்தது தொடர்பான படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி "பாட்னா விமான நிலையத்தில், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விளம்பரப்படுத்த வலியுறுத்தினார்.
    • நீங்கள் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்

    பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வர உள்ளது. இதில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கும் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது.

    இந்நிலையில் பீகார் விஜயம் செய்துள்ள பிரதமர் மோடி பாஜக தலைவர்களுடன் கூட்டத்தில் பங்கேற்றார்.

    அப்போது, "தேர்தல் நெருங்கும்போது, சிலர் வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டு, தேர்தலுக்குப் பிறகு திரும்பிவிடுவார்கள். இது கட்சியில் உங்கள் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது" என்று பிரதமர் மோடி பாஜக தலைவர்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும், "ஒரு கட்சியில் பொறுமை என்பது மிகப்பெரிய சொத்து. உங்களிடம் பொறுமை இருந்தால், நீங்கள் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்" என்று அவர் கூறினார்.

    வரவிற்கும் தேர்தலில், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விளம்பரப்படுத்தவும், அடிமட்டத் ஊழியர்கள் அளவில் கட்சியை வலுப்படுத்தவும் வலியுறுத்தினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    மகா கூட்டணியுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பிறகு, கடந்த ஆண்டு ஜனவரியில் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் ஒன்பதாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். அடிக்கடி கூட்டணி தாவுவதாக அவர் மீது விமர்சனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • 2019ஆம் ஆண்டு ஒருவரை தாக்கி பணம் பறித்ததாக வழக்கு.
    • 2 ஆண்டு சிறைத்தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மிஷ்ரி லால் யாதவ்.

    மிஷ்ரி லால் யாதவ், தனது உதவியாளருடன் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து பணம் பறித்ததாக பக்கத்து வீட்டுக்காரர் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றம் பாஜக எம்.எல்.ஏ. மிஷ்ரி லால் யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபாரத தொகையை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    2 வருட தண்டனை தொடர்பாக எம்.எல்.ஏ. மிஷ்ரி லால் யாதவ் கூறுகையில் "நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு அளிக்கிறேன். ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்ற உத்தரவு தொடர்பாக அறிக்கை கிடைத்த பின்னர் தகுதி நீக்கத்திற்கான பணி தொடங்கப்படும் என பீகார் சட்டமன்ற செயலாளர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது.
    • பொறுப்பற்ற அணுகுமுறை ஆகியவை எங்கள் குடும்ப விழுமியங்களுடன் ஒத்துப்போகவில்லை.

    பீகாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.

    கட்சி விரோத நடவடிக்கைகள், பொறுப்பற்ற நடத்தை மற்றும் குடும்ப விழுமியங்களுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

    இதுதொடர்பாக லாலு பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக விழுமியங்களைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது.

    மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற அணுகுமுறை ஆகியவை எங்கள் குடும்ப விழுமியங்களுடன் ஒத்துப்போகவில்லை.

    எனவே, அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்குகிறேன். இனிமேல், அவருக்கு கட்சியிலோ அல்லது குடும்பத்திலோ எந்தப் பங்கும் இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

    தேஜ் பிரதாப் யாதவ், அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு புகைப்படத்தில், அனுஷ்கா தேஜ் பிரதாப்புக்காக கர்வா சௌத் சடங்கு செய்வதைக் காண முடிந்தது.  

    இருவரும் கடந்த 12 வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாகவும், சமீபத்தில் தங்கள் உறவை பகிரங்கப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரச்சனை என்னவென்றால் 37 வயதான தேஜ் பிரதாப் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஐஸ்வர்யா ராய் என்ற மனைவி உள்ளார். 

    இந்த நிலையில்தான் தேஜ் பிரதாப் இந்த விஷயத்தில் எடுத்த நடவடிக்கையால் லாலு பிரசாத் யாதவ் அதிர்ச்சியடைந்ததாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

    • காலை 5 மணிக்கு தகராறில் ஏற்பட்டு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.
    • ஐந்து பேர் மீது குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில், 3 பேர் உயிரிழப்பு.

    பீகார் மாநிலத்தில் அற்ப காரணத்திற்காக ஏற்பட்ட தகராறு, துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. இதில் 3 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    பக்சர் மாவட்டம் அஹியாபூர் கிராமத்தில் இன்று காலை 5 மணிக்கு இரு பிரிவினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. தகராறு அதிகரிக்க இரு பிரிவினரும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அப்போது ஐந்து பேர் குண்டு பாய்ந்து சரிந்து கிடந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 3 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயத்துடன் இரண்டு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. காலை 5 மணிக்கு இரு பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    • பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி முகாம்களை அழித்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில் "பஹல்காம் படுகொலை மூலம் பாகிஸ்தான் மோதலைத் தொடங்கியது. இது நம்முடைய நாகரீக வரலாற்றின் மிகவும் கொடூரமாக தாக்குதல் சம்பவமாகும்.

    இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை இன்னும் அதிகமாக அடித்து நொறுக்கியிருக்க வேண்டும்.

    பாராளுமன்ற பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க பிரதிநிதி குழுகள் சென்றுள்ளது, அரசு செலவில் பிரதிநிதிகள் சந்தோசமாக பொழுதை கழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்றார்.

    • நான் 10 முதல் மந்திரிகளை உருவாக்க முயற்சி செய்துள்ளேன்.
    • என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பைச் செய்கிறேன்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

    ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் தீவிரமாக உள்ளன. இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் மக்களைச் சந்தித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

    சிலர் நான் முதல் மந்திரியாக வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் என்னை அறிய மாட்டீர்கள். நான் 10 முதல் மந்திரிகளை உருவாக்க முயற்சித்தேன். இன்று நான் முதல் மந்திரியாக வேண்டும் என்பதற்காக அல்ல, என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பைச் செய்கிறேன்.

    எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக பீகாருக்கு வரும்போது பீகார் வளர்ச்சி அடைந்ததாக நான் கருதுவேன் என தெரிவித்தார்.

    ×