பக்கத்து வீட்டில் சத்தமாக DJ இசை.. 15 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்

இரவு 11 மணியளவில் டிஜே சத்தமாக இசைக்கத் தொடங்கியது.ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சை அளிப்பது போல் நடித்தனர்.
பக்கத்து வீட்டில் சத்தமாக DJ இசை.. 15 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்
Published on

பக்கத்து வீட்டு திருமண விருந்தில் இருந்து சத்தமாக டிஜே இசை கேட்டதால் இதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் ரஷித்பூராவை சேர்ந்தவர் பிங்கி. பிங்கியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பக்கத்து வீட்டில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. அங்கு இரவு 11 மணியளவில் டிஜே சத்தமாக இசைக்கத் தொடங்கியது. அப்போது பிங்கி மயங்கி விழுந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சிறுமி உயிரிழந்ததற்கு இதுவே காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மருத்துவமனை முன் கோஷங்களை எழுப்பினர். போலீசார் வந்து அவர்களை அமைதிப்படுத்தினர். இதன்பின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ரிக்ஷா ஓட்டுநரான பிங்கியின் தந்தை, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சை அளிப்பது போல் நடித்து, பின்னர் ஏதோ கதையை உருவாக்கினர் என்று கண்ணீருடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com