என் மலர்
ஆந்திர பிரதேசம்
- ராஜினாமா கடிதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக தகவல்.
- ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு.
ஆந்திர மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 4ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அண்மையில் கட்சியில் இணைந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆந்திர காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லு ரவி பேகம் பஜார் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் 2 பிரிவுகளில் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திரமாநில துணை முதல் மந்திரியாக இருப்பவர் நாராயணசாமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறு பேசியதாக ஆந்திர காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லு ரவி பேகம் பஜார் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஓஎஸ் ராஜசேகர் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தார். அவர் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.
அவரது இறப்பிற்கு சோனியா காந்தியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தான் காரணம் என அவதூறாக பேசி இருக்கிறார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளில் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி மலை புனிதமாக கருதப்படுவதால் மலைக்கு பீடி சிகரெட் மது மாமிசம் மற்றும் டிரோன் கேமராக்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியானாவை சேர்ந்த தினேஷ் என்ற ராணுவ வீரர் தனது மனைவியுடன் நேற்று திருப்பதி மலைக்கு வந்தார். அவர் கொண்டு வந்த டிரோன் கேமரா மூலம் மலைப் பகுதியை படம் பிடித்தார்.

விஜிலென்ஸ் அதிகாரிகள் வந்து ராணுவ வீரரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மலைப்பகுதியை படம் பிடிக்க தடை உள்ளது தெரியாமல் டிரோன் கேமரா மூலம் படம் பிடித்ததாக தெரிவித்தார்.

அவரை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
- சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.
- ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு அடுத்த வீரவல்லியை சேர்ந்தவர் புள்ளையா. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆட்டுக்கிடா குட்டிகளை விலைக்கு வாங்கி வந்தார். அவற்றுக்கு ராம், லட்சுமண் என பெயரிட்டார்.
சிறிய பாரத்தை இழுக்க ஆட்டுக்கிடாய்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் ஆட்டுக்கிடாய்களுக்கு ஏற்றவாறு பிரத்தியோகமாக வண்டி ஒன்றை தயார் செய்தார்.
அதன் மூலம் வயலில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறி, நெல் மற்றும் புல்லைக் கொண்டு வர பயன்படுத்தினார்.
மேலும் ஆட்டுக்கிடாய்களை வைத்து ஏர் ஓட்டி வருகிறார். உள்ளூர் கிராம மக்களுக்கு நகர்புறங்களில் இருந்து சிமெண்ட் மூட்டைகள், சிமெண்ட் பைப்புகள் வண்டியை ஏற்று வந்து பணம் சம்பாதித்து வருகிறார். சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.
ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார். மாட்டு வண்டிக்கு ஒன்றும் குறைவில்லாமல் விவசாய வேலைகளில் அயராது உழைத்து வருமானம் ஈட்டி தரும் எந்த ஆட்டுக்கிடாய்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
- பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்
- ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.
அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது தெரியவந்தது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததற்காக அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார்.
- ஆளும் கட்சியில் இணைந்த ராயுடு, ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அமராவதி:
கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது.
குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு மறுக்கப்பட்டதால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆளும் கட்சியில் இருந்து விலகிய சில தினங்களுக்கு ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை அம்பதி ராயுடு திடீரென சந்தித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், ஒய்.எஸ்.ஆர். கட்சியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற தனது கனவை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக யாரையும் குறைசொல்ல மாட்டேன். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும், என்னுடைய சிந்தாந்தமும் ஒத்துப் போகவில்லை.
எந்த தொகுதியிலும் போட்டியிட விருப்பமில்லை. இதனால் அரசியலில் இருந்து விலக முடிவு செய்தேன். பவன் கல்யாண் கொள்கைகளைப் புரிந்துகொள்ள அவரது நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவரை சந்தித்தேன். பவன் கல்யாண் உடன் நிறைய நேரம் பேசினேன். அப்போது தனது வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றி என்னுடன் விவாதித்தார்.
அவரது கொள்கையும், பார்வையும் என்னுடையது போலவே இருப்பதாக சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கிரிக்கெட் கடமைகளுக்காக துபாய்க்கு புறப்படுகிறேன். நான் எப்போதும் ஆந்திர மக்களுக்காக துணை நிற்பேன் என பதிவிட்டுள்ளார்.
அம்பதி ராயுடு விரைவில் ஜனசேனா கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
- வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.
இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-
வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.
சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
- வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.
திருப்பதி:
திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. வார விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து இருந்தனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் மற்றும் முதியோருடன் வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்து சிரமம் அடைந்தனர்.
மேலும் குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.
திருப்பதியில் நேற்று 76,058 பேர் தரிசனம் செய்தனர். 22, 543 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டை மிகவும் பிரபலம்
- சேவல் சண்டை சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் கை மாறுகிறது
2024ல் நாடு முழுவதும் ஜனவரி 14, 15 மற்றும் 16 தேதிகளில் "மகா சங்கராந்தி" எனப்படும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை என விமரிசையாக கொண்டாடப்படும் இக்காலகட்டத்தில் காளைகளை இளைஞர்கள் பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும்.
இதே போல் ஆந்திர பிரதேச குண்டூர், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களின் பல பகுதிகளில் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம்.
இதற்கென பல கிராமங்களில் பலர் தங்கள் சேவல்களை சண்டை சேவல்களாக பழக்கப்படுத்தி வைக்கின்றனர். இப்போட்டிகளில் சண்டையிடும் சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக போட்டியிடும் போது ஒரு சேவல் இறப்பதும், உயிருடன் இருக்கும் சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.
வெற்றி பெறும் சேவல் மீது பணம் கட்டும் சூதாட்டமும் நடைபெறும். கோடிக்கணக்கான பணம் இந்த சூதாட்டத்தில் கைமாறுகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சேவல்கள் "ரனிகெட்" (Ranikhet) எனும் நோயால் பாதிக்கப்பட்டு வருவது சேவல் வளர்ப்பவர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.
போட்டிக்கு சில நாட்களே உள்ளதால், நோயுற்ற சேவல்களுக்கு சக்தி ஊட்டும் விதமாக ஆண்மை குறைவு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் "வயாகரா" மாத்திரைகளை தங்கள் சேவல்களுக்கு கொடுக்க வளர்ப்பாளர்கள் துவங்கியுள்ளனர்.
மேலும் சிலர், இத்துடன் பல வைட்டமின் மாத்திரைகளையும், வேறு சிலர் ஆயுர்வேத ஆண்மை குறைவு மருந்தான "சிலாஜித்" போன்றவற்றையும் சேவல்களுக்கு வழங்குகின்றனர்.
ஆனால், இப்பழக்கம் சில காலம் சேவல்களுக்கு உற்சாகத்தை அளித்து, நீண்ட நாட்களுக்கு பிறகு சேவல்களை முடக்கி விடும் என கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அவர்கள் அறிவுரையை புறக்கணிக்கும் சேவல் வளர்ப்பாளர்கள், "பல வருடங்களாக சண்டை சேவல்களை வளர்க்க பெருமளவு செலவு செய்துள்ளோம். ஆனால், தற்போது அவை நோயினால் சக்தி குறைந்து காணப்படுகின்றன. எனவே அவற்றிற்கு தெம்பூட்ட இந்த மாற்று வழியை கையாளுகிறோம். சண்டைக்காகத்தான் இம்மருந்துகளை கொடுக்கிறோம். இதுவரை சேவல்களை ஆய்வு செய்ததில் பரிசோதனை முடிவுகள் ஊக்கம் அளிப்பதாகவே உள்ளன" என சேவல்களை வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.
- ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் ‘தண்ணீரமுது’ உற்சவம் நடந்தது.
- நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. ஆகாசகங்கை தீர்த்தத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாள் `ஆத்யாயன உற்சவம்' கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்கியது.
அதையொட்டி தினமும் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்துக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து ஜீயர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.
உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. இந்தத் தண்ணீரமுது உற்சவம் நடப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ராமானுஜரின் தாய் மாமனான பெரிய திருமலைநம்பி ஆவார்.
இவர், திருப்பதி ஏழுமலையானுக்கு செய்த சேவையின் நினைவாக ஆண்டுதோறும் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில், `தண்ணீரமுது' உற்சவம் நடத்தப்படுகிறது.
முன்னதாக நேற்று முன்தினம் மாலை கோவிலில் நடந்த சஹஸ்ர தீபலங்காரச் சேவைக்குப் பின், உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பெரிய திருமலைநம்பி வம்சத்தினர் கோவில் பிரகாரத்தில் ஒரு குடத்தில் பிடித்த 'ஆகாச கங்கை' தீர்த்தத்தை தலையின் மேல் வைத்து மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க வாகன மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர்.
அங்கிருந்து பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள், ஆச்சாரியார்கள், பிரபந்த பண்டிதர்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட தீர்த்த குடத்தை கோவிலுக்குக் கொண்டு சென்றனர்.
வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க கோவில் அர்ச்சகர்கள் மூலவர் ஏழுமலையானுக்கு குடத்தில் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கை புனிதத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர். உற்சவத்தில் பங்கேற்றவர்கள் பெரிய திருமலைநம்பி எழுதிய 'திருமொழி பாசுரங்களை' பாராயணம் செய்தனர். உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆத்யாயன உற்சவம் முடிந்ததும் மறுநாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள பெரிய திருமலைநம்பி சன்னதிக்கு எழுந்தருளினர்.
- அம்பதி ராயுடு கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.
- கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமராவதி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு. 2019-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். சீசனுடன் அவர் ஓய்வுபெற்றார்.
ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவுடனேயே அம்பதிராயுடு ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைய உள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால் அவர் கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.
இந்தநிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அம்பதி ராயுடு கூறியுள்ளார்.
- அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்காக முதல்கட்டமாக ரூ.268 கோடி செலவில் பணிகள் நடைபெற்றன.
- அம்பேத்கரின் சிலைக்கு முன்புறம், பின்புறம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் 125 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு முன்புறம், பின்புறம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆந்திர மாநில சமூக நலத்துறை மந்திரி மெருகு நாகார்ஜுனா கூறுகையில்:-
அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்காக முதல்கட்டமாக ரூ.268 கோடி செலவில் பணிகள் நடைபெற்றன.
2-வது கட்டமாக ரூ.106 கோடியில் அம்பேத்கர் சிலைக்கு வண்ணம் தீட்டுதல் அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்த சிலை வருகிற 19-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






