என் மலர்
ஆந்திர பிரதேசம்
- பக்தர்கள் காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன.
- ரூ. 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு நெருங்குவதையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதாலும் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன. தரிசன டோக்கன் இல்லாமல் நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ரூ.300 விரைவு தரிசனத்தில் 4 மணிநேரத்திலும், இலவச நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நேற்று 66,715 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24,503 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருப்பதிக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து செய்து வருகின்றனர்.
- டிக்கெட்டுகள் வழங்க 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி ஜனவரி 10-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.
ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த 10 நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை செயல் அதிகாரி ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு உண்டான 1.20 லட்சம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் ஜனவரி 9-ந்தேதி காலை 5 மணிமுதல் தொடர்ந்து வழங்கப்படும்.
3 நாட்களுக்கான டோக்கன்கள் முடிந்த பின்னர், அந்தந்த நாட்களுக்கு டோக்கன்கள் முந்தைய நாள் வழங்கப்படும்.
இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுண்டர்களும், திருமலையில் 4 கவுன்டர்களும் என மொத்தம் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண் பித்து டோக்கன் பெற வேண்டும். இந்தமுறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத் துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 73,301 பேர் சாமி தரிசனம் செய்தனர்.26,242 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது.
- செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக 'ஸ்பேடக்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
இதனை ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.
இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். குறிப்பாக ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 29-ந்தேதி இருக்க வாய்ப்பு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
'சேசர்' (எஸ்.டி.எக்ஸ்-01) மற்றும் 'டார்கெட்' (எஸ்.டி.எக்ஸ்-02) என்ற இரண்டு செயற்கைகோள்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிடுவதற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் இந்த ராக்கெட் ஏவுவதை பார்வையிட விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறித்த விவரங்களை https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- மாணவிக்கு விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரி மதுசூதனன், கலெக்டர் நாகலட்சுமிக்கு தெரிவித்தார்.
- விடுதியில் உள்ள மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாக விடுதி வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்ஷி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் குண்டூரில் உள்ள சமூக நலத்துறை அரசு மாணவியர் விடுதியில் தங்கி இருந்து பார்மசி கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியாக விடுதியின் மாடிக்கு சென்ற மாணவிக்கு சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனைக் கண்ட விடுதி வார்டன் மற்றும் சக மாணவிகள் குழந்தை பெற்ற மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவிக்கு விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரி மதுசூதனன், கலெக்டர் நாகலட்சுமிக்கு தெரிவித்தார். விடுதியில் உள்ள மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாக விடுதி வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார். அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது உறவினர் ஒருவரிடம் கடந்த 7 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததால் கர்ப்பமானதாகவும், கர்ப்பம் அடைந்தது வெளியே தெரியாமல் இருப்பதற்காக இறுகிய ஆடைகளை அணிந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற்று தராமல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கி உள்ளார்.
- பக்தர்கள் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
திருப்பதி:
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சில பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி வந்தனர்.
அவ்வாறு வந்த பக்தர்களில் ஹரிபாபு, ஜெகதீஸ் ஆகிய இருவரை போலீஸ்காரர் சந்திரசேகர் என்பவர் அணுகி, வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்காக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்க அவருக்கு எம்.எல்.ஏ பரிந்துரை கடிதம் பெற வேண்டும் என ரூ.20 ஆயிரமும், மற்றொரு பக்தருக்கு 6 டிக்கெட்கள் பெற எம்.எல்.சி.யின் பரிந்துரை கடிதம் பெற வேண்டும் என ரூ.50 ஆயிரத்தை சந்திரசேகர் பெற்று கொண்டார்.
ஆனால் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற்று தராமல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், விஜிலென்ஸ் அதிகாரிகள் போலீஸ்காரர் சந்திரசேகரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பக்தர்கள் சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது.
- 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியை சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்கு வந்தனர்.
ஏழுமலையானை தரிசித்து விட்டு நேற்று இரவு வேனில் வீடு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். மடக சிரா, புல்ல சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டு இருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டு இருந்தது. பக்தர்கள் சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது.
இதில் வேனில் இருந்த 4 பக்தர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக இந்துபுரம் மற்றும் பெங்களூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டப்பட்டு வரும் தனது வீட்டிற்கு மின்சாதனப் பொருட்களுக்காக எதிர்பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி.
- காவல்துறைக்கு தகவல் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் பெண் ஒருவரின் வீட்டிற்கு மனித உடல் பாகங்கள் கொண்ட பார்சல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பார்சலுடன் ரூ.1.3 கோடி கேட்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாகி துளசி. இவர் க்ஷத்ரிய சேவா சமிதியின் கட்டுமானத்தில் உள்ள தனது வீட்டிற்குப் மின்சாரப் பொருட்கள் பார்சலில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
முன்னதாக அவர், க்ஷத்ரிய சேவா சமிதி அமைப்பிடம் நிதி உதவி கோரியுள்ளார். அப்போது அவருக்கு டைல்ஸ் ஓடுகள் வழங்கப்பட்டன. அதேபோல் இம்முறையும் மின் விளக்கு, மின் விசிறி போன்ற மின்சாதன பொருட்களுக்காக துளசி காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், துளசியின் வீட்டிற்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. அதில் மின்சாரப் பொருட்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் துளசி பார்சலை திறந்துள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் மின்சாரப் பொருட்களுக்குப் பதிலாக மனித உடல் பாகங்கள் இருந்தது.
மேலும், அந்த பார்சலில் ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. அதில், பணத்தை வழங்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பார்சல் சம்பவம் துளசியையும் அவரது குடும்பத்தினரையும் பீதியில் ஆழ்த்தியது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் பார்சலை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பார்சலில் இருந்த மனித உடல் பாகங்கள் சுமார் 45 வயதுடைய நபருடையது எனவும், ஐந்து நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனவும் யூகிக்கப்பட்டது . பிறகு, சம்பந்தப்பட்ட உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேற்கு கோதாவரி எஸ்பி அட்னான் நயீம் ஆஸ்மி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். காணாமல் போன நபர்களின் புகார்கள் மூலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், க்ஷத்ரிய சேவா சமிதியின் பிரதிநிதிகளையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மது மற்றும் மணல் மாபியா கும்பல் ஊழலில் ஈடுபட்டு வருகிறது.
- தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட சந்திரபாபு நாயுடு நிறைவேற்றவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தாடி பள்ளியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மது மற்றும் மணல் மாபியா கும்பல் ஊழலில் ஈடுபட்டு வருகிறது.
ஊழலுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். உங்களுக்கு ஆதரவாக எப்போதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். ஆந்திர மக்கள் ஜெகன்மோகன் ரெட்டி தயிர் சாதம் போடுவார் என்றும் சந்திரபாபு நாயுடு பிரியாணி போடுவார் என்றும் நம்பி வாக்கு அளித்தனர். தற்போது அது இரண்டுமே இல்லாமல் போய்விட்டது.
தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட சந்திரபாபு நாயுடு நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சியில் இருந்த திட்டங்கள் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு சந்திர முகியாக மாறிவிட்டார். முதல் மந்திரி, முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை மற்றவர்கள் உடமைகளை தங்களது உடமைகளாக பாவிக்கின்றனர்.
மக்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிற்கு சாதகமாக மாற வேண்டும் என்றால் பொது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பலவிதமான சாகசங்களை செய்து யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.
- விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், காட்கேசர், பாலா நகரை சேர்ந்தவர் பானு சந்தர் ரெட்டி. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பல்வேறு விதமான சாகசங்களை செய்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பானு சந்தர் ரெட்டி பரபரப்பாக காணப்படும் ஓ.ஆர்.ஆர் ரிங் ரோட்டுக்கு வந்தார்.
தான் கட்டு கட்டாக கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளை மேலே வீசினார். ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்து சாலையில் சிதறியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் நடந்து சென்ற பொது மக்கள் காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பொதுமக்கள் வாகனங்களுக்கு இடை இடையே புகுந்ததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை எடுப்பதை பானு சந்திர ரெட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
பதிவு செய்த வீடியோவை தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைக் கண்ட போலீசார் பானு சந்தர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- இளம்பெண் தெலுங்கானா ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.
- ஓரினச்சேர்க்கை ஜோடி ஒன்றாக வாழ கோர்ட்டு அனுமதி வழங்கியது.
திருப்பதி:
விஜயவாடாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கும் ஓரினச்சேர்க்கை ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் 27 வயது இளம் பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இளம்பெண்ணை அவருடைய ஜோடியிடம் இருந்து பிரித்து வீட்டில் தனியாக அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த 25 வயது இளம்பெண் தெலுங்கானா ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.
தனது 27 வயது துணையை அவரது தந்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு பெண்ணின் தந்தைக்கு ஐகோர்ட்டு முன்னதாக நோட்டீஸ் அனுப்பியது. அந்த பெண்ணை தங்கள் முன் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 2 பெண்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர், அவர்கள் ஒன்றாக வாழ விரும்புவதை மீண்டும் வலியுறுத்தினர்.
ஓரினச்சேர்க்கை ஜோடி ஒன்றாக வாழ கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவர்களின் வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று பெற்றோருக்கு உத்தரவிட்டது.
இரு பெண்களும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்தின்படி வாழ சுதந்திரம் உள்ளது. தேவைப்பட்டால் தம்பதியருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம்.
- 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வைகுண்ட ஏகாதசி துவாரகா தரிசனம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நேற்று அன்னமய்யா பவனில் முதன்மை செயல் அலுவலர் சியாமலா ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. நேரடி இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசி 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பதியில் 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்கல், பொங்கல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார்.
துவாதசி நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3 பேரும் சமாதானமாகாததால், தனது அண்ணனையும், தம்பியையும் கிருஷ்ண வேணி கொலை செய்ய திட்டமிட்டார்.
- கிருஷ்ணவேணி, கடந்த டிசம்பர் 10-ந்தேதி கோபிகிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார்.
திருமலை:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் நகரிகல்லு யானாடி காலனியை சேர்ந்தவர் பவுலிராஜூ. இவர் அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கோபிகிருஷ்ணா, பொல்லப்பள்ளி மண்டலம், பந்தலமோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். மகள் கிருஷ்ணவேணி, இளைய மகன் துர்காராம கிருஷ்ணா ஆகியோரும் திருமணம் முடிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், பவுலி ராஜூன் 2 மகன் மற்றும் ஒரு மகள் ஆகிய மூவரும் தங்களது துணையுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர்களை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பவுலிராஜூ உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததால் பிள்ளைகள் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பவுலிராஜூ அரசு ஆசிரியர் என்பதாலும், அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய செட்டில்மெண்ட் பணம் யாருக்கு என 3 பேர் இடையே வாக்குவாதம் நடந்தது.
3 பேரும் சமாதானமாகாததால், தனது அண்ணனையும், தம்பியையும் கிருஷ்ண வேணி கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி கிருஷ்ணவேணி, கடந்த டிசம்பர் 10-ந்தேதி கோபிகிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார். அதன்பின்னர் தனது துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் அவரது தம்பியை நவம்பர் 26-ந்தேதி அன்று அங்குள்ள ஆற்று கால்வாள்ளி தள்ளி கொன்றார். இருவரது உடல்களும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இந்த கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணவேனி தனி ஆளாக கொலை செய்திருக்க முடியாது என்பதால் அவருடன் பழகி வந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






