என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறித்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறித்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் குழந்தைகள் கண்டிப்பாக நூறு சதவிகிதம் பெற்று, பெற்றோரை போலவே மாறுகின்றனர். பெற்றோர்கள் நல்லவர்களானால், குழந்தையும் நல்லவர்களாக வளர்வர்; பெற்றோரே கேடு கெட்டவர்களானால், குழந்தையும் அப்படியே வளரும். நீங்கள் பெற்று எடுத்த குழந்தை நல்லவராவதும் கெட்டவராவதும் உங்கள் கையில்!
உணவு நீங்கள் எப்படி உண்ணுகிறீர்களோ அதே போல் தான் குழந்தையும் உண்ணும். நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை குழந்தையும் சுவை பார்க்க ஆசைப்படும்; நீங்கள் வெறுத்து ஒதுக்கும் உணவுகளை உங்கள் முகபாவனையை பார்த்தே குழந்தையும் ஒதுக்கிவிடும். நீங்கள் உணவினை சிந்தி சாப்பிட்டால், குழந்தையும் அதையே செய்யும்; அது தவறு என்று குழந்தை உணரவே வெகுகாலம் ஆகலாம்.
குடும்பமாக அனைவரும் அமர்ந்த பின், அனைவரும் சேர்ந்து சாப்பிடுதல், உணவுகளை வீணாக்காத பண்பு, உணவிற்கு தரும் மரியாதை போன்ற முக்கிய விஷயங்களை குழந்தைகள் முதன் முதலாக பெற்றோரிடம் இருந்து கற்கின்றனர்; கற்றதையே அப்படியே சரியா தவறா என்று அறியாமலேயே தன் வாழ்க்கை முழுவதும் பின்பற்றுகின்றனர்.

நீங்கள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற செயல்கள், உங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே அவற்றை செய்ய வைக்கும்; குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது இயற்கையான ஆர்வம் உருவாகும். நீங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் குழந்தையும் அதை பின்பற்றும்; நீங்கள் நன்கு தின்று கொண்டு தீனிப்பண்டாரமாக உண்டு கொளுத்து இருந்தால், குழந்தையும் அதையே தன் வாழ்வில் பின்பற்றும்.
உங்கள் நட்பு வட்டம் எப்படிப்பட்டது, எப்படி அவர்களுடன் பழகுகிறீர்கள், அவர்கள் முன்னிலையில் எப்படி பேசுகிறீர், அவர்கள் பின்னால் எப்படி பேசுகிறீர் போன்ற அத்தனை விஷயங்களையும் குழந்தைகள் வெகு ஜாக்கிரதையாக கவனிப்பர்; அதையே தன் பழக்க வழக்கமாக மேற்கொள்வர். நீங்கள் புறம் பேசினால் குழந்தையும் புறம் பேசும்; நீங்கள் நல்ல நண்பனாக இருந்தால், குழந்தையிடமும் அந்த பண்பு காணப்படும்.
நீங்கள் எந்த நேரத்தில் உறங்குகிறீர், எப்பொழுது விழிக்கிறீர், எந்த நேரத்தில் என்ன செயல்களை செய்கிறீர், உங்கள் உழைப்பினை எப்படி மதிக்கிறீர், வேலைக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு, நேரத்திற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு போன்ற விஷயங்களை உங்கள் ஒவ்வொரு செயலின் மூலம் குழந்தைகள் கவனித்து கற்றுக்கொண்டு அதையே தாங்கள் வளர்ந்த பின் தங்களது பழக்க வழக்கமாக மேற்கொள்கின்றனர்.
நீங்கள் எந்த அளவு உங்கள் வீட்டை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்கிறீர், உங்கள் உடலின் சுத்தம் போன்ற விஷயங்களை குழந்தைகள் கவனித்து கண்டிப்பாக அதே போன்று செய்ய முயற்சிப்பர். மேலும் நீங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்யும் உதவி, மற்றவர்களுக்கு செய்யும் உதவி போன்ற விஷயங்களை பார்த்து உணர்ந்து அதையே தன் வாழ்க்கையிலும் மேற்கொள்வர்.
பணம் என்று நீங்கள் அலைந்தால், உங்களுக்கு பிறந்த பிள்ளை உங்களை விட பலமடங்கு பணத்தின் பின் அலையும்; இப்படி அலைய வேண்டும் என்பதை அது பெற்றோரான உங்களை பார்த்து தான் கற்றுக் கொள்கிறது. பணத்தை மிச்சப்படுத்த உங்கள் பெற்றோரை நீங்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால், நாளை உங்கள் பிள்ளையும் அதே பணம் எனும் காரணத்திற்காக உங்களையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப பெருமளவு வாய்ப்பு இருக்கிறது.
உணவு நீங்கள் எப்படி உண்ணுகிறீர்களோ அதே போல் தான் குழந்தையும் உண்ணும். நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை குழந்தையும் சுவை பார்க்க ஆசைப்படும்; நீங்கள் வெறுத்து ஒதுக்கும் உணவுகளை உங்கள் முகபாவனையை பார்த்தே குழந்தையும் ஒதுக்கிவிடும். நீங்கள் உணவினை சிந்தி சாப்பிட்டால், குழந்தையும் அதையே செய்யும்; அது தவறு என்று குழந்தை உணரவே வெகுகாலம் ஆகலாம்.
குடும்பமாக அனைவரும் அமர்ந்த பின், அனைவரும் சேர்ந்து சாப்பிடுதல், உணவுகளை வீணாக்காத பண்பு, உணவிற்கு தரும் மரியாதை போன்ற முக்கிய விஷயங்களை குழந்தைகள் முதன் முதலாக பெற்றோரிடம் இருந்து கற்கின்றனர்; கற்றதையே அப்படியே சரியா தவறா என்று அறியாமலேயே தன் வாழ்க்கை முழுவதும் பின்பற்றுகின்றனர்.
நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்தால் உங்கள் குழந்தையும் உங்களோடு சேர்ந்து செய்ய ஆரம்பித்துவிடும்; அதுவே நீங்கள் மதியம் வரை உறங்குபவராக, சோம்பேறியாக இருந்தால் உங்கள் குழந்தையும் கண்டிப்பாக வாழ்வில் பெரும் சோம்பேறியாக திகழ்வான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டு வேலைகளை நீங்கள் செய்வது, வீட்டில் உள்ளோரின் வேலைகளில் பங்கு கொண்டு, வேலைகளை பகிர்ந்து செய்வது போன்ற விஷயங்களை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து உள்வாங்கிக் கொள்கின்றனர்.

நீங்கள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற செயல்கள், உங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே அவற்றை செய்ய வைக்கும்; குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது இயற்கையான ஆர்வம் உருவாகும். நீங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் குழந்தையும் அதை பின்பற்றும்; நீங்கள் நன்கு தின்று கொண்டு தீனிப்பண்டாரமாக உண்டு கொளுத்து இருந்தால், குழந்தையும் அதையே தன் வாழ்வில் பின்பற்றும்.
உங்கள் நட்பு வட்டம் எப்படிப்பட்டது, எப்படி அவர்களுடன் பழகுகிறீர்கள், அவர்கள் முன்னிலையில் எப்படி பேசுகிறீர், அவர்கள் பின்னால் எப்படி பேசுகிறீர் போன்ற அத்தனை விஷயங்களையும் குழந்தைகள் வெகு ஜாக்கிரதையாக கவனிப்பர்; அதையே தன் பழக்க வழக்கமாக மேற்கொள்வர். நீங்கள் புறம் பேசினால் குழந்தையும் புறம் பேசும்; நீங்கள் நல்ல நண்பனாக இருந்தால், குழந்தையிடமும் அந்த பண்பு காணப்படும்.
நீங்கள் எந்த நேரத்தில் உறங்குகிறீர், எப்பொழுது விழிக்கிறீர், எந்த நேரத்தில் என்ன செயல்களை செய்கிறீர், உங்கள் உழைப்பினை எப்படி மதிக்கிறீர், வேலைக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு, நேரத்திற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு போன்ற விஷயங்களை உங்கள் ஒவ்வொரு செயலின் மூலம் குழந்தைகள் கவனித்து கற்றுக்கொண்டு அதையே தாங்கள் வளர்ந்த பின் தங்களது பழக்க வழக்கமாக மேற்கொள்கின்றனர்.
நீங்கள் எந்த அளவு உங்கள் வீட்டை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்கிறீர், உங்கள் உடலின் சுத்தம் போன்ற விஷயங்களை குழந்தைகள் கவனித்து கண்டிப்பாக அதே போன்று செய்ய முயற்சிப்பர். மேலும் நீங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்யும் உதவி, மற்றவர்களுக்கு செய்யும் உதவி போன்ற விஷயங்களை பார்த்து உணர்ந்து அதையே தன் வாழ்க்கையிலும் மேற்கொள்வர்.
பணம் என்று நீங்கள் அலைந்தால், உங்களுக்கு பிறந்த பிள்ளை உங்களை விட பலமடங்கு பணத்தின் பின் அலையும்; இப்படி அலைய வேண்டும் என்பதை அது பெற்றோரான உங்களை பார்த்து தான் கற்றுக் கொள்கிறது. பணத்தை மிச்சப்படுத்த உங்கள் பெற்றோரை நீங்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால், நாளை உங்கள் பிள்ளையும் அதே பணம் எனும் காரணத்திற்காக உங்களையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப பெருமளவு வாய்ப்பு இருக்கிறது.
அலுவலகம் செல்லும் பெண்கள் ஆடை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும்.
அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.
சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேண்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம்.

பொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது.
சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.
உடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.
சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற சட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கருப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…
சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேண்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம்.
அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும். புடவையென்றால் நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.

பொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது.
சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.
உடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.
சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற சட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கருப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…
தினமும் பச்சைப்பயறை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பச்சைப் பயறு புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 3,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயறை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு, முதல் நாள் இரவே ஊறவிடவும்.
மறுநாள் நீரை நன்கு வடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஆவியில் வேகவிடவும்.
ஆறிய பின் உதிர்த்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து… வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் வேக வைத்து உதிர்த்த பயறு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சூப்பரான பச்சைப் பயறு புட்டு ரெடி.
பச்சைப் பயறு - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 3,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயறை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு, முதல் நாள் இரவே ஊறவிடவும்.
மறுநாள் நீரை நன்கு வடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஆவியில் வேகவிடவும்.
ஆறிய பின் உதிர்த்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து… வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் வேக வைத்து உதிர்த்த பயறு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சூப்பரான பச்சைப் பயறு புட்டு ரெடி.
நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன.
நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன.
டபுள் சைடட்
ஒரு பக்கம் சிறியது, இன்னொரு பக்கம் பெரியதுமாக இரண்டு பந்துகள் இருக்கும். மேலும் இவை ஒரு பக்கம் பூ அல்லது கல் என மாறி மாறி வரும். அதாவது திருகாணிக்கு பதில் இரண்டு பக்கமும் தோடுகளாக போடும் விதம். இவை சாலையோர கடைகளிலேயே ரூ.30 துவங்கி ஆன்லைனில் ரூ.250க்கு 12 கலர் காம்போக்களாகவும் கிடைக்கின்றன. இவைகள் மிருகங்களாகவும் வருகின்றன.
ஹக்கி
பெயரே ஹக்கி(அரவணை). காது மடலை அரவணைத்தபடி இருக்கும். சிறிய வகை வளையம், இதயம், சதுரம், அறுங்கோணம், ஸ்டார் வடிவ காதணிகள். இவை நம்மூர் கல்லூரிப் பெண்கள் தங்கத்தில் இரண்டாவது தோடாகவும் அணிவதைப் பார்க்கலாம். சிலவகை இதில் சின்ன செயின் ட்ராப்களும் இருக்கும். இவைகள் பிளாஸ்டிக் துவங்கி தங்கம், பிளாட்டினம், வைரம் வரையென பல விலைகளில் உண்டு. இவைகளை நயன்தாரா அடிக்கடி அணிவதைப் பார்க்கலாம்.
பார்பெல்

பேக் ஸ்டட்
முன்பக்கம் சின்ன ஸ்டட் மட்டுமே இருக்கும். பின்பக்கம் பெரிய அளவிலான பூக்கள். அல்லது வரிசையான கற்கள் என பார்க்க காது மடலை பின்பக்கத்திலிருந்து விரித்துப் பிடித்திருப்பது போல் இருக்கும். இவைகள் ரூ.100 முதல் தரத்திற்கு ஏற்ப ஆன்லைனில் கிடைக்கிறது.
இயர் த்ரெட்
காதில் மெல்லிய செயினில் சின்ன கல் அல்லது வளையம் தொங்கும். பார்க்க நூலை காதில் இரண்டு பக்கமாக தொங்கும்படி அணிந்திருப்பது போல் தோற்றம் கொடுக்கும். ரூ.200 முதல் ஆன்லைன் மற்றும் மால் கடைகளில் வாங்கலாம்.
இயர் ஸ்பைக்
காதுகளில் கூர்மையாக ஒன்றோ அதற்கு மேலோ என அப்படியே நிற்கும் படி அணியும் தோடுகள். ‘இருமுகன்’ படத்தில் ‘கண்ணை விட்டு’ பாடலில் நயன்தாரா அணிந்திருக்கும் மற்றுமொரு தோடு. இவைத் தவிர ‘டேங்லர்’ எனப்படும் பெரிய அளவிலான தொங்கும் தோடு, ‘இயர் கஃப்’ எனப்படும் காதுகளை கவ்விப் பிடித்துக்கொள்ளும் வகை. ‘ஸ்டட்’, ‘ட்ராப்ஸ்’, ‘ஹூப்’ தோடுகள் என தினந்தோறும் பயன்படுத்தும் வகைகளும் உண்டு.
ஸ்லேவ்
ஸ்லேவ்(அடிமை).அடிமைப் போல் தோடு ஒரு சங்கிலியுடன் காது மடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை மாட்டலாக முடியுடன் அணியும் வகையிலிருந்து வந்த லேட்டஸ்ட் ரகம். இவைகள் கொஞ்சம் விலை அதிகம். ரூ.400 முதல் ஆரம்பம்.
டபுள் சைடட்
ஒரு பக்கம் சிறியது, இன்னொரு பக்கம் பெரியதுமாக இரண்டு பந்துகள் இருக்கும். மேலும் இவை ஒரு பக்கம் பூ அல்லது கல் என மாறி மாறி வரும். அதாவது திருகாணிக்கு பதில் இரண்டு பக்கமும் தோடுகளாக போடும் விதம். இவை சாலையோர கடைகளிலேயே ரூ.30 துவங்கி ஆன்லைனில் ரூ.250க்கு 12 கலர் காம்போக்களாகவும் கிடைக்கின்றன. இவைகள் மிருகங்களாகவும் வருகின்றன.
ஹக்கி
பெயரே ஹக்கி(அரவணை). காது மடலை அரவணைத்தபடி இருக்கும். சிறிய வகை வளையம், இதயம், சதுரம், அறுங்கோணம், ஸ்டார் வடிவ காதணிகள். இவை நம்மூர் கல்லூரிப் பெண்கள் தங்கத்தில் இரண்டாவது தோடாகவும் அணிவதைப் பார்க்கலாம். சிலவகை இதில் சின்ன செயின் ட்ராப்களும் இருக்கும். இவைகள் பிளாஸ்டிக் துவங்கி தங்கம், பிளாட்டினம், வைரம் வரையென பல விலைகளில் உண்டு. இவைகளை நயன்தாரா அடிக்கடி அணிவதைப் பார்க்கலாம்.
பார்பெல்
பார்ப்பதற்கு சிறிய அளவிலான ஜிம்மில் தூக்கப்படும் வெயிட் போல் இருக்கும். ஒரு சிலவகை நீளமான மேல்புற காது மடல்களை இணைக்கும்படியும் இருக்கும். இதற்கென காதில் பல துளைகளைப் போட்டுக்கொள்ளும் இளசுகளும் உண்டு. இவை ஆண்களாலும் அணியப்படும் காதணி வகை. இவைகள் சாதார ணமாகவே ஃபேன்ஸி கடைகளிலேயே ரூ.10 முதல் கிடைக்கிறது.

பேக் ஸ்டட்
முன்பக்கம் சின்ன ஸ்டட் மட்டுமே இருக்கும். பின்பக்கம் பெரிய அளவிலான பூக்கள். அல்லது வரிசையான கற்கள் என பார்க்க காது மடலை பின்பக்கத்திலிருந்து விரித்துப் பிடித்திருப்பது போல் இருக்கும். இவைகள் ரூ.100 முதல் தரத்திற்கு ஏற்ப ஆன்லைனில் கிடைக்கிறது.
இயர் த்ரெட்
காதில் மெல்லிய செயினில் சின்ன கல் அல்லது வளையம் தொங்கும். பார்க்க நூலை காதில் இரண்டு பக்கமாக தொங்கும்படி அணிந்திருப்பது போல் தோற்றம் கொடுக்கும். ரூ.200 முதல் ஆன்லைன் மற்றும் மால் கடைகளில் வாங்கலாம்.
இயர் ஸ்பைக்
காதுகளில் கூர்மையாக ஒன்றோ அதற்கு மேலோ என அப்படியே நிற்கும் படி அணியும் தோடுகள். ‘இருமுகன்’ படத்தில் ‘கண்ணை விட்டு’ பாடலில் நயன்தாரா அணிந்திருக்கும் மற்றுமொரு தோடு. இவைத் தவிர ‘டேங்லர்’ எனப்படும் பெரிய அளவிலான தொங்கும் தோடு, ‘இயர் கஃப்’ எனப்படும் காதுகளை கவ்விப் பிடித்துக்கொள்ளும் வகை. ‘ஸ்டட்’, ‘ட்ராப்ஸ்’, ‘ஹூப்’ தோடுகள் என தினந்தோறும் பயன்படுத்தும் வகைகளும் உண்டு.
ஸ்லேவ்
ஸ்லேவ்(அடிமை).அடிமைப் போல் தோடு ஒரு சங்கிலியுடன் காது மடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை மாட்டலாக முடியுடன் அணியும் வகையிலிருந்து வந்த லேட்டஸ்ட் ரகம். இவைகள் கொஞ்சம் விலை அதிகம். ரூ.400 முதல் ஆரம்பம்.
இந்த முத்திரை எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும். ஜீரண சக்தியை கூட்டுகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
உடலில் நிலம் (பூமியை) எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும்
செய்முறை :
மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும்.
தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம்.
காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம்.
ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம்.
பலன்கள் :
எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அழகிய தோற்றத்தையும் தருகிறது, ஜீரண சக்தியை கூட்டுகிறது.
பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.
எலும்புகள், குருத்தெலும்புகள் வலுப்பெறுகிறது. தசை, தோல், சதைப்பற்றுகள் முத்ரா பயிற்சியின் மூலம் பலனடைகிறது.
அல்சர், உடல் எரிச்சல் போன்றவற்றுக்கு இந்த ப்ருத்வி முத்திரை மூலம் தீர்வு கிடைக்கிகிறது
மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து எளிதாக வெளியே வர பிருத்வி முத்ரா உதவுகிறது
நீண்டநாள் சோர்வுக்கு காரணமான சதைப் பற்றுகளை வலிமையாக்குகிறது. தொடர் பயிற்சி மூலம் உடல் உறுதியை மீளப் பெற முடியும்
சிறந்த சிகிச்சைக்கான குணாம்சங்களைக் கொண்ட முத்ரா, பாயும் படுக்கையுமாக கிடந்தவர்களை நடக்க வைத்துவிடும்
பிருத்வி முத்ராவை நாள்தோறும் 30 அல்லது 40 நிமிடங்கள் செய்து பாருங்கள். அதன் நன்மை நம் கண்களுக்கு புலப்படும்.
செய்முறை :
மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும்.
தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம்.
காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம்.
ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம்.
பலன்கள் :
எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அழகிய தோற்றத்தையும் தருகிறது, ஜீரண சக்தியை கூட்டுகிறது.
பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.
எலும்புகள், குருத்தெலும்புகள் வலுப்பெறுகிறது. தசை, தோல், சதைப்பற்றுகள் முத்ரா பயிற்சியின் மூலம் பலனடைகிறது.
அல்சர், உடல் எரிச்சல் போன்றவற்றுக்கு இந்த ப்ருத்வி முத்திரை மூலம் தீர்வு கிடைக்கிகிறது
மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து எளிதாக வெளியே வர பிருத்வி முத்ரா உதவுகிறது
நீண்டநாள் சோர்வுக்கு காரணமான சதைப் பற்றுகளை வலிமையாக்குகிறது. தொடர் பயிற்சி மூலம் உடல் உறுதியை மீளப் பெற முடியும்
சிறந்த சிகிச்சைக்கான குணாம்சங்களைக் கொண்ட முத்ரா, பாயும் படுக்கையுமாக கிடந்தவர்களை நடக்க வைத்துவிடும்
பிருத்வி முத்ராவை நாள்தோறும் 30 அல்லது 40 நிமிடங்கள் செய்து பாருங்கள். அதன் நன்மை நம் கண்களுக்கு புலப்படும்.
கீழே கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.
‘ஏன் என்றே தெரியவில்லை. நான் எடை கூடிக்கொண்டே செல்கிறேன்’ என்று சிலர் சொல்வதுண்டு. சிலர் ஏதேனும் விபத்து காரணமாக சில காலம் நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் பொழுது எடை கூடுவது இயற்கைதான். இவர்களைக்கூட எடை கூடாத சத்துணவு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவம் அறிவுறுத்தும். சிலர் அதிக மன உளைச்சல் காரணமாக முறையற்ற உணவினை உட்கொண்டு எடை கூடுவர். இதனையும் முறையான கவனம் செலுத்தி மன நலம் மூலமாக உடல் நலம் பெற வேண்டும்.
சில மருந்துகள் மற்றும் மருத்துவ காரணங்களாலும் எடை கூடலாம். காரணம் எதுவாயினும் அதிக எடை என்பது கீழ்கண்ட நோய்களின் அடித்தளம் ஆகிவிடும்.
• இதய நோய்கள் • சர்க்கரை நோய் பிரிவு 2
• மூட்டு பிரச்சினை • எலும்பு பிரச்சினை
• உயர் ரத்த அழுத்தம் • சில வகை புற்று நோய்கள்
• மன உளைச்சல் • பக்க வாதம்
• அதிக கொழுப்பு ஆகியவை அனைத்துமே பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால்தான் உடல் கூடுதல் எடைக்கு செல்லாமல் இருக்க மிக அதிக கவனம் கொடுக்க வேண்டி உள்ளது.
• சரியாக தைராய்டு சுரப்பி வேலை செய்யாது தைராய்டு குறைபாடு இருப்பின் திடீரென அதிக எடை கூடலாம்.
• மிக அதிகமான கலோரிகளை உட்கொள்வது, அதாவது மிக அதிகமாக சாப்பிடுவது எடை கூடுதலை ஏற்படுத்தும்.
• பலர் தாகம் எடுக்கும் பொழுது அதனை பசி என நினைத்து உணவு உட்கொள்வர். ஆக உடலுக்கு தேவையான அளவு நீர் கிடைக்காத பொழுது உடல் நீரினை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்யும். இதனால் நீர் தேங்கி உப்பிசம் ஏற்படும். எனவே முறையாக அளவாக நீர் குடிக்கும் வழக்கத்தினை பின்பற்றுங்கள்.

• சிலருக்கு எதிலும் அதிக உப்பு தேவையாய் இருக்கும். சிலர் சிப்ஸ், ஊறுகாய் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை விடாது உண்பர். அதிக உப்பு, அதிக நீர் தேக்கத்தினை உடலில் உண்டாக்கும். இதன் விளைவு உடல் எடை கூடி இருக்கும். அதிக உப்பினை குறைத்தால் போதும். உப்பே இல்லாமல் இருப்பதும் பெரும் தவறு. ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இங்கு குறிப்பிடப்படுவது சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாதத்தில் உப்பு போட்டு சமைப்பது இவற்றினைத் தவிருங்கள் என்பதுதான்.
• கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சில காலம் பயன்படுத்துவது எடை கூடுதலை ஏற்படுத்தும். இந்த மாத்திரைகள் ஹார்மோன் சம்பந்தப்பட்டவை என்பதால் அதிக பசியினைத் தூண்டும். நீரினை உடலில் தேக்கும். இதனால் உடல் எடை கூடும். குறைந்த ஹார்மோன் கொண்ட கருத்தடை மாத்திரைக்கும் மருத்துவத்தில் உள்ளன. கருத்தடை மாத்திரைகளை பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக புரதம் கூடாது என்றாலும் அநேகர் தேவையான அளவு புரதமே எடுத்துக்கொள்வதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. புரதம் உடலுக்கு இன்றியமையாத ஒரு சத்து. புரதம் இன்மை உடலின் செயல்திறனை குறைத்து விடும். உடல் உப்பியதுபோல் இருக்கும்.
* மனச்சோர்வு, கவலை இவை ஒருவரை செயல் இன்றி முடக்கிவிடும். இவர்கள் இவர்களை அறியாமலே அதிக உணவு உட்கொள்வர். இதனால் எடை கூடுதல் வெகு எளிதில் ஏற்படும். மனநலனை யோகா, மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி இவற்றின் மூலம் சரி செய்துகொள்ள வேண்டும்.
* ஆரோக்கியமான உணவினை உண்ணாமல் கொழுப்பு உணவு, ஆரோக்கியமற்ற கலோரி சத்து மிகுந்த உணவு போன்றவை எடையினை கூட்டிக்கொண்டே போகும். இவைகளை தவிர்த்து விகிதாசார ஆரோக்கிய உணவினை உண்பது உங்கள் எடையினைக் குறைக்கும்.
* மிக அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள். அதுவும் உங்களை மிக அதிகமாக சாப்பிடத் தூண்டும். எதிலும் நிதான அளவுகோலே சிறந்தது.
* தேவையான அளவு அதாவது 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் உடலை எடை கூடாமல் இருக்கச்செய்யும்.
மேற்கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை கூடாது இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.
சில மருந்துகள் மற்றும் மருத்துவ காரணங்களாலும் எடை கூடலாம். காரணம் எதுவாயினும் அதிக எடை என்பது கீழ்கண்ட நோய்களின் அடித்தளம் ஆகிவிடும்.
• இதய நோய்கள் • சர்க்கரை நோய் பிரிவு 2
• மூட்டு பிரச்சினை • எலும்பு பிரச்சினை
• உயர் ரத்த அழுத்தம் • சில வகை புற்று நோய்கள்
• மன உளைச்சல் • பக்க வாதம்
• அதிக கொழுப்பு ஆகியவை அனைத்துமே பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால்தான் உடல் கூடுதல் எடைக்கு செல்லாமல் இருக்க மிக அதிக கவனம் கொடுக்க வேண்டி உள்ளது.
• சரியாக தைராய்டு சுரப்பி வேலை செய்யாது தைராய்டு குறைபாடு இருப்பின் திடீரென அதிக எடை கூடலாம்.
• மிக அதிகமான கலோரிகளை உட்கொள்வது, அதாவது மிக அதிகமாக சாப்பிடுவது எடை கூடுதலை ஏற்படுத்தும்.
• பலர் தாகம் எடுக்கும் பொழுது அதனை பசி என நினைத்து உணவு உட்கொள்வர். ஆக உடலுக்கு தேவையான அளவு நீர் கிடைக்காத பொழுது உடல் நீரினை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்யும். இதனால் நீர் தேங்கி உப்பிசம் ஏற்படும். எனவே முறையாக அளவாக நீர் குடிக்கும் வழக்கத்தினை பின்பற்றுங்கள்.
• நான் சரியாக உண்கிறேன். தேவையான அளவு தூங்குகிறேன். நன்கு உடற்பயிற்சி செய்கிறேன். இருப்பினும் அதிக எடை கூடுகின்றது என்பவர்களும் உண்டு. இவர்களுக்கு அதிக மன அழுத்தம், மன உளைச்சல் இருக்கலாம். இந்த பாதிப்பு உடையவர்களுக்கு கார்டிஸால் ஹார்மோன் அதிகம் சுரந்து அதன் மூலம் இன்சுலின் அளவு கூடி ரத்தத்தில் சர்க்கரை அளவினைக் குறைக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுது பிஸ்கட், ஐஸ்கிரீம் என உண்ணத் தொடங்குவார்கள். இதனால் கண்டிப்பாய் எடை கூடும். இத்தகையோருக்கு மூச்சுப் பயிற்சி செய்வது, கிரீன் டீ எடுத்துக் கொள்வது போன்றவை பேருதவியாய் இருக்கும்.

• சிலருக்கு எதிலும் அதிக உப்பு தேவையாய் இருக்கும். சிலர் சிப்ஸ், ஊறுகாய் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை விடாது உண்பர். அதிக உப்பு, அதிக நீர் தேக்கத்தினை உடலில் உண்டாக்கும். இதன் விளைவு உடல் எடை கூடி இருக்கும். அதிக உப்பினை குறைத்தால் போதும். உப்பே இல்லாமல் இருப்பதும் பெரும் தவறு. ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இங்கு குறிப்பிடப்படுவது சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாதத்தில் உப்பு போட்டு சமைப்பது இவற்றினைத் தவிருங்கள் என்பதுதான்.
• கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சில காலம் பயன்படுத்துவது எடை கூடுதலை ஏற்படுத்தும். இந்த மாத்திரைகள் ஹார்மோன் சம்பந்தப்பட்டவை என்பதால் அதிக பசியினைத் தூண்டும். நீரினை உடலில் தேக்கும். இதனால் உடல் எடை கூடும். குறைந்த ஹார்மோன் கொண்ட கருத்தடை மாத்திரைக்கும் மருத்துவத்தில் உள்ளன. கருத்தடை மாத்திரைகளை பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக புரதம் கூடாது என்றாலும் அநேகர் தேவையான அளவு புரதமே எடுத்துக்கொள்வதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. புரதம் உடலுக்கு இன்றியமையாத ஒரு சத்து. புரதம் இன்மை உடலின் செயல்திறனை குறைத்து விடும். உடல் உப்பியதுபோல் இருக்கும்.
* மனச்சோர்வு, கவலை இவை ஒருவரை செயல் இன்றி முடக்கிவிடும். இவர்கள் இவர்களை அறியாமலே அதிக உணவு உட்கொள்வர். இதனால் எடை கூடுதல் வெகு எளிதில் ஏற்படும். மனநலனை யோகா, மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி இவற்றின் மூலம் சரி செய்துகொள்ள வேண்டும்.
* ஆரோக்கியமான உணவினை உண்ணாமல் கொழுப்பு உணவு, ஆரோக்கியமற்ற கலோரி சத்து மிகுந்த உணவு போன்றவை எடையினை கூட்டிக்கொண்டே போகும். இவைகளை தவிர்த்து விகிதாசார ஆரோக்கிய உணவினை உண்பது உங்கள் எடையினைக் குறைக்கும்.
* மிக அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள். அதுவும் உங்களை மிக அதிகமாக சாப்பிடத் தூண்டும். எதிலும் நிதான அளவுகோலே சிறந்தது.
* தேவையான அளவு அதாவது 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் உடலை எடை கூடாமல் இருக்கச்செய்யும்.
மேற்கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை கூடாது இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, கார்ன் சேர்த்து புலாவ் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
கார்ன் - அரை கப்,
வெங்காயம் - ஒன்று,
தக்காளி - 3,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
பட்டை, லவங்கம்,
ஏலக்காய் - தலா ஒன்று,

செய்முறை:
புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கார்ன், மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.
இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
பாசுமதி அரிசி - ஒரு கப்,
கார்ன் - அரை கப்,
வெங்காயம் - ஒன்று,
தக்காளி - 3,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
பட்டை, லவங்கம்,
ஏலக்காய் - தலா ஒன்று,
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கார்ன், மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.
இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு - கார்ன் புலாவ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.
உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.
கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
பெரும்பாலும் இத்தகையவன்முறைகள்,90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.
இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராஜலட்சுமி என்கிற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும். அப்படியே நாட்டையே உலுக்கினாலும், ஒரே வாரத்தில் மறக்கடிக்கப்படுகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எட்டு வயது பெண்குழந்தை ஆசிபா பலநாட்கள் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வேதனை. இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?
குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.
தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.

சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது.
வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது. நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை.
ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன. திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.
பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.
மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன. மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும். பெண்களுக்கு எதிராக தொடரும் இழிச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.
வழக்கறிஞர் நல்லினி
கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
பெரும்பாலும் இத்தகையவன்முறைகள்,90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.
இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராஜலட்சுமி என்கிற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும். அப்படியே நாட்டையே உலுக்கினாலும், ஒரே வாரத்தில் மறக்கடிக்கப்படுகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எட்டு வயது பெண்குழந்தை ஆசிபா பலநாட்கள் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வேதனை. இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?
குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.
தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.

வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது. நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை.
ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன. திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.
பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.
மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன. மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும். பெண்களுக்கு எதிராக தொடரும் இழிச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.
வழக்கறிஞர் நல்லினி
அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம். அத்திப்பழத்தை எப்படி அழகிற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம். நீங்கள் அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம்.
* முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தாலே போதும், பருக்கள் மறைந்து விடும்.
தேவையான பொருட்கள் :
அத்தி பழம் - 1
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் அத்திப்பழத்தை அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த அத்திப்பழ கூழுடன் தேனை கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் இதனை கழுவி கொள்ளலாம். அத்திப்பழத்தின் அற்புத குணம் உங்கள் முகத்தை பருக்கள் இல்லாமல் மாற்றும்.
* அத்திபழத்தை கொண்டு எப்படி முக பொலிவை பெறுவது என்பதை இந்த குறிப்பில் தெரிந்து கொள்வோம். அதற்கு தேவையானவை..
தேவையான பொருட்கள்
அத்திப்பழம் - 1
யோகர்ட் - 2 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் அத்திப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு யோகர்ட் மற்றும் தேனை ஒன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை அத்திப்பழத்துடன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அத்தியில் உள்ள வைட்டமின் சி முகத்தை மினுமினுப்பாக்கும்.
* முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தாலே போதும், பருக்கள் மறைந்து விடும்.
தேவையான பொருட்கள் :
அத்தி பழம் - 1
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் அத்திப்பழத்தை அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த அத்திப்பழ கூழுடன் தேனை கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் இதனை கழுவி கொள்ளலாம். அத்திப்பழத்தின் அற்புத குணம் உங்கள் முகத்தை பருக்கள் இல்லாமல் மாற்றும்.
* அத்திபழத்தை கொண்டு எப்படி முக பொலிவை பெறுவது என்பதை இந்த குறிப்பில் தெரிந்து கொள்வோம். அதற்கு தேவையானவை..
தேவையான பொருட்கள்
அத்திப்பழம் - 1
யோகர்ட் - 2 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் அத்திப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு யோகர்ட் மற்றும் தேனை ஒன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை அத்திப்பழத்துடன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அத்தியில் உள்ள வைட்டமின் சி முகத்தை மினுமினுப்பாக்கும்.
குழந்தைகளை இயல்பாக விடுவதற்கும் நமது வழிக்குக் கொண்டுவருவதற்கும் இடையே உள்ள சமநிலையை அடைய முடிந்தால் அதுவே நலம்தரும்.
குழந்தைகளைக் கண்டிக்கவே கூடாதா? அவர்கள் போக்கிலேயே சீரழிய விடுவதா என்றால், கட்டாயம் கண்டிக்கத்தான் வேண்டும். கடிவாளம் இல்லாத குதிரைபோல்தான் கண்டித்து வளர்க்கப்படாத குழந்தைகளும். ஆனால், கண்டிப்பது என்பது பலரும் நினைப்பதுபோல் கண்மூடித்தனமாக அடித்தோ திட்டியோ தண்டிப்பது அல்ல.
குழந்தைகள் இயல்பாகவே தங்களுக்குப் பிடித்த செயல்களை மட்டுமே செய்வார்கள். ஆகவே, நீங்கள் எதிர்பார்க்கும் செயலைச் செய்ய வேண்டுமானால் அதை அவர்களுக்குப் பிடித்ததாக மாற்ற வேண்டும். அதேபோல் நமக்குப் பிடிக்காத செயல் ஒன்றை அவர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமானால், அதைவிட சுவாரசியமான ஒரு செயலைச் செய்யச் சொல்ல வேண்டும்.
ஒரு செயலைக் கண்டிக்கும்போது அச்செயல் மட்டும்தான் நமக்குப் பிடிக்கவில்லை, அந்தக் குழந்தையையே ஒட்டுமொத்தமாக வெறுக்கவில்லை என்பதை அந்தக் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும். ‘இதை மட்டும் செய்யாமல் இருந்தால், நீ எவ்வளவு நல்ல பையன் தெரியுமா?’ என்பதற்கும் ‘நீ எதற்குமே லாயக்கில்லாதவன்’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
அதுபோல் குழந்தைகளுக்கு ஒழுக்கங்களையும் நல்ல பழக்கங்களையும் எவ்வளவு சீக்கிரம் அறிமுகப்படுத்துகிறோமோ, அவ்வளவு நல்லது. ஐந்தில் வளைக்காமல் ஐம்பத்து எட்டில் ரிட்டயர் ஆகும்போது, வளைக்க நினைத்தால் ஒடிந்துவிடும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை உணர்ந்து பொதுமைப்படுத்திப் பிறருடன் ஒப்பிடாமல் இருப்பதும் முக்கியம். குழந்தைகளை இயல்பாக விடுவதற்கும் நமது வழிக்குக் கொண்டுவருவதற்கும் இடையே உள்ள சமநிலையை அடைய முடிந்தால் அதுவே நலம்தரும்.
குழந்தைகள் இயல்பாகவே தங்களுக்குப் பிடித்த செயல்களை மட்டுமே செய்வார்கள். ஆகவே, நீங்கள் எதிர்பார்க்கும் செயலைச் செய்ய வேண்டுமானால் அதை அவர்களுக்குப் பிடித்ததாக மாற்ற வேண்டும். அதேபோல் நமக்குப் பிடிக்காத செயல் ஒன்றை அவர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமானால், அதைவிட சுவாரசியமான ஒரு செயலைச் செய்யச் சொல்ல வேண்டும்.
ஒரு செயலைக் கண்டிக்கும்போது அச்செயல் மட்டும்தான் நமக்குப் பிடிக்கவில்லை, அந்தக் குழந்தையையே ஒட்டுமொத்தமாக வெறுக்கவில்லை என்பதை அந்தக் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும். ‘இதை மட்டும் செய்யாமல் இருந்தால், நீ எவ்வளவு நல்ல பையன் தெரியுமா?’ என்பதற்கும் ‘நீ எதற்குமே லாயக்கில்லாதவன்’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
அதுபோல் குழந்தைகளுக்கு ஒழுக்கங்களையும் நல்ல பழக்கங்களையும் எவ்வளவு சீக்கிரம் அறிமுகப்படுத்துகிறோமோ, அவ்வளவு நல்லது. ஐந்தில் வளைக்காமல் ஐம்பத்து எட்டில் ரிட்டயர் ஆகும்போது, வளைக்க நினைத்தால் ஒடிந்துவிடும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை உணர்ந்து பொதுமைப்படுத்திப் பிறருடன் ஒப்பிடாமல் இருப்பதும் முக்கியம். குழந்தைகளை இயல்பாக விடுவதற்கும் நமது வழிக்குக் கொண்டுவருவதற்கும் இடையே உள்ள சமநிலையை அடைய முடிந்தால் அதுவே நலம்தரும்.
கோதுமையில் பல்வேறு சத்தான, சுவையான உணவுகளை தயார் செய்யலாம். இன்று கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - முக்கால் கப்,
அரிசி மாவு - கால் கப்,
கோதுமை ரவை - அரை கப்,
புளித்த மோர் - ஒரு கரண்டி,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
இஞ்சி - சிறு துண்டு,
கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
எண்ணெய் - தேவையான அளவு,

செய்முறை:
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து சூடானதும் சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.
கோதுமை மாவு - முக்கால் கப்,
அரிசி மாவு - கால் கப்,
கோதுமை ரவை - அரை கப்,
புளித்த மோர் - ஒரு கரண்டி,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
இஞ்சி - சிறு துண்டு,
கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து சூடானதும் சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான கோதுமை ரவா தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்!’. இந்த பரிசோதனை எந்த வயதில் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
உடலுக்கு எக்ஸ் - ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, ‘மேமோகிராம்!’ மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்!’ ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், டாக்டரிடம் வருபவர்களுக்கு, செய்யப்படுவது, ‘ஸ்கிரீனிங் மேமோகிராம்!’
எந்தப் பிரச்சனையும் இல்லாத போது, 35 வயதிற்கு முன், ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இந்தப் பரிசோதனையில், கதிர்வீச்சை உடலினுள் செலுத்தியே பரிசோதிக்கிறோம்; கதிர் வீச்சால் பாதிப்புகள் ஏற்படலாம்.
நாற்பது வயதிற்கு மேல், மரபியல் ரீதியில், அதிக, ‘ரிஸ்க்’ உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை எக்ஸ் - ரே செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம்.
இந்தப் பரிசோதனையை, நன்கு தேர்ச்சி பெற்ற, பெண் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே செய்ய முடியும்.
பயிற்சி பெற்றவர்கள் உள்ள மையத்தில், இதை செய்து கொள்ளும் போது தான், பிரச்னை உள்ளதா, இல்லையா என்பதை சரியாக சொல்ல முடியும்.
அப்படி இல்லாத பட்சத்தில், இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் தவறாக சொல்லி விடும் அபாயம் உள்ளது.
எந்தப் பிரச்சனையும் இல்லாத போது, 35 வயதிற்கு முன், ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இந்தப் பரிசோதனையில், கதிர்வீச்சை உடலினுள் செலுத்தியே பரிசோதிக்கிறோம்; கதிர் வீச்சால் பாதிப்புகள் ஏற்படலாம்.
நாற்பது வயதிற்கு மேல், மரபியல் ரீதியில், அதிக, ‘ரிஸ்க்’ உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை எக்ஸ் - ரே செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம்.
இந்தப் பரிசோதனையை, நன்கு தேர்ச்சி பெற்ற, பெண் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே செய்ய முடியும்.
பயிற்சி பெற்றவர்கள் உள்ள மையத்தில், இதை செய்து கொள்ளும் போது தான், பிரச்னை உள்ளதா, இல்லையா என்பதை சரியாக சொல்ல முடியும்.
அப்படி இல்லாத பட்சத்தில், இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் தவறாக சொல்லி விடும் அபாயம் உள்ளது.






