என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.
    பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.

    மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக் கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப்போம்.

    நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.

    இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் மங்கையர்கள் பல வித டிசைன்களில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரிக்க செய்யுங்கள் என அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    வட்ட வடிவ முகம் உள்ளவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

    இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

    ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.

    சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.

    முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.

    முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான்.
    கர்ப்பமான காலத்தில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது இயல்பானது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.
    கர்ப்பமான காலத்திலிருந்து செய்ய கூடிய ஒவ்வொரு வேலையையும், அணுகுமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது அனைத்து பெண்களுக்கும் இயல்பாக தோன்றகூடியது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்

    கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே பயணம் செய்துக் கொள்ளலாம்.. இந்த கால இடைவெளியில் உள்ள பெண்கள் காலை நேரத்தில் அதிக சுறுசுறுப்புடனும் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுதால் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது அனைத்து சூழ்நிலைகளையும் அவர்களால் எதிர்க்கொள்ளக்கூடிய ஆற்றல் இரண்டாவது முதல் ஆறாவது மாதம் உள்ள கர்ப்பிணிகளுக்கு இருக்கும்.

    கர்ப்பமான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் நீங்கள் பயணம் செய்யும் போது குழந்தை அழிவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது உங்கள் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.

    நீங்கள் கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது சுவாதினம் இல்லாத குழந்தை பிறக்க நேரிடலாம், கரு தவறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.. ஒரு வேளை உங்களுக்கு இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்ய முடிவெடுக்க வேண்டும்.

    கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் அல்லது புணர்புழை இரத்த ஒழுக்கு, கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவை பயணம் ஒத்தி வைக்க பிற காரணங்களாக உள்ளன. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம்.

    பயணம் பற்றி யோசிக்கும் போது ஏற்படக்கூடிய விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சில கர்ப்பிணிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதால் கால்வீக்கம், பசியின்மை, தளர்வு ஏற்படும். மேலும் தேவையான மருந்துக்களை எடுத்து கொண்டு பயணம் செய்யலாம். பயணம் செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொண்டு பயணியுங்கள்..
    எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முள்ளங்கிக் கலவை - ஒரு கப்,
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    கடுகு, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    இஞ்சி - விரல் நீளத்துண்டு,
    பூண்டு - 5 பல்,
    புளி - எலுமிச்சை அளவு,
    நல்லெண்ணெய் - அரை கப்,
    உப்பு - தேவையான அளவு
    (விருப்பப்பட்டால் பேரீச்சை துண்டுகள் சேர்க்கலாம்).



    செய்முறை:

    இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த காய்கறிகளை ஈரம் போக உலர விடவும்.

    வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கவும்.

    இதனுடன் வேக வைத்து உலர வைத்த காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.

    புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பச்சை வாசனை போனதும் கடுகு - வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்போது இறக்கி, பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

    காய்கறிகளை சமைக்க நேரம் இல்லாதபோது கைகொடுக்கும் இந்த ஊறுகாய்.

    சூப்பரான வெஜிடபிள் ஊறுகாய் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும்.
    ‘‘ஆயில் புல்லிங் இப்போது பெரிதாக பேசப்பட்டாலும், நம்நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நல்லெண்ணெயை ஊற்றி வாயைக் கொப்பளிக்கும் முறையை 1000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளனர். பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில், எண்ணெய் கொப்பளிப்பது, கண்களுக்கு அஞ்சனம் இடுவது என சிலவற்றை காலை சடங்குகளாகவே சொல்லியிருக்கிறார்கள்.

    ஏதேனும் ஒரு திரவத்தை வாய் முழுவதும் வைத்து கொப்பளிக்கும் ‘கவலகண்டூஷம்’ மற்றும் வாயில் பாதியாக நிரப்பி, கொப்பளிக்காமல் அப்படியே துப்புவதை ‘கவலகிரஹம்’ என இரண்டு முக்கிய சடங்குகளைச் சொல்கிறார்கள். மேலும், ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெயைத்தான் உபயோகிப்போம். இப்போது வெளிநாட்டினர் தேங்காய் எண்ணெய் ஆயில்புல்லிங் முறையை இப்போது பிரபலப்படுத்துகிறார்கள்.’’

    ‘‘சாதாரணமாக நாம் தொண்டைப்புண் வந்தால் உப்புத்தண்ணீர், வாய்ப்புண்ணுக்கு எண்ணெய் போன்றவற்றை வாயில் ஊற்றி கொப்பளிப்போம். இதுபோல் எந்த பிரச்சனையுமில்லாமல் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும். பல்லிடுக்குகளில் உள்ள நச்சுப்பொருள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கி, சுவைத்திறனை அதிகரிக்க முடியும்.

    வாய்க்கசப்பு, பசியின்மை போன்ற பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். கழுத்துவலி, கழுத்து சுளுக்கு, தொண்டைவலி, காதுவலி, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்கும் ஆயில் புல்லிங் சிறந்ததொரு சிகிச்சையாகும். பற்களில் உள்ள வெற்றிலைக்கறை, மஞ்சள் கறை நீங்கி பற்கள் வெண்மையாகப் பளிச்சிடும். சொத்தைப்பற்களால் வரக்கூடிய பற்கூச்சம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவும் நீங்கும்.’’

    எப்படி செய்வது?

    ‘‘சூரிய வெளிச்சமுள்ள, காற்றோட்டமான இடத்தில் அமர்ந்துகொண்டு, கழுத்து, தோள் பட்டைகளில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். திரவத்தை வாய் முழுவதுமாகவோ (கண்டூஷம்) அல்லது பாதியாகவோ (கவலகிரஹம்) என இரு முறைப்படியும் கொப்பளிக்கலாம். இதை ஒரு குறிப்பிட்ட மணி நேரம் என்றில்லாமல் வாயில் ஊற்றிய திரவமானது நுரைத்து, கெட்டியாக பசை போன்று வரும் வரையோ அல்லது கண், மூக்கு வழியாக தண்ணீர் வரும் வரை வைத்திருக்க வேண்டும்.

    நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தவிர, பால், பழச்சாறுகள், தேன் மற்றும் கோமியம் போன்றவற்றாலும் வாய் கொப்பளிக்கலாம். ஆனால், நல்லெண்ணெய்தான் மிகச்சிறந்தது. தேனுக்கு எரிச்சல், புண், வீக்கம் போன்றவற்றை ஆற்றும் குணம் உள்ளதால் தேனையும் உபயோகிக்கலாம்.

    இதுதான் ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்ட சரியான முறை. இப்படி முறையாக செய்ய முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் வாயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கொப்பளித்துத் துப்புவதும் பலன் தரும்.’’

    தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர்.
    நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர்.

    நகங்களின் நுனிப்பகுதியில் பலவிதமான வண்ணங்களில் பல டிசைன்களில் நெயில் ஆர்ட் செய்யலாம். நெயில் ஆர்ட் செய்வதற்கு விசேஷமான நெயில் பாலிஷ் பயன்படுத்துகின்றார்கள். ஏனெனில், சாதாரண நெயில் பாலிஷ் மீது ஓவியங்கள் வரைவதோ அலங்கார வேலைப்பாடுகள் செய்வதோ கடினமானது. தற்பொழுது அறிமுகமாகியிருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் நிரந்தரமானது. ஜெல் பூசிய நகங்களை ‘யு.வி” லைட் எனப்படும் ஊதாக் கதிர்களின் கீழ் வைக்கின்றார்கள். பளபளப்பான கண்களைக் கவரும் தோற்றத்தால் பார்ப்போரை கவரச் செய்யலாம்.

    ஸ்டிக்கர் டிசைன் நெயில் ஆர்ட்டுகள் அவசரத்துக்கு பயன்படுத்தப்படுவது. இரண்டே நிமிடங்களில் நகங்களை அழகாக்கிக் கொள்ளலாம். பல வடிவங்கள் கொண்ட நெயில் ஆர்ட் ஸ்டிக்கர்கள் எளிதாகக் கடையில் பெற்றுக் கொள்ளலாம். திடீரென விருந்து வைபவங்களுக்கு அழைப்பு வந்தால் உடனுக்குடன் உங்கள் கைவிரல்களின் அழகை மெருகுபடுத்துவதற்குக் கைக்கொடுக்கக் கூடியவை இந்த நெயில் ஸ்டிக்கர்ஸ். முன் கூட்டியே இவற்றை வாங்கி வைத்திருந்தால் இரண்டே நிமிடத்தில் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு தயாராகி விடலாம்.

    நகங்களும் ஒரு அட்ராக்டிவ் ஆன உறுப்பு தான். வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் சிவப்பு, மெரூன், கருப்பு நிறங்களில் நகப்பூச்சுகள் பயன்படுத்தினால்
    அவ்வளவு அழகாக இருக்கும். நாம் அணியும் உடைநிறத்துக்கு ஏற்ப நெயில் ஆர்ட்டுகள் இருந்தால் சொல்லவே வேண்டாம் உங்கள் முகத்தைக்காட்டிலும்
    நகங்கள் அட்ராக்டிவ் ஆகத்தெரியும். கருப்பு அல்லது மாநிறத்தில் இருப்பவர்களும் நகங்களைப் பராமரித்து அழகைக் கூட்டிக் கொள்ளலாம். 
    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2,
    வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
    சீஸ் - 4 க்யூப்ஸ்,
    கோஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    இந்த மசாலா ஆறியதும் அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    இந்த மசாலாவை வட்டமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

    சூப்பரான சீஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும்.
    உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். அவைகள் என்னென்னவென்பதை அறிந்துகொள்வோம்…

    * Pull Ups

    ஜிம்முக்குச் செல்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய அடிப்படையான, முக்கியமான ஒரு பயிற்சிதான் Pull Ups. இப்பயிற்சி செய்கிறபோது கைகளால் கம்பியை பிடித்து கீழே தொங்கிய நிலையிலிருந்து, உடலை மேலே தூக்கிச் செல்ல வேண்டும். இது சிறுவர்கள் முதல் ஜிம்முக்கு செல்கிற அனைவரும் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பயிற்சியாக இருக்கிறது. இப்பயிற்சியால் Wings என்கிற பகுதி, தோள்பட்டை, கை போன்ற உறுப்புகள் வலுவடைகிறது.

    * Dips

    Dips என்கிற இந்த பயிற்சியில் இரண்டு கம்பிகளின் மத்தியில் கால்களை தொங்க விட்டோ அல்லது மடக்கிய நிலையிலேயோ கம்பிகளின் மேலிருந்து கீழே இறங்கி மேலே செல்ல வேண்டும். இது அடிப்படையான, மிகவும் முக்கியமான ஒரு பயிற்சியாக இருந்து வருகிறது. இப்பயிற்சி செய்வதால் தோள்பட்டை, கை போன்ற உறுப்புகள் வலுவடைகிறது.
     
    * Shoulder

    தோள்பட்டை (Shoulder) அல்லது புஜம் வலுவடைவதற்கான பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சியின்போது இரண்டு கைகளிலும் தம்பிள்ஸ் வைத்துக்கொண்டு கைகளை பக்கவாட்டில் மேலும் கீழுமாக தூக்கி இறக்க வேண்டும்.

    * Squat

    கால்களை வலுப்படுத்த செய்கிற முக்கியமான பயிற்சி Squat. இப்பயிற்சி செய்கிறபோது எடையை பின்புற கழுத்தின் மீது வைத்தவாறு கைகளால் பிடித்துக்கொண்டு, மெதுவாகவும், முழுமையாகவும் கீழே உட்கார்ந்து எழும்ப வேண்டும். பெரும்பாலானோர் இப்பயிற்சியை செய்யாமல் தவிர்த்து விடுகிறார்கள். இப்பயிற்சி செய்வதால் ஆண்களின் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதோடு, ஆண்களின் ஒட்டுமொத்த உடலின் வலுவும் அதிகரிக்கிறது. கால்களுக்கான இந்த பயிற்சி செய்வதால் உடலின் மேல்பாகவும் சீராக இருக்கும்.  



    * Biceps

    கைகளின் மேல்பாகத்திலுள்ள Biceps என்கிற பகுதியை வலுப்படுத்துவதற்கு தம்பிள்ஸ் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம். இப்பயிற்சி செய்கிறபோது தம்பிள்ஸை மேலும் கீழுமாக மெதுவாக தூக்கி இறக்க வேண்டும். இப்பயிற்சியின்போது கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற உடல் பாகங்களை பயன்படுத்துவதோ, உடல் முழுவதையும் அசைப்பதோ கூடாது. அப்படி கைகளை மட்டுமே பயன்படுத்தி தூக்க முடிகிற எடையை முதலில் தூக்க வேண்டும். இதேபோல் சரியாக செய்து படிப்படியாக எடையை அதிகப்படுத்த வேண்டும்.

    * Abs

    வயிற்றுப் பகுதி (Abs) வலுவடைவதற்காக செய்கிற சிக்ஸ்பேக் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி செய்கிறபோது கம்பியில் கைகளால் பிடித்துக்கொண்டு கீழே தொங்கிய நிலையில், இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து மேலே தூக்கி கீழே இறக்கலாம். இதே நிலையில் கால்களை இடுப்புக்கு நேராக நீட்டி மடக்கலாம். இதே நிலையில் கால்களை இடுப்பின் பக்கவாட்டு புறத்திலும் மடக்கி நீட்டலாம்.

    இவற்றை நினைவில் கொள்ளுங்கள்…

    * Pull Ups, Bench, Squat, Shoulder, Biceps போன்ற அனைத்து பயிற்சிகளையும் அரை குறையாக செய்யக்கூடாது. சரியான முறையில் முழுமையான இயக்கத்துடன் செய்ய வேண்டும். இப்பயிற்சிகளை மெதுவாக செய்வதே நல்லது. அதிக பளு தூக்கும்போது அதற்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து சற்று வேகமாக தூக்கலாம்.

    ஆனால், அதன் பிறகு பளுவை இறக்கும்போது மெதுவாக இறக்க வேண்டும். இதனால் நாம் பயிற்சி மேற்கொள்கிற அந்த குறிப்பிட்ட தசைகள் நல்ல வலுவடைகிறது. தம்புள்ஸ், ஸ்குவாட், பெஞ்ச் போன்ற பயிற்சிகளை செய்யும்போது அதிக வேகத்துடன் செய்யக்கூடாது. இதுபோன்ற பயிற்சிகளை மெதுவாக செய்வதே நல்ல பலனளிக்கும்.
    உங்களது கணவர் உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா...அதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா…உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா… முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா… இது பல குடும்பங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விஷயம்தான்..ஆனால் இதை நீங்கள் தைரியமாக சந்திக்க முன்வர வேண்டும்.

    மீண்டும் உங்கள் பக்கம் உங்களது கணவரைத் திருப்ப முடியும். அதற்கு நம்பிக்கையும், சில மெனக்கெடல்களும் மட்டுமே தேவை.

    முதலில் ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்…

    படுக்கை அறை விளையாட்டில் மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடு வராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக உந்தலாம்.

    திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் ஏகத்துக்கும் குண்டடித்து விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் மெஜாரிட்டி ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் அப்பீல் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    குழந்தை பிறப்புக்குப் பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பு தளர்ந்து, பெரிதாகி விடும். இதனால் உடல் உறவின்போது போதுமான சந்தோஷம் ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்ததைப் போல பெண்ணுறுப்பு இறுக்கமாக இல்லாதது பல ஆண்களுக்கு சோர்வைத் தருகிறதாம்.

    கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை அப்செட் ஆக்கி விடுமாம். இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

    பல கணவர்களுக்கு அலுவலக வேலை மண்டையைப் பிய்ப்பதாக இருக்கும். மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ஆய்ந்து ஓய்ந்து வீடு திரும்புபோதும் பிழியப்பட்ட கரும்பு போல மாறியிருப்பார்கள். எனவே செக்ஸ் மூடு அவர்களை அண்டுவது கடினம். இதுபோன்ற ஆண்களுக்கு செக்ஸ் மீதே ஒரு வெறுப்பு வந்து மனைவியரிடம் நெருங்காமல் தள்ளிப் போக ஆரம்பிப்பார்கள், உறவுகளை தள்ளிப் போடவும் செய்வார்கள்.

    இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…
    பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்று பனங்கிழங்கில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனங்கிழங்கு - 3,
    சின்ன வெங்காயம் - 10,
    பச்சை மிளகாய் - 3,
    பூண்டு - 2 பல்,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் சீரகம், தேங்காய் துருவலை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மஞ்சள் விழுதை தோல் சீவிய பனங்கிழங்கில் தடவி வேகவிடவும்.

    வெந்தவுடன் நாரை உரித்துவிட்டு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

    இறக்குவதற்கு முன்… தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்… சுவையான, சத்தான பனங்கிழங்கு புட்டு ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
    ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    பொதுவாக பெண்களை பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால், சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்ஸைமரே பெண்களை அதிகம் பாதிக்கிறது.

    அல்ஸைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் வயது ஏற ஏற இந்நோய் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்ஸைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

    பெண்களிடையே காணப்படும் மன அழுத்தப் பிரச்சனையும் அல்ஸைமருக்கு வழி வகுக்கிறது. பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்ஸைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள் மற்றும் காரணிகளும் இந்நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

    பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்ஸைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்கிறார் ஆரோக்கிய உடற்கூறியியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர்.

    பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்ஸைமர் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டதுடன், பாலின அடிப்படையில் இந்நோய்க்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    அல்ஸைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் உள்ள மனரீதியான வெளிப்பாடுகள் மற்றும் அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுவதாக இந்த ஆலோசனைக்குழு தெரிவித்திருக்கிறது. இவற்றைக் கொண்டு அல்ஸைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

    மூளையில் சேர்ந்துள்ள இருவகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்ஸைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை.

    ஆனால், அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வந்துள்ளது. ஆண்களைவிட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது.  
    வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள்.
    பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பானும் முக்கியமான ஒன்று. கிட்டத்தட்ட தீவிரமிக்க ஒரு தொற்றுதான் டிப்தீரியா. வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள். எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    Corynebacterium diphtheriae என்ற பாக்டீரியா காரணமாக தொண்டை அடைப்பான் உண்டாகிறது. இக்கிருமிகள், தொண்டை, மூக்கு பகுதிகளுக்கும் பரவி சளிச்சவ்வை பாதிக்கின்றன. பாதிப்புக்குள்ளானவரின் இருமல், தும்மல் மற்றும் பேசுதல் மூலமாகக் கிருமி வெளியேறி காற்றின் மூலமாக மற்றவருக்கும் பரவுகிறது.

    தொற்று ஏற்பட்ட ஆரம்ப நிலையில் சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டைப்புண் ஆகியவற்றுடன் டிப்தீரியா ஆரம்பிக்கிறது. இதன் அறிகுறியாக நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். தொண்டையின் அடிப்பகுதியிலும் சில சமயங்களில் மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் ஒரு மேற்படலம் உருவாகும். குழந்தைகளின் கழுத்து வீங்கலாம். சுவாசம் துர்நாற்றமடிக்கும். உடல் பலவீனமும் சுவாசிப்பதில் சிரமமும் இருக்கும்.

    குழந்தைக்குத் தொண்டை அடைப்பான் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். தொண்டை அடைப்பானுக்குப் பிரத்யேகமான மருந்துகள் இருக்கின்றன. டிப்தீரியா மற்றவர்களுக்கு தொற்றாத வண்ணம் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தனியறையில் படுக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து தொண்டையில் படும்படி கொப்பளிக்கச் சொல்லலாம். ஆவி பிடிக்கச் செய்வது நல்லது. வெதுவெதுப்பான திரவ உணவுகளையும் கொடுக்கலாம்.

    தொண்டை அடைப்பானை ஆரம்பநிலையில் தடுப்பூசி கொண்டு எளிதில் தடுத்துவிடலாம். ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும் என்பதால் வீட்டிலுள்ள மற்ற குழந்தைகளையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    தேவைப்பட்டால் தடுப்பு மருந்துகளும் கொடுக்கலாம்.சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் தொற்று, பக்கவாதம், இதயத்தசைகள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் தன்மை கொண்டது டிப்தீரியா. எனவே, ஆரம்ப நிலையில் சரி செய்வதே பாதுகாப்பானது!
    நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம்.
    நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம்.

    காலை உறக்கத்தில் இருந்து எழுந்ததும் மரச்செக்கு நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்த பிறகு மூலிகை பற்பொடியால் பல் துலக்க வேண்டும். (பேஸ்ட் பிரஸை தவிர்த்தல் நல்லது). காலையில் உடல் சுத்தம் செய்த பிறகு முடிந்த அளவு நல்ல தண்ணீர் குடித்தல் முக்கியம்.

    நமது உடலில் 70 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது என்பதை நாம் அறிவோம், ஆனால் தண்ணீரின் தரத்தை பற்றி விழிப்புணர்வு நமக்கு இல்லை. பில்டர், மினரல், ஆர்.ஓ. வாட்டர் என்ற, சுத்திகரிக்கப்பட்டது எனும் பெயரில் நாம் குடிக்கும் தண்ணீரின் நைட்ரஜன் திறன் எவ்வளவு என்று நாம் பார்த்து குடிக்க வேண்டும். நம் உடலில் உள்ள ரத்தம், நிணநீர் சுத்தமானதாக இருந்தால் உடலில் எந்த ஆரோக்கியக் குறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். தண்ணீருடன் உண்ணும் உணவின் காரத்தன்மையிலும், அமிலத்தன்மையிலும்மிக அதிக கவனம் இருந்தால் சர்க்கரை குறைபாடு, அதிக எடை, மற்றும் பல உடல்சுக குறைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.

    தரமற்ற சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள் ளோர்களுக்கு, காரத்தன்மை உள்ள உணவுகள் விவரம்:-

    காலை உணவு:

    நாட்டு மல்லி இலை, முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, புதினா, துளசி, வெற்றிலை, மாயிலை, கொய்யா இலை, மாதுளை இலை இவற்றுள் கிடைப்பதை கைப்பிடி எடுத்து கொள்வோம். இரண்டு நெல்லிக்காய், மஞ்சள் சிறிதளவு, மிளகு-5, லவங்கம்-2, ஏலக்காய்-2 இஞ்சி சிறிதளவு தோல் நீக்கியது, தேங்காய், இந்துப்பு சிறிதளவு, அனைத்தையும் நன்றாக அரைத்து வடிகட்டாமல் குடிக்கலாம்.

    வாழைத்தண்டு, வெண்பூசணி, குண்டு சுரக்காய், கேரட், பீட்ரூட், நூக்குல், சவ்சவ் போன்ற இயற்கையாக விளைந்த காய்கறிகளிலும் மேலே கூறியுள்ள பொருட்களை சேர்த்து ஒரு டம்ளர் சாறு குடிக்கலாம்.

    உள்தோலுடன், மேல் தோல் மட்டும் நீக்கிய பப்பாளி, மாதுளை மற்றும் கொய்யாப் பழம் இவைகளுடன் பரங்கி விதை, வெள்ளரி விதை, சன் பிளவர் விதை, ஆளி விதை, சியாசீடு எனும் திருநீற்றுப் பச்சிலை விதை இவைகளையும் சிறிதளவு கலந்து பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைப் பருப்புகளையும் சிறிதளவு சேர்த்து, மிக மிக நன்றாக மென்று, மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடலாம்.

    இவைகளை தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிட்டுப் பாருங்கள்!. மிக முக்கியம், மிக மிக நன்றாக மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். காலை 9 மணிக்கு முன்பே இவைகளை சாப்பிட வேண்டும். இன்சுலின் மற்றும் மருந்துகளில் இருந்து முற்றிலும் விடுபடவேண்டும் எனில் வேறு ஏதும் சாப்பிடாமல் இதை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதிக உடல் உழைப்பு தேவைப்படுபவர்கள் கேழ்வரகு, கம்பு கூழ் சாப்பிடலாம்.

    இட்லி தோசை வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு, பாரம்பரிய சிகப்பு அரிசி வகைகள், தோலுடன் கூடிய இயற்கை உளுந்து, சிறுதானியங்கள், வெந்தயம் கலந்து, அரைத்த மாவுடன் சிறிதளவு திரிகடுகம், திரிபலா, மஞ்சள் கலந்து இட்லி தோசை (கல் தோசை மட்டும்) செய்து சாப்பிடலாம். மேலும் இதே மாவை மல்லி, புதினா கருவேப்பிலை சட்னிகளுடன் கலந்து இட்லி செய்தும், அதிகமாக சட்டினியும் குறைவாக மாவும் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம். நன்றாக மென்று, மென்று சாப்பிடுவதும், ரசாயன கலப்பு இல்லாமல் இருப்பதும், பசித்தால் மட்டுமே சாப்பிடுவதும் மிக மிக அவசியம். கடிகார முள் பார்த்து பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடுவதும், நடு இரவு நேரங்களில் சாப்பிடுவதும், பசித்தால் சரியான உணவு உண்ணாமல் இருப்பதும், நம் உடலுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு ஆகிவிடும்.



    மதிய வேளை உணவு:

    மிக நல்ல பலன்கள் தேவைப்படுபவர்கள், உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு, சுக்கு, மல்லி, கருஞ்சீரக காப்பி சிறிது அருந்திவிட்டு, தேவைக்கு ஏற்ப 400 முதல் 500கிராம் வரை பச்சை காய்கறிகள் சாலட் செய்து வயிறு நிறைய சாப்பிடலாம். உதாரணம், பீர்க்கங்காய், புடலங்காய் இரண்டையும் லேசாக மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் விதை மற்றும் நார் போன்ற பகுதிகளை நீக்கிவிட்டு, பூ போன்று சீவி (அல்லது) மிக மிக சிறிதாக நறுக்கி அத்துடன் தேங்காய் துருகியது, மிளகு தூள் சிறிது, முளைக்கட்டிய தானியங்கள் சிறிதளவு, அவல் சிறிதளவு, விதைகள், கொட்டை பருப்புகள் சிறிதளவு, குடமிளகாய், தக்காளி, வெங்காயம், தேவையான அளவு மல்லி, புதினா, கருவேப்பிலை தாளித்தோ, பச்சையாகவோ கலந்து சாப்பிடலாம்.

    இதேபோல் கேரட், பீட்ரூட், நூக்கல், சவ்சவ், வெள்ளரி, சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, போன்ற இயற்கையாக விளைந்த காய்களை, மேலே குறிப்பிட்டுள்ளது போல் திருகி, பூ போன்று எடுத்துக்கொண்டு, குறிப்பிட்டுள்ள மற்ற கலவைகளையும் கலந்து, வேக வைக்காமல் பச்சை சாலட் ஆக சாப்பிடுவோர்கள், மிக விரைவாக தரமற்ற சர்க்கரை பாதிப்பில் இருந்து குணமடையலாம்.

    மேலும் வெந்தயக்கீரை, பசலைக் கீரை முருங்கைக் கீரை, முள்ளங்கி கீரை பீட்ரூட் கீரை போன்ற கீரை வகைகளை (இயற்கையாக விளைந்ததுதானா என்பதை உறுதி செய்தபிறகு) சுத்தமாக தயார் செய்து வைத்துக் கொண்டு இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், ஓமம் சுத்தமான பெருங்காயம், கடுகு மற்றும் தேவையான மசாலாக்களை மரச்செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற (தங்கள் மூதாதையர் பயன்படுத்திய வகைகள்) இவற்றில் சிறிதளவு பாசிப் பருப்பும் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, நன்றாக கொதிக்கும்போது நெருப்பை அணைத்துவிட்டு, தயாராக இருக்கும் கீரைகளை கலந்து, கிண்டி மூடி வைத்து பிறகு கீரையை மட்டும் ஒரு கப் சாப்பிடுங்கள். இத்துடன் ஒரு சிறிய கப் சுண்டைக்காய் அல்லது பச்சை பட்டாணி பொறியல் சாப்பிடலாம்.

    மாலை நேர உணவு:

    மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் நெருஞ்சில், கீழாநெல்லி, மூக்கரட்டை, சிறுபீளை இவைகளை ஒரு சிறிய தேக்கரண்டியும், சுக்கு, மல்லி, காபி தூளும் கலந்து, தேநீர் செய்து குடிக்கலாம். இதை ஒரு மணிக்கும், மதியம் 3 மணிக்கு இடையிலும் குடிக்கலாம். கருப்பட்டி இயற்கை வெல்லத்தில் செய்த எள்ளுருண்டை, கடலை உருண்டை, பட்டாணி, பொட்டு கடலை, மூக்கு கடலை, முளை கட்டிய வேகவைக்காத தானியங்கள், அவல், பொரி போன்ற தின்பண்டங்களையும் சிறிதளவு சாப்பிடலாம்.

    கொய்யாப்பழம், வாழைப்பழம் (தோலுடன்) போன்ற நம்ம ஊர் பழ கலவைகளை செய்து, மாலை அல்லது இரவு 7 மணிக்கு முன்பாக சாப்பிடலாம். பாரம்பரிய சிகப்பு அரிசி வகைகளிலும், மூங்கில் அரிசி, கருப்பு கவுனி, காலா நமக், பெரிய மண்வாரி, மிளகு சம்பா போன்ற மருத்துவ குணம் நிறைந்த பாரம்பரிய அரிசிகளிலும் கஞ்சி செய்து, இரவு 7 மணிக்கு முன்பாக பசித்தால் மட்டும் சிறிதளவு சாப்பிடலாம்.

    இரவு நன்றாக தூங்குவதற்கு சிறிதளவு கசகசா, தேங்காய், பேரிச்சை, அமுக்கரா போடி கலந்து நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்க சென்றால் குழந்தையைப் போல தூங்கலாம்.

    அன்பர்களே இவைகள் எல்லாம் எனது அனுபவ உண்மைகள். பல நூற்றுக்கணக்கானோர் பயனடைந்துள்ளார்கள். நீங்களும் முழுமையாக முயற்சி செய்தால் அனுபவத்தில் உண்மையை உணர்வீர்கள்.

    மருந்துகளை தவிர்க்க

    இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் நான் கூறியுள்ளதுபோல் பச்சை காய்களும், கீரை சாறுகளும் சாப்பிட்டாலே பக்க விளைவுகளையும், அதிகளவு இன்சுலினையும் தவிர்க்கலாம். மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் ஆவியில் பாதி வேகவைத்த காய்களும், கீரைகளும், சிறிதளவு அவல் உணவுகளும் எடுத்துக்கொண்டால் மருந்துகளை தவிர்க்கலாம். இன்சுலின் மருந்துகள் அனைத்தையும் முழுமையாக தவிர்க்க நினைப்பவர்கள் முழுமையாக அல்கலைன் (காரத்தன்மை) உணவு 80 சதவிகிதமும் அமிலத்தன்மை (அசிடிக்) உணவு 20 சதவிகிதமும் எடுத்தால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.

    நாம் ஒருவரையருவர் தொடர்புகொள்ளும்போதும், பார்க்கும்போதும் சாப்பிட்டீர்களா என கேட்ப்பதை சற்று மாற்றி, நிறைய பச்சை காய்கள், கீரைகள், பழங்கள் சாப்பிட்டீர்களா என கேட்டாலே நிறைய மாற்றம் ஏற்படும்.

    இவை அனைத்தையும் ஒரு நல்ல தகவல்களாக மட்டும் கருதி, இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைபெற்று, இதுபோன்ற உணவு மருத்துவத்தை கடைபிடிக்கவேண்டும்.

    கோதுமையை பற்றியும், பால் பொருள்களை பற்றியும் எழுதவே இல்லையே என நினைக்கிறீர்களோ?. ஆமாங்க அங்கதான் நிறைய ரகசியங்கள் உள்ளன. அடுத்த வாரம் பார்ப்போம்.
    ×