search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recieps"

    எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முள்ளங்கிக் கலவை - ஒரு கப்,
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    கடுகு, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    இஞ்சி - விரல் நீளத்துண்டு,
    பூண்டு - 5 பல்,
    புளி - எலுமிச்சை அளவு,
    நல்லெண்ணெய் - அரை கப்,
    உப்பு - தேவையான அளவு
    (விருப்பப்பட்டால் பேரீச்சை துண்டுகள் சேர்க்கலாம்).



    செய்முறை:

    இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த காய்கறிகளை ஈரம் போக உலர விடவும்.

    வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கவும்.

    இதனுடன் வேக வைத்து உலர வைத்த காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.

    புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பச்சை வாசனை போனதும் கடுகு - வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்போது இறக்கி, பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

    காய்கறிகளை சமைக்க நேரம் இல்லாதபோது கைகொடுக்கும் இந்த ஊறுகாய்.

    சூப்பரான வெஜிடபிள் ஊறுகாய் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அல்வா செய்யும் போது சர்க்கரை, வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் அருமையாக இருக்கும். இன்று கருப்பட்டி சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - 200 கிராம்,
    கருப்பட்டி - 175 கிராம்,
    முந்திரி - 30 கிராம்,
    திராட்சை - 30 கிராம்,
    பாதாம் - 20 கிராம்,
    பிஸ்தா - 20  கிராம்,
    நெய் - 100 கிராம்,
    தண்ணீர் - 200 மி.லி.,
    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

    ஒரு  வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை  நன்றாகக் கிளறவும்.

    பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×