search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diabetes Siet"

    நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம்.
    நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம்.

    காலை உறக்கத்தில் இருந்து எழுந்ததும் மரச்செக்கு நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்த பிறகு மூலிகை பற்பொடியால் பல் துலக்க வேண்டும். (பேஸ்ட் பிரஸை தவிர்த்தல் நல்லது). காலையில் உடல் சுத்தம் செய்த பிறகு முடிந்த அளவு நல்ல தண்ணீர் குடித்தல் முக்கியம்.

    நமது உடலில் 70 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது என்பதை நாம் அறிவோம், ஆனால் தண்ணீரின் தரத்தை பற்றி விழிப்புணர்வு நமக்கு இல்லை. பில்டர், மினரல், ஆர்.ஓ. வாட்டர் என்ற, சுத்திகரிக்கப்பட்டது எனும் பெயரில் நாம் குடிக்கும் தண்ணீரின் நைட்ரஜன் திறன் எவ்வளவு என்று நாம் பார்த்து குடிக்க வேண்டும். நம் உடலில் உள்ள ரத்தம், நிணநீர் சுத்தமானதாக இருந்தால் உடலில் எந்த ஆரோக்கியக் குறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். தண்ணீருடன் உண்ணும் உணவின் காரத்தன்மையிலும், அமிலத்தன்மையிலும்மிக அதிக கவனம் இருந்தால் சர்க்கரை குறைபாடு, அதிக எடை, மற்றும் பல உடல்சுக குறைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.

    தரமற்ற சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள் ளோர்களுக்கு, காரத்தன்மை உள்ள உணவுகள் விவரம்:-

    காலை உணவு:

    நாட்டு மல்லி இலை, முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, புதினா, துளசி, வெற்றிலை, மாயிலை, கொய்யா இலை, மாதுளை இலை இவற்றுள் கிடைப்பதை கைப்பிடி எடுத்து கொள்வோம். இரண்டு நெல்லிக்காய், மஞ்சள் சிறிதளவு, மிளகு-5, லவங்கம்-2, ஏலக்காய்-2 இஞ்சி சிறிதளவு தோல் நீக்கியது, தேங்காய், இந்துப்பு சிறிதளவு, அனைத்தையும் நன்றாக அரைத்து வடிகட்டாமல் குடிக்கலாம்.

    வாழைத்தண்டு, வெண்பூசணி, குண்டு சுரக்காய், கேரட், பீட்ரூட், நூக்குல், சவ்சவ் போன்ற இயற்கையாக விளைந்த காய்கறிகளிலும் மேலே கூறியுள்ள பொருட்களை சேர்த்து ஒரு டம்ளர் சாறு குடிக்கலாம்.

    உள்தோலுடன், மேல் தோல் மட்டும் நீக்கிய பப்பாளி, மாதுளை மற்றும் கொய்யாப் பழம் இவைகளுடன் பரங்கி விதை, வெள்ளரி விதை, சன் பிளவர் விதை, ஆளி விதை, சியாசீடு எனும் திருநீற்றுப் பச்சிலை விதை இவைகளையும் சிறிதளவு கலந்து பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைப் பருப்புகளையும் சிறிதளவு சேர்த்து, மிக மிக நன்றாக மென்று, மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடலாம்.

    இவைகளை தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிட்டுப் பாருங்கள்!. மிக முக்கியம், மிக மிக நன்றாக மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். காலை 9 மணிக்கு முன்பே இவைகளை சாப்பிட வேண்டும். இன்சுலின் மற்றும் மருந்துகளில் இருந்து முற்றிலும் விடுபடவேண்டும் எனில் வேறு ஏதும் சாப்பிடாமல் இதை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதிக உடல் உழைப்பு தேவைப்படுபவர்கள் கேழ்வரகு, கம்பு கூழ் சாப்பிடலாம்.

    இட்லி தோசை வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு, பாரம்பரிய சிகப்பு அரிசி வகைகள், தோலுடன் கூடிய இயற்கை உளுந்து, சிறுதானியங்கள், வெந்தயம் கலந்து, அரைத்த மாவுடன் சிறிதளவு திரிகடுகம், திரிபலா, மஞ்சள் கலந்து இட்லி தோசை (கல் தோசை மட்டும்) செய்து சாப்பிடலாம். மேலும் இதே மாவை மல்லி, புதினா கருவேப்பிலை சட்னிகளுடன் கலந்து இட்லி செய்தும், அதிகமாக சட்டினியும் குறைவாக மாவும் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம். நன்றாக மென்று, மென்று சாப்பிடுவதும், ரசாயன கலப்பு இல்லாமல் இருப்பதும், பசித்தால் மட்டுமே சாப்பிடுவதும் மிக மிக அவசியம். கடிகார முள் பார்த்து பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடுவதும், நடு இரவு நேரங்களில் சாப்பிடுவதும், பசித்தால் சரியான உணவு உண்ணாமல் இருப்பதும், நம் உடலுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு ஆகிவிடும்.



    மதிய வேளை உணவு:

    மிக நல்ல பலன்கள் தேவைப்படுபவர்கள், உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு, சுக்கு, மல்லி, கருஞ்சீரக காப்பி சிறிது அருந்திவிட்டு, தேவைக்கு ஏற்ப 400 முதல் 500கிராம் வரை பச்சை காய்கறிகள் சாலட் செய்து வயிறு நிறைய சாப்பிடலாம். உதாரணம், பீர்க்கங்காய், புடலங்காய் இரண்டையும் லேசாக மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் விதை மற்றும் நார் போன்ற பகுதிகளை நீக்கிவிட்டு, பூ போன்று சீவி (அல்லது) மிக மிக சிறிதாக நறுக்கி அத்துடன் தேங்காய் துருகியது, மிளகு தூள் சிறிது, முளைக்கட்டிய தானியங்கள் சிறிதளவு, அவல் சிறிதளவு, விதைகள், கொட்டை பருப்புகள் சிறிதளவு, குடமிளகாய், தக்காளி, வெங்காயம், தேவையான அளவு மல்லி, புதினா, கருவேப்பிலை தாளித்தோ, பச்சையாகவோ கலந்து சாப்பிடலாம்.

    இதேபோல் கேரட், பீட்ரூட், நூக்கல், சவ்சவ், வெள்ளரி, சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, போன்ற இயற்கையாக விளைந்த காய்களை, மேலே குறிப்பிட்டுள்ளது போல் திருகி, பூ போன்று எடுத்துக்கொண்டு, குறிப்பிட்டுள்ள மற்ற கலவைகளையும் கலந்து, வேக வைக்காமல் பச்சை சாலட் ஆக சாப்பிடுவோர்கள், மிக விரைவாக தரமற்ற சர்க்கரை பாதிப்பில் இருந்து குணமடையலாம்.

    மேலும் வெந்தயக்கீரை, பசலைக் கீரை முருங்கைக் கீரை, முள்ளங்கி கீரை பீட்ரூட் கீரை போன்ற கீரை வகைகளை (இயற்கையாக விளைந்ததுதானா என்பதை உறுதி செய்தபிறகு) சுத்தமாக தயார் செய்து வைத்துக் கொண்டு இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், ஓமம் சுத்தமான பெருங்காயம், கடுகு மற்றும் தேவையான மசாலாக்களை மரச்செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற (தங்கள் மூதாதையர் பயன்படுத்திய வகைகள்) இவற்றில் சிறிதளவு பாசிப் பருப்பும் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, நன்றாக கொதிக்கும்போது நெருப்பை அணைத்துவிட்டு, தயாராக இருக்கும் கீரைகளை கலந்து, கிண்டி மூடி வைத்து பிறகு கீரையை மட்டும் ஒரு கப் சாப்பிடுங்கள். இத்துடன் ஒரு சிறிய கப் சுண்டைக்காய் அல்லது பச்சை பட்டாணி பொறியல் சாப்பிடலாம்.

    மாலை நேர உணவு:

    மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் நெருஞ்சில், கீழாநெல்லி, மூக்கரட்டை, சிறுபீளை இவைகளை ஒரு சிறிய தேக்கரண்டியும், சுக்கு, மல்லி, காபி தூளும் கலந்து, தேநீர் செய்து குடிக்கலாம். இதை ஒரு மணிக்கும், மதியம் 3 மணிக்கு இடையிலும் குடிக்கலாம். கருப்பட்டி இயற்கை வெல்லத்தில் செய்த எள்ளுருண்டை, கடலை உருண்டை, பட்டாணி, பொட்டு கடலை, மூக்கு கடலை, முளை கட்டிய வேகவைக்காத தானியங்கள், அவல், பொரி போன்ற தின்பண்டங்களையும் சிறிதளவு சாப்பிடலாம்.

    கொய்யாப்பழம், வாழைப்பழம் (தோலுடன்) போன்ற நம்ம ஊர் பழ கலவைகளை செய்து, மாலை அல்லது இரவு 7 மணிக்கு முன்பாக சாப்பிடலாம். பாரம்பரிய சிகப்பு அரிசி வகைகளிலும், மூங்கில் அரிசி, கருப்பு கவுனி, காலா நமக், பெரிய மண்வாரி, மிளகு சம்பா போன்ற மருத்துவ குணம் நிறைந்த பாரம்பரிய அரிசிகளிலும் கஞ்சி செய்து, இரவு 7 மணிக்கு முன்பாக பசித்தால் மட்டும் சிறிதளவு சாப்பிடலாம்.

    இரவு நன்றாக தூங்குவதற்கு சிறிதளவு கசகசா, தேங்காய், பேரிச்சை, அமுக்கரா போடி கலந்து நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்க சென்றால் குழந்தையைப் போல தூங்கலாம்.

    அன்பர்களே இவைகள் எல்லாம் எனது அனுபவ உண்மைகள். பல நூற்றுக்கணக்கானோர் பயனடைந்துள்ளார்கள். நீங்களும் முழுமையாக முயற்சி செய்தால் அனுபவத்தில் உண்மையை உணர்வீர்கள்.

    மருந்துகளை தவிர்க்க

    இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் நான் கூறியுள்ளதுபோல் பச்சை காய்களும், கீரை சாறுகளும் சாப்பிட்டாலே பக்க விளைவுகளையும், அதிகளவு இன்சுலினையும் தவிர்க்கலாம். மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் ஆவியில் பாதி வேகவைத்த காய்களும், கீரைகளும், சிறிதளவு அவல் உணவுகளும் எடுத்துக்கொண்டால் மருந்துகளை தவிர்க்கலாம். இன்சுலின் மருந்துகள் அனைத்தையும் முழுமையாக தவிர்க்க நினைப்பவர்கள் முழுமையாக அல்கலைன் (காரத்தன்மை) உணவு 80 சதவிகிதமும் அமிலத்தன்மை (அசிடிக்) உணவு 20 சதவிகிதமும் எடுத்தால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.

    நாம் ஒருவரையருவர் தொடர்புகொள்ளும்போதும், பார்க்கும்போதும் சாப்பிட்டீர்களா என கேட்ப்பதை சற்று மாற்றி, நிறைய பச்சை காய்கள், கீரைகள், பழங்கள் சாப்பிட்டீர்களா என கேட்டாலே நிறைய மாற்றம் ஏற்படும்.

    இவை அனைத்தையும் ஒரு நல்ல தகவல்களாக மட்டும் கருதி, இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைபெற்று, இதுபோன்ற உணவு மருத்துவத்தை கடைபிடிக்கவேண்டும்.

    கோதுமையை பற்றியும், பால் பொருள்களை பற்றியும் எழுதவே இல்லையே என நினைக்கிறீர்களோ?. ஆமாங்க அங்கதான் நிறைய ரகசியங்கள் உள்ளன. அடுத்த வாரம் பார்ப்போம்.
    இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.
    உங்களுக்கு இதுதான் சரியான உணவு முறை என்பதனை நன்கு தெரிந்துகொண்டு அதனை பின்பற்றுங்கள்.

    காலை வெய்யிலில் குறைந்தது 7 நிமிடமாவது நடங்கள்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

    24 மணிநேரமும் ‘பிஸி’ என்ற வார்த்தை வேண்டாம். தினமும் ஒரு மணிநேரம் உங்களுக்காக ஓய்வாக மன மாறுதலாக எடுத்துக் கொள்வோம்.
    உடற்பயிற்சியோ, யோகாவோ புதிய பயிற்சி ஒன்றினை கற்றுக் கொள்வோமே.

    நல்ல திறமைதான். இருப்பினும் நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாது ‘நான் எடை அதிகம்’ எனக்கு எதுவும் திறமையாக செய்ய இயலாது’ போன்ற தன்னம்பிக்கை அற்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்னம்பிக்கை உடையவராக மாறுவோம். மனஉளைச்சல் இன்றி இருப்போம்.

    தினமும் 20 நிமிட தியானம் நாம் பழகிவிட்டோமா! இல்லையெனில் பழகிக்கொள்வோம், எந்த ஒரு விஷயத்திலும் அதிகபட்சம் 5 நிமிடத்திற்குள் நம் டென்ஷனை கட்டுப்படுத்தி இயல்பாய் செயல்படுவோம். சின்ன எடைதூக்கும் (2கி) பயிற்சியினை தகுந்த அறிவுரையோடு மேற்கொள்வோமா!

    வீட்டினை ஆரோக்கியமாய் வைக்க மேலும் ஒரு முயற்சியினை செய்வோம். மூங்கில் செடி, சோற்றுகற்றாழை செடி வளர்ப்போம்.

    நம்மை விடாதிருக்கும் ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து உறுதியாய் முனைந்து வெளிவந்து விடுவோமே, (உ.ம்) அதிக காபி, மது, கடுமையான வார்த்தைகள்.
    வீட்டில் காய்கறிகள், பழம், பொருட்கள், சமைத்த உணவு வீணாவதினை தவிர்ப்போம்.

    வீட்டில் இருப்பவர்களை நன்கு கவனித்து தன்னை மெழுகுவர்த்தியாக மாற்றிக்கொள்வது தேவையற்றது. நம்மையும், நம் உடல்நலனையும் நன்கு கவனித்துக் கொள்வோம்.

    உங்கள் நேரம் மற்றவர் முன்னேற்றத்திற்காக, உங்கள் அன்றாட முழு நேரத்தினையும் தானம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஆகவே தன்னையும் காத்து, பிறருக்கும் உதவியாய் இருப்பவரே சரியான பாதையில் செல்பவர். நாம் சரியான பாதையில் செல்வோமே.

    எப்பொழுதும் செல்போனில் பேசுவதும், படிப்பதும் என இருப்பவர்களின் ஆரோக்கியம் கெடுகின்றது என கூறுகின்றனர். இந்த பழக்கம் நமக்கு வேண்டாமே.
    வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.
    இன்று (நவம்பர் 14-ந்தேதி) உலக சர்க்கரை நோய் தினம்.

    சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தை உருவாக்கின. உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் உலக சர்க்கரை நோய் நிறுவனமும், உலக சுகாதர நிறுவனமும் இந்த ஆண்டு “குடும்பமும் சர்க்கரை நோயும்” என்ற குறிக்கோளுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறியுள்ளது.

    நம் உடம்பில் பல தொழிற்சாலைகள் இரவு பகல் பாராமல் இயங்குகின்றன. இவை இயங்குவதற்கு தேவையான எரிபொருள் நாம் உண்ணும் உணவில் இருந்தே மாவுப் பொருட்கள் மூலமாக கிடைக்கின்றன இந்த மாவு பொருட்களின் சக்தி நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் அனுப்பும் வேலையை சரியாக செய்வது நம் உடம்பில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினே. இந்த இன்சுலின் சரியாக சுரக்காவிட்டாலோ, அல்லது நம் உடம்பு அதை சரியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அல்லது அதற்கு எதிரான, சுரப்புகள் அதிகமாகி விட்டாலோ ஏற்படுவதுதான் சர்க்கரைநோய்.

    சர்க்கரை நோய் என்பது ஒரு வியாதி அல்ல.சாபமும் அல்ல. இது நம் இயக்கத்தின் ஒரு மாறுபாடு நம்மோடுதான் இது இறுதிவரை இருக்கும் ஒரு நண்பனைப் போல நாம் நம் நண்பரிடத்தில் வெளிப்படையாக துரோகம் இழைக்காமல் பழகினால் மட்டும்தான். அவன் நமக்கு ஒத்துழைப்பான் அதுபோல்தான் சர்க்கரை நோயும் நாம் சரியாக கவனமுடன் இருந்தால் 100 ஆண்டுகள் வரை சந்தோஷமாக வாழலாம்.

    சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும் :முதல் வகை இன்சுலின் சுரக்காமலே அல்லது மிகக் குறைந்த அளவில் சுரந்து இருப்பதினால் வருவது. இரண்டாம் வகை நம் உடம்பு இந்த இன்சுலினுக்கு ஈடு கொடுக்காமலோ, அல்லது குறைவாக சுரந்தாலோ அல்லது இரண்டினாலேயே அல்லது அதற்கு எதிரான சுரப்புகளாலோ வருவது. இதில் நாம் எந்த வகை என்று அறிய வேண்டும். இதற்கு நமது பாரம்பரியமும் மிகமுக்கியமான காரணமாகும்.

    இப்போது அகில உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திற்கு வரக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன, இதற்கு முக்கிய காரணம் நமது உணவுப் பழக்க வழக்கமே. அதுமட்டுமல்ல நாம் இப்போது, கலாசாரம், உணவு முறை கல்விமுறை இவற்றில் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறோம் உதாரணத்திற்கு முதலாவதாக உணவில் இருக்கும் மாவுப் பொருள் கிடைப்பது நம் பகுதியில் அரிசி, வட இந்தியாவில் கோதுமை, ஆப்பிரிக்காவில் உருளைக்கிழங்கு மேலை நாடுகளில் ஓட்ஸ் என்று சொல்லலாம். ஆனால் நாம் என்ன செய்கிறோம். இந்த நான்கையுமே எடுத்துக்கொள்கிறோம். அப்பொழுது நம் ரத்தத்தில், செல்களுக்கு அனுப்பியது போக அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் தங்கி விடுகிறது. நம் பகுதியில் கிடைக்கும் அரிசியை அளவோடு எடுத்துக் கொள்வது தான் நமக்கு நல்லது அடுத்ததாக மாவுப்பொருள் எடுத்துக்கொள்ளும் போது மென்று சாப்பிடகூடிய அளவில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம் அப்போதுதான், நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரோடு கலந்து அரைப்படும் போது, இன்சுலின் சுரப்பதற்கு ஏதுவாய் இருக்கும்

    மூன்றாவதாக நம் உடல் உறுப்புகள் வேலை செய்தால்தான் செல்களுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் அதிக அளவு குளுக்கோஸ் செல்களுக்கு தேவைப்படாமல் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.

    நான்காவதாக நம் உடம்பில் தொப்பை அதிகமாகிவிட்டால், நம் உடம்பில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறது அதன் மூலமும் குளுக்கோஸ் ரத்தத்திலேயே தங்கிவிடும். ஐந்தாவதாக நாம் டென்ஷனாகவே தொடர்ந்து ஒய்வின்றி கண் விழித்தோ மூளைக்கு வேலை அதிகம் கொடுத்தால் இன்சுலினுக்கு எதிராக சுரப்புகள் அதிகமாகி இன்சுலினை அழித்து விடும் அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும்.

    ஆறாவதாக தொற்று நோய் கிருமிகளாலோ கணையத்தில் தொற்று, கட்டி போன்றவை தோன்றினாலோ இன்சுலின் சுரப்பதற்கு பாதிப்பு ஏற்படும். அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும். மேலே கூறியவற்றில் நாம் எந்த வகையில் பொருந்துகிறோம் என்று மருத்துவர்கள் கணித்து அதற்குண்டான மருத்துவமுறைகளை அளிப்பார்கள் அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் மகிழ்ச்சியாக வாழலாம். உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பு,முறையான உடற்பயிற்சி மன அமைதி, சரியான உடல் எடை வருடாந்திர உடல் பரிசோதனை அவசியம்.வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.

    டாக்டர் எஸ். வீரபாண்டியன்,சர்க்கரை நோய் நிபுணர், செம்பனார்கோயில்.
    ×