என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    பெண் குழந்தைகளுக்கு டிரஸ் பண்ண பெரிய போராட்டம் நடக்கும். அம்மாவும், மகளும் ஒரே கலர் டிரஸ் என்று கூட சொல்லி, அவர்களை நம் வழிக்கு கொண்டு வர, டிரஸ் செலக்ட் செய்து வாங்கினால், அதை கருத்தில் கொண்டு நாம் கொடுக்கும் டிரஸ்சை அணிந்து கொள்வர். குழந்தைகளுக்கு நாம் எது நல்லது, எது கெட்டது என்று எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வர்.

    குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை.

    திருமண விழாக்களில்: திருமண விழாவுக்கு ஏற்ற உடை பட்டுப் பாவாடைதான். அந்த நேரங்களில் அவர்களுக்கு கழுத்தை ஒட்டி நெக் செயினும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும். நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வங்கி, வளையல், கைகளுக்கு மெஹ ந்தி, மோதிரம் செட், இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டால், ரொம்ப அழகாக இருக்கும். எந்த வகை நகையாக இருந்தாலும், ஒரே மாதிரி போடவும். பிளைன் நகைகள் திருமண விழாவிற்கு அழகாக இருக்கும். முடிந்தவரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல், ஒரு கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.

    ரிசப்ஷனுக்கு : மாலை நேர ரிசப்ஷனுக்கு, குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உடைகள் எது என்றால் காக்ராசோளி, அனார்கலி, சகாரா போன்ற நல்ல ஒர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் போது, டிரஸ்க்கு மேட்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும்.

    பர்த் டே பார்ட்டி: அடிக்கடி போவது இங்குதான். பார்ட்டிக்கு போகும் போது சிம்பிளாக, மார்டனாக டிரஸ் போடவும். அந்த டிரசுக்கு மேட்சாக மெல்லிய செயின், வளையல், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஒட்டினால், அழகாக இருக்கும்.

    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/3 கப்
    பாலக் கீரை - 1 கட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    உப்பு - 1/3 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உளுந்து - அரை  டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    முந்திரி - 10



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.
    தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

    கண்கள்:


    முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.

    உதடுகள்:

    தினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

    பாதம்:

    நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா? வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் க்ரீம்’ அல்லது ‘மாய்சரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

    முகம்:

    இரவு உறங்கச் செல்லும்முன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோகப்படுத்த வேண்டும். எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.

    தலைமுடி:

    இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

    இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!
    விவேகத்தன்மையுடன் செயல்படும்போது வெற்றிகள் குவியும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை தலைமைப் பண்புக்கு தகுதியாக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...
    வாழ்க்கை விளையாட்டு விஷயமல்ல. மகிழ்ச்சியாக இருப்பதாய் நினைத்து வேடிக்கையாய் பொழுதுபோக்கி கழித்தவர்கள், பின்னாளில் தனது தவறு களுக்காக தினம் தினம் வருந்திய வரலாறுகள் உண்டு. நீங்கள் மாணவப் பருவத்திலும் சரி, வேலை உலகத்திலும் சரி விளையாட்டுக் குணங்களைக் குறைத்துக் கொண்டு, விவேகத்தன்மையுடன் செயல்படும்போது வெற்றிகள் குவியும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை தலைமைப் பண்புக்கு தகுதியாக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...

    மாணவப் பருவத்தில் நிறைய மதிப்பெண் பெறுவதை லட்சியமாகக் கொண்ட சிலர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதும், இனி எல்லாம் சரியாக அமைந்துவிடும் என்று ஆமை வேக செயல்பாட்டிற்கு சென்றுவிடுவதுண்டு. அதுபோல நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மதிப்புமிக்க ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், இனி ஒரு கவலையும் இல்லை என்று அமைதி அடைந்துவிடுவது உண்டு. இன்னும் சிலர், ஏதாவது ஒரு அரசுப் பணிக்குச் சென்றால் போதும் என்று நெடிய முயற்சி செய்து பணியில் சேர்ந்ததும் தனது வளர்ச்சிக்கு இதுபோதும் என்று முடங்கிவிடுவது உண்டு.

    ஆனால் சிறிது காலத்திலேயே, தாங்கள் இருக்கும் பணி எதிர் காலத்திற்கு பலன் தருமா? என்ற பயம் வந்துவிடும். அப்போது பல தடைகள், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உங்களைச் செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும். மேல் பதவிக்கு போட்டியிட வயது வரம்பு தடையாக மாறி அவதிப்படுபவர்கள் உண்டு. இருக்கிற வேலையை விட்டுவிட்டு, அடுத்த பதவிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் உண்டு. செய்யும்வேலையுடன் கூடுதலாக பயிற்சி செய்ய முடியாமல் திணறு பவர்கள் உண்டு. குடும்பச் சூழல், பொருளாதார சூழல், கடன்கள், தேவைகள், நகர்ப்புற நெருக்கடி, கிராமப்புற நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துகொண்டு வாழ்வையே விரக்தியாக பார்க்க வைக்கும்.

    இதுபோன்ற நெருக்கடிகள் எப்போதும் வரக்கூடாதென்றால், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான செயல்பாடு அவசியம். இடையில் செயல்பாடற்ற நிலையிருந்தால் இதுபோன்ற இக்கட்டான நிலையில் மாட்டிவிடும் வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதை விளக்கும் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றை இங்கே நினைவுபடுத்திப் பார்க்கலாம்...

    உலகின் புகழ்மிக்க தொழில்அதிபரும், பணக்காரருமான ராக்பெல்லரிடம், விமானப் பயணத்தின்போது அருகில் இருந்த ஒருவர் கேட்டாராம், “உங்களிடம்தான் போதுமான அளவுக்கு செல்வம் இருக்கிறதே, இன்னும் ஏன் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்பது அந்த பயணியின் கேள்வி. அதற்கு ராக்பெல்லர் என்ன சொன்னார் தெரியுமா? “உண்மைதான், நாம் மிக உயரமான இடத்திற்கு வந்துவிட்டோம். இப்போது விமான இயக்கத்தை நிறுத்திவிட்டால் உயரமான இடத்தில் நிலைத்துவிடுவோமா? என்று பதில் கேள்வி கேட்டவர், “அது போலத்தான் செல்வம் சேர்ந்துவிட்டாலும் உழைப்பை நிறுத்த முடியாது” என்று விளக்கம் அளித்தாராம்.

    இருக்கும் நிலையில் திருப்தி அடைந்து விடக்கூடாது என்பது இதன் பொருளல்ல. எல்லா காலத்திலும் நிலைக்கும்படியான தகுதியும், உழைப்பும் உங்களிடம் இருக்க வேண்டும். அத்தகைய விவேகமும், தலைமைப் பண்பும் இருக்கும் வரை நீங்கள் வீழ்ந்துவிடாமல் இருப்பீர்கள். அது கீழ்நிலைப் பணியாக இருந்தாலும், அதைச் செய்து முடிப்பதில் உங்கள் விவேகமும், மேலாண்மைப் பண்பும் எல்லோரும் போற்றும்படியாக இருக்க வேண்டும்.

    உங்களைப் புறக்கணித்து ஒதுக்கும் வகையில் உங்கள் செயல்பாடு எப்போதும் இருந்துவிடக்கூடாது. எப்போதும் உங்களுக்கு எதிரான, எதிர்மறையான விஷயங்கள் விவாதிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. உங்களை சிறுமைப்படுத்தும் மதிப்பிடல்கள் தோன்றக் கூடாது.

    யாரும் உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் அமைய மாணவப் பருவத்திலும், வேலை உலகத்திலும் நீங்கள் செய்ய வேண்டியவை...

    எல்லாவற்றுக்கும் பொறுப்பாளராகுங்கள்: எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியும் என்று நம்புங்கள். அதிகமான வீட்டுப்பாட பயிற்சிகள், புதுமையான பயிற்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் செய்யுங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பணிகளை, உங்கள் மேல் திணிக்கப்பட்டதாக நினைக்காமல், என்னால் செய்ய முடியும் என்பதை என்பதை எல்லோருக்கும் புரிய வையுங்கள். பொறுப்பேற்று செயல்படுங்கள். மேலதிகாரியிடம் நற்பேறு வாங்குவதற்காக பணி செய்யாமல், ஆத்மார்த்தமான பணியால் மன மகிழ்ச்சி கொள்ளுங்கள். அது இன்றில்லா விட்டாலும் ஒருநாள் உங்களை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும்.

    முடிவு எடுக்க தயங்காதீர்கள் : வெற்றியைத் தடுக்கும் முக்கிய எதிரி தயக்கம். “ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதைவிட தவறான முடிவு மேலானது” என்பது வணிக வாக்கு. தொடங்காமல் இருப்பதைவிட தோல்வி பலபடி முன்னேற்றம்தான். எனவே எந்த சூழ்நிலையிலும் தயங்கி நிற்பதுடன் ஒரு முடிவெடுத்து செயல்படுவது வெற்றியை நெருங்கிச் செல்ல பெரிதும் கைகொடுக்கும். இப்போது உங்களுக்கு தடையாய் இருக்கும் சூழலை எதிர்கொள்ள நீங்கள் எடுக்கும் முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் செயல்படுங்கள், பலன் வெற்றியாய் மாற வாய்ப்புகள் அதிகம்.

    நட்புறவுச் செயல்பாடு: எப் போதும் நட்புணர்வுடன் கூடிய செயல்பாடு வெற்றியை எளிமையாக்கும். சிம்மாசனத்தை நிலைப்படுத் தும். நீங்கள் வகுப்பின் தலைமை மாணவராகவோ, பணியில் குழுவின் தலைவராகவோ, அதிகாரி யாகவோ இருக்கலாம். ஆனால் அனைவருடனும் இணக்கமான நட்புறவு கொண்டிருந்தால் மட்டுமே உங்கள் பொறுப்பில் நிலைத்திருக்கவும், மேலும் உயரவும், வெற்றி காணவும் முடியும். வெறும் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தி வெற்றி கண்டவா்கள் இல்லை.

    தன்னிலை அறிதல்: எந்த நிலையிலும் தனது செயல்பாடுகளை பரிசோதித்துப் பார்ப்பவர்கள் பின்னடைவைச் சந்திப்பதில்லை. மாணவப் பருவத்தில் நீங்கள் உங்கள் முந்தைய தேர்வுகளையும், படிக்கும் நேரத்தையும், மதிப்பெண் உயர்வையும் ஒப்பிட்டு உங்கள் செயல்பாட்டை மதிப்பிடுங்கள். அது உங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும். வேலை உலகில், தங்கள் குழுவினர் மத்தியிலும், உயர் அதிகாரி அளவிலும் உங்களின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா? உங்களைப்பற்றிய எதிர் மறையான எண்ணங்கள் இருக்கிறதா? என்பதை சுயமதிப்பீடு செய்யுங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி தன்மதிப்பீடு செய்து கொள்வது வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

    இத்தகைய விவேகமான செயல்பாடு வாழ்வில் என்றும் சரிவின்றி நிலைத்த வெற்றியைத் தரும்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    மேலும் நோயுற்ற தன்மை, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிப் படுதல், வாழ்க்கைத்தரம் குறைந்து, இறப்புக்கான வாய்ப்பு அதிகரிக்க வழிவகுக்கும்.

    புற்றுநோயுடன் கூடிய சிலர் புற்றுநோய்க்கு முன்பாகவோ, சிகிச்சையின் போதோ அல்லது அதற்கு பிறகோ மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். மனச்சோர்வு ஒரு வகை மனநிலை கோளாறு ஆகும். மன அழுத்தம் புற்றுநோய் சிகிச்சையை மேலும் கடினமாக்கும்.

    இதன் விளைவாக, மன அழுத்தத்தை அடையாளம் காண்பது மற்றும் சிகிச்சை அளிப்பது புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய பகுதிகள் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான ஐந்து மிகப்பெரிய புற்றுநோய்கள் உள்ளன. மார்பகபுற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்வழி குழிபுற்றுநோய், நுரையீரல் மற்றும் கோளரெக்டல் புற்று நோய் ஆகியவையாகும்.

    47.2 சதவிகித புற்றுநோய்களுக்கு இந்த ஐந்து கணக்குகள் தான் காரணம்.இந்தியாவில் இருதய நோய்க்குப் பிறகு மரணத்தின் இரண்டாவது மிகவும் பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளது. புகையிலையை பயன் படுத்துதல் (உதாரணத்துக்கு புகையிலை, சிகரெட்டு பழக்கம்) உலகளாவிய ரீதியில் மரணத்தை கொடுக்கக் கூடிய மிகப்பெரிய ஒன்றாகும்.

    இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்கள் காரணமாக ஒவ்வொரு நாளும் 2,500 பேர் இறக்கிறார்கள். புகையிலை (புகையிலை மற்றும் புகைபிடித்தல்) 2018-ம் ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்களில் 3,17,928 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் உள்ளது. கிராமப்புற பெண்கள் நகர்ப்புற பெண்களை ஒப்பிடும்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரிக்கும் ஆபத்தில் உள்ளனர்.

    இந்தியாவில் உள்ள பெண்களில் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இந்திய நகரங்களில் உள்ள பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பக, வாய்வழி, கர்ப்பப்பை வாய், இரைப்பை, நுரையீரல் மற்றும் கோளரெக்டல் புற்றுநோய் போன்ற முக்கிய பொது சுகாதாரம் தொடர்பான புற்றுநோய்கள் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் மட்டும் குணப்படுத்தப்படலாம்.

    மனச்சோர்வு அறிகுறிகள், சிகிச்சைக்கு பிறகோ அல்லது எந்த நேரத்திலும் தோன்றும். இந்த அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும்.

    கடுமையான மன அழுத்தம் ஒரு நபரின் உறவு மற்றும் தினசரி வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. இது பெரும் மன தளர்ச்சி சீர்குலைவு என்று அழைக்கப்படுகிறது.
     
    புற்றுநோயால் மனநிலை தொடர்பான அறிகுறிகள்:

    நீங்கள் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பின், உங்கள் மனநல சுகாதார நிபுணர் மற்றும் மனநல மருத்துவரிடம் பேசுங்கள், குறிப்பாக 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மனநிலை தொடர்பான அறிகுறிகள்

    1. மனம் வருந்துதல்
    2. சோகமாக உணர்தல்
    3. நம்பிக்கையற்றதாக உணர்தல்
    4. எரிச்சலாக உணர்தல்
    5. பயனற்றதாக உணர்தல்
    6. நீங்கள் முன்பு அனுபவித்த நடவடிக்கைகள் மீது ஆர்வம் இழப்பு
    7. நண்பர்கள் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தல்
    8. தினசரி நடவடிக்கைகளை செய்ய ஊக்கத்தை இழத்தல்
    9. அறிவாற்றல் குறைவு அறிகுறிகள்
    10. கவனம் செலுத்தும் திறன் குறைவு
    11. முடிவுகளை எடுக்க சிரமம்
    12. எதிர்மறை எண்ணங்கள்.



    உளவியல் சீர்குலைவுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் எதிர்மறையான தாக்கத்தை பிரதிபளிக்கிறது. மேலும், புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவர் மற்றும் மனநல நிபுணர்களின் கூட்டு சிகிச்சை இன்றியாமையாதது. இந்தியாவில், பெரும்பாலான புற்றுநோய் மையங்களில் முழுநேர மனநல நிபுணர்கள் இல்லை.

    உளவியலாளர்கள் அல்லது மனநல சார்ந்த அமைப்புகள் போன்றவை முழுநேர மனநல சுகாதார நிபுணர்களுடன் தான் இதற்கு தீர்வுக்கான முடியம்.

    மன அழுத்தம் மற்றும் சிகிச்சைமுறைகள்:

    மன அழுத்தம் கொண்டவர்கள் பொதுவாக சிறப்பு சிகிச்சையிலிருந்து பயனடைகிறார்கள். மிதமான அல்லது கடுமையான மனத் தளர்ச்சி கொண்டவர்களுக்கு, உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகளின் ஒரு கலவை பெரும்பாலும் மிகவும் பயனுள்ள அணுகுமுறை ஆகும். லேசான மனச்சோர்வு கொண்ட சிலருக்கு, ஒரு மனநல நிபுணருடன் பேசுவது மனச்சோர்வு அறிகுறிகளைத் தடுக்க போதுமானதாக இருக்கலாம்.

    உளவியல் சிகிச்சை மனநல வல்லுநர்கள்:

    உளவியல் சிகிச்சை மனநல வல்லுநர்கள், உரிமம் பெற்ற ஆலோசகர்கள், உளவியலாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோர் புற்று நோயை சமாளிக்கும் திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிர்மறை எண்ணங் களை சமாளிப்பது பற்றியும், குழு சிகிச்சை முறைகள் பற்றியும் கற்றுக்கொடுப்பார்கள். உளவியலாளர்கள், மருந்து களை பரிந்துரைக்கக்கூடிய மனநல நிபுணர்களின் ஆலோ சனையைப் பெறுவது மேலும் நன்று.

    புற்றுநோயுடன் வாழும் ஒருவருக்கு சாதாரண வாழ்க் கையில் இருந்து ஏற்பட்ட மாறுதல் பல அச்சங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தும்.

    முதல் முறையாக புற்றுநோய் சிகிச்சைகள் அனுபவிக்கும் நோயாளிகள் அவர்கள் முன்கூட்டியே குமட்டல் மற்றும் வாந்தியையும் உருவாக்கும் மருந்துகளால் மிகவும் கவலை அடைந்து இருக்கலாம்.

    பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களால் மட்டுமே மனச்சோர்வை சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க முடியும். இதில் நோயாளிகள் பல்வேறு சிகிச்சையின் பல்வேறு பகுதிகளை கற்பனை செய்து கொள்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆறுதல் அளிக்கும் திறனைக் கற்றுக்கொள்வது மிகக்குறைவு. நோயாளிகளை மன அழுத்தம், அசவுகரியம் அல்லது வலி ஆகியவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்ப சிகிச்சை அளிப்பார்கள்.

    இந்த உத்திகள் சிகிச்சைக்கு முன்பும் பின்பும், குமட்டல் மற்றும் வாந்தியையும் குறைக்கலாம்.பக்க விளைவுகளின் தீவிரத்தை குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. யோகா பயிற்சிகள் புற்று நோய்க்கான அறிகுறிகளை அல்லது சிகிச்சையின் போது ஏற்படும் பாதகமான விளைவுகளை நிர்வகிக்க உதவுகிறது. அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

    மனம் மற்றும் உடல் நலம் ஆகியவை ஒருங்கிணைந்து காணப்பட்டால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கவலை, மன அழுத்தம், போன்றவைகளை குணப்படுத்தலாம்.

    அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை:

    புற்றுநோய்க்கு பிரத்யேக உளவியல் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் புற்றுநோயாளிகளில் மன தளர்ச்சி அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு அறிவாற்றல் -நடத்தை சிகிச்சை முறையை பின்பற்றலாம் இது புற்றுநோய் இருந்தாலும் அதைக் கடந்து மன உணர்வை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கும். மற்றும் ஒரு புற்றுநோயாளியின் மனதில் ஏற்படும் தவறான அல்லது எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.

    ஆண்டிப்பிரசண்ட் மருந்து:

    மனத் தளர்ச்சியின் தீவிரத்தன்மை காரணமாக ஏற்படும் லேசான மனச்சிக்களுக்கு சிகிச்சையளிக்க வழக்கமான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். கடுமையான மனத் தளர்ச்சிக்கு மட்டும் ஆண்டிப்பிரசண்ட் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். பல்வேறு வகையான மனச்சோர்வு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த காரணிகளின் அடிப்படையில் மருத்துவர் மிகச் சிறந்த மனச்சோர்வைத் தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வார்.

    vcopevandhana@gmail.com
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான செஸ்வான் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 250 கிராம்,
    மைதா - 3 டீஸ்பூன்,
    கார்ன் பிளவர் - 2 டீஸ்பூன்,
    முட்டை - ஒன்று,
    காய்ந்த மிளகாய் - 50 கிராம்,
    வெங்காயம் -1,
    குடைமிளகாய் - 1,
    தக்காளி - 1,
    பூண்டு - 1,
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவைக்கு,
    தக்காளி சாஸ் - சிறிது.



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு அதனுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று நீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.

    பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாய், தக்காளி சாஸ் சேர்க்கவும்.

    கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும்.

    கடைசியாக பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான செஸ்வான் சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிஸ்தா பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
    பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது. பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவக்குணங்களை அறிந்து கொள்ளலாம்.

    பிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்தமாக்குகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இது ஒரு அவசியமான பொருளாக கருதப்படுகிறது. இது செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.

    பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது செல்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது, நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்சிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கிறது. மேலும் தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் நியாபக சக்தி அதிகரிக்கும்.

    இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது தோல் நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பருப்பில் உள்ள வைட்டமின் ஈ ஆனது புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

    இந்த பருப்பை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது, கண்நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கண்ணுக்கு தெளிவான பார்வையை கொடுக்கக் கூடியது.

    இதய நோய் ஏற்படுவதில் இருந்து இந்த பருப்பு நம்மை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலிலுள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
    மனைவியிடம் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் இருப்பதற்கு எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த விஷயங்களை கேட்கவே கூடாது...
    மனைவியிடம் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு, எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த விஷயங்களை கேட்கவே கூடாது...

    சைலன்ஸ் என்பது இருமுனை கத்தி போல. சில சமயம் பல சண்டைகள் உண்டாகாமல் தடுக்க காரணமும் சைலன்ஸ் தான். பல சமயம் சண்டைகள் பெரிதாக காரணமாக இருப்பதும் சைலன்ஸ் தான்.

    பெண்கள் வெளியே செல்லும் வேலைகளில் ரெடியாக சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வார்கள். எனவே, அவர்கள் ரெடியாகிக் கொண்டிருக்கும் போது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சென்று முடிஞ்சதா? இன்னுமா ரெடி ஆகுற? லேட் ஆகுது என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். காரணம், நீங்கள் கேள்வி, கேட்க, கேட்க பெண்கள் ரெடியாகும் நேரம் மட்டுமல்ல, உங்கள் மீதான க்ரைம் ரெட் கூடிக் கொண்டே போகும்.

    முடிந்த வரை உங்கள் துணையின் அந்த மூன்று நாட்கள் மாதத்தின் எந்த நாளில் வர சாத்தியம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் புருஷ லட்சணம் தான். அல்லது, சென்ற மாதத்தில் உங்கள் மனைவிக்கு எந்த நாளில் பீரியட் ஸ்டார்ட் ஆனது என்பதையாவது மறக்காமல் இருக்க வேண்டும். சிலசமயம் அவர்களே இதை மறக்க வாய்ப்பிருக்கிறது. இது எதுவும் தெரிந்துக் வைத்துக் கொள்ளாமல், திடீரென ஒரு நாள் சென்று அந்த நாள் குறித்த குழப்பமான கேள்விகள் கேட்டால்... நிச்சயம் ஒரு ருத்ரதாண்டவதை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.



    எக்காரணம் கொண்டும்... தெரிந்தோ தெரியாமலோ மற்றொரு பெண்ணின் உடல் வாகினை பற்றி புகழ்ந்து பேசுவதோ, விமர்சிப்பதோ வேண்டாம். அது வேறு பெண்களாக தான் இருக்க வேண்டும் என்றில்லை... உங்கள் துணையின் தோழி, சகோதரி என யாராக இருந்தாலும் சரி... அதனால் வெளிப்படும் கோபம், தாக்கம், விளைவுகள் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்.

    உங்கள் துணைக்கு பிடித்த உணவு உங்களுக்கு பிடிக்காது என்றாலோ, அல்லது அவர் சாப்பிட போகும் உணவில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது..., அது அதிகம் சாப்பிட்டால் அது வரும், என்று அவர்கள் ஆசையாக சாப்பிட செல்லும் போது சொல்ல வேண்டாம். சாப்பிட்டு முடித்த பின்னர் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை எடுத்துக் கூறுங்கள்.

    சில சமயம் ஆண்களிடம் வெளிப்படும் கெட்ட பழக்கமே ஒப்பிடுவது தான். ஏதாவது ஆசையாக சமைத்து கொண்டு வந்து கொடுத்தால் நன்றி கூறி சாப்பிட்டு விடுங்கள். அதைவிட்டு... என் அத்தை பொண்ணு நல்லா பண்ணுவா... அம்மா சூப்பரா சமைப்பாங்க... அந்த பிரெண்ட் இதுல எக்ஸ்பர்ட் என்றெல்லாம் வேறு யாருடனாவது ஒப்பீடு செய்தால்.. நாளப்பின்ன உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. ஒருசில நாள் இரவும் பட்டினி போடப்படலாம்.

    கணவன் - மனைவி உறவுல நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு தவறு தான். ஆனா, சின்ன சின்ன எதிர்பார்ப்புகள கூட, இதெல்லாம் நீயே பண்ணிக்க மாட்டியா என்று தட்டி கழிப்பது... அதைவிட பெரும் தவறு. பிறகு எதற்கு காதலன் - காதலி ; கணவன் - மனைவி என்ற உறவு. உண்மையில் நமது உறவினை இணைத்து வைத்திருக்கும் பாலத்தின் ஆரோக்கியம் இந்த சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தான் அடங்கி இருக்கிறது. இதை நாம் செய்ய மறந்துவிட்டால், தவறிவிட்டால்.. அந்த பாலத்தில் நிச்சயம் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு.
    குழந்தைகள் புத்தகத்தை முகத்திற்கு மிகஅருகில் வைத்து படிப்பது, டிவி மிக அருகில் சென்று பார்த்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர் குழந்தைகளை கண் மருத்துவரிடம் காட்ட வேண்டியது மிகவும் அவசியம்.
    நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். நல்ல பார்வை இருப்பின் குழந்தைகள் சுறுசுறுப்புடனும் இருப்பர். எந்த குழந்தையும் எனக்கு பார்வை குறைவாக உள்ளது என்று சொல்லமாட்டார்கள்.

    குழந்தைகள் புத்தகத்தை முகத்திற்கு மிகஅருகில் வைத்து படிப்பது, பிழையாக எழுதுவது, படிப்பின் கவனக்குறைவு, நாட்டமின்மை, அருகில் இருக்கும் மாணவர்களை பார்த்து எழுதுதல், டி.வி மிக அருகில் சென்று பார்த்தல் இவற்றில் ஏதாவது தென்பட்டால் பெற்றோர் குழந்தைகளை உடனே அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி டாக்டர் ஆலோசனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

    கண்களை பாதுகாப்பது அவசியம். மேலும் குழந்தைகளுக்கு கீரை வகைகள், பப்பாளி, கேரட், மீன் போன்றவை உணவாக கொடுப்பதுடன், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், பார்வையுடனும் இருப்பார்கள். 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை ஒரு வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்யவேண்டும்.

    குடும்பத்தில் யாரேனும் கிளேகோமா குறைபாடு இருந்தால் குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்தல் அவசியமாகும். மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகள் பயன்படுத்துவதால் கண்ணீர் அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர சரிசெய்வது கடினம்.

    பிரஷரை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கின்ற நல்ல நிலையில் உள்ள கண் நரம்பை பாதுகாத்து, மட்டும்தான் மருந்து, பாதிக்கப்பட்ட நரம்பை சரிசெய்வதற்கு அல்ல என்பதை கிளேகோமா உள்ளவர்கள் புரிந்து மருந்தை கவனமாக மருத்துவரின் ஆலோசனைபடி குறித்த நேரத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ‘பென் ஐ கேர்’ டாக்டர்கள் டி.பென்ரவீந்திரன், பி.பிரவின்தாம்சன் ஆகியோர் தெரிவித்தனர்.
    இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.
    வரும்முன் காத்தலே சிறந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் உடல்நல விஷயத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்தான் உடலை கவனிக்கிறோம். மூட்டுகளின் ஆரோக்கியத்திலும் இப்படித்தான் நடந்துகொள்கிறோம். மூட்டுவலி வந்து நடக்க முடியாத நிலை ஏற்படுகிற வரை அதைக் கண்டுகொள்வதில்லை.ஆனால், இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

    எங்கேயாவது அடிபட்டு மூட்டுகளில் காயம் ஏற்படும்போது அது தீவிரமான பாதிப்பைக் கொடுப்பதையும் தவிர்க்கலாம். மூட்டுகளைப் பலப்படுத்தும் பயிற்சிகள் சிலவற்றை இங்கே பார்ப்போம். இந்தப் பயிற்சிகளை வெறும் படங்களைப் பார்த்து நீங்களாக செய்ய வேண்டாம். மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையுடன் செய்வதுதான் பாதுகாப்பானது.

    * ஸ்ட்ரெயிட் லெக் ரெயிஸ் (Straight Leg Raise)

    தரைவிரிப்பின் மேல் சமதளமாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். ஒரு காலை லேசாக மடக்கி, உள்ளங்கால் தரையைத் தொடும்படி வைத்துக் கொள்ளவும். இன்னொரு காலை வளைக்காமல் நேராக நீட்டியபடி உங்களால் முடிந்த உயரத்துக்குத் தூக்கவும். ஒவ்வொரு காலுக்கும் இதே போல 10 முதல் 15 முறைகள் செய்யவும்.



    * ஹாம்ஸ்ட்ரிங் கர்ல் (Hamstring Curl)

    தரைவிரிப்பின் மேல் குப்புறப் படுத்துக் கொள்ளவும். கால்களை மடக்கி உங்கள் குதிகால் பகுதியானது பிட்டப்பகுதியைத் தொடும்படி மடக்கவும். அதே நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டுப் பழைய நிலைக்குத் திரும்பவும். 15 முறை செய்யவும்.நின்ற நிலையிலும் இதைச் செய்யலாம். நாற்காலியின் பின்பக்கத்தைப் பிடித்தபடி நின்றுகொள்ளவும். ஒவ்வொரு காலாக உயர்த்தி குதிகால் பிட்டத்தைத் தொடும்படி உயர்த்தி பிறகு கீழே இறக்கவும். இன்னொரு காலுக்கும் செய்யவும்.

    * வால் ஸ்குவாட்ஸ்(Wall Squats)

    சுவரில் சாய்ந்தபடி நேராக நிற்கவும். நாற்காலி இல்லாமலேயே நாற்காலியில் அமர்வது போலக் கற்பனை செய்துகொண்டு உட்காரும் நிலைக்கு வரவும். கைகள் சுவரைப் பிடித்துக்கொள்ளலாம் அல்லது கைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளலாம். உட்கார்ந்திருப்பது போன்ற நிலையில் 10 நொடிகள் இருக்கவும். பயிற்சியின் ஆரம்பத்தில் இது சிரமமாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் பயிற்சியின் நேரத்தை ஒவ்வொரு நொடியாக அதிகரித்தால் சிரமம் தெரியாது. இந்தப் பயிற்சிகளை தினமும் செய்துவந்தாலே மூட்டுகளும் தசைகளும் வலுவாகும்.

    கேழ்வரகில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - தேவையான அளவு,
    கேரட் - 3,
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு உப்பு சேர்த்து கலந்து தோசை மாவை விட சற்று திக்காக கரைத்து புளிக்க விடவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, துருவிய கேரட் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும், மாவை கல்லில் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

    ஊத்தப்பத்தின் மீது, கலந்து வைத்துள்ள கேரட், வெங்காய, மிளகாய் கலவையை தேவையான அளவு தூவி, நன்கு வேக விடவும்.

    தோசை ஒரு பக்கம் வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைக்கவும்.

    இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம் ரெடி!

    கேழ்வரகு - கேரட் ஊத்தப்பத்தை தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகளுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையைவிட அதிகமான ஊட்டச்சத்து இதில் உள்ளது.
    இயற்கையோடு இயைந்த தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவில் அதிகமாக கேழ்வரகு பயிர் செய்யப்பட்டு வருகிறது.

    வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. சாகுபடிக்கு வண்டல் மண் மிகவும் ஏற்றது. உரமும் பூச்சிக் கொல்லியும் தேவையில்லை. கேழ்வரகு ஆண்டுகொரு முறை விளையும் சிறுதானியப் பயிர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பைக் கூழ்கொடுப்பது வாடிக்கையாக உள்ளது. இன்று வரை வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாட்டின் பிரதான உணவு கேழ்வரகு தான்.

    கொழுப்பைக் குறைக்கும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமா நீங்கும், ரத்தம் தூய்மை அடையும், உடலில் வெப்பத்தை சமன் செய்யும், குளிர்ச்சி அளிக்கும், உயர் ரத்த அழுத்தம் சீராகும், உடல் ஓய்வும், வலிமையும் பெறும். ஒற்றைத் தலைவலி தீரும், கல்லீரல்- இதய நோய் விலகும், குடலுக்கு வலிமை அளிக்கும், குடல் புண் குணமடையும், சரும ஆரோக்கியத்துக்கு உதவும், தூக்கமின்மையைப் போக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பசி தணிக்கும், பல், எலும்புத் தேய்மானம் சரியாகும், மலச் சிக்கலை விலக்கும், ரத்த சோகையை ஒழிக்கும்

    ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையைவிட அதிகமான ஊட்டச்சத்து இதில் உள்ளது. குறைந்த கொழுப்பு, நிறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. பாலைவிட மூன்று மடங்கும், அரிசியை விட 10 மடங்கும் கால்சியம் உள்ளது. கேழ்வரகில் ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    ×