என் மலர்
ஆசிரியர் தேர்வு
- இந்த பாடலின் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார்.
- விஜய் யேசுதாஸ் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இந்த பாடலை பாடியுள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலும் சமீபத்தில் வெளியாகியது. இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடினர். இதனால் பெரிய அளவில் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் 3-வது பாடலான சீனிக்கல்லு, பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். விஜய் யேசுதாஸ் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இந்த பாடலை பாடியுள்ளனர்.
- இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா மோதலாகும்.
- கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் இலங்கையே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேச அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்த நிலையில் அபுதாபியில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோற்றது.
அதனால் இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா மோதலாகும். இதில் தோற்கும் அணி ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.
பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் சகிப்சதா பர்ஹான், பஹர் ஜமான் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சைம் அயூப், கேப்டன் சல்மான் ஆஹாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. மிடில் வரிசை தான் அவர்களின் பலவீனமாக உள்ளது. அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் வலு சேர்க்கிறார்கள்.
சாரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஷனகா, கமிந்து மென்டிஸ் என பேட்டிங் பட்டாளத்துக்கு குறைவில்லை. பந்து வீச்சில் நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா, ஹசரங்கா நம்பிக்கை அளிக்கிறார்கள். வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இலங்கை அணி தவறுகளை திருத்திக் கொண்டு சாதிக்க முயற்சிக்கும்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் பாகிஸ்தானும், 10-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் இலங்கையே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
- பவன் கல்யாணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நடித்துள்ள 'They Call Him OG' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பினார்.
விழா மேடைக்கு வந்த பவன் கல்யாண் வாளை சுழற்றியபோது, அது அவரது பாதுகாவலரின் அருகில் சென்றது. இதில் அந்த பாதுகாவலர் சுதாரித்துக்கொண்டதால் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பவன் கல்யாணின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்து வருகின்றனர்.
- முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கினார்.
- மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
தேசிய தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை. பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது" என்று தெரிவித்தார்.
மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார், பின்னர் குஜராத்தின் முதல்வரானார், பின்னர் மிகவும் பிரபலமான பிரதமரானார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது என்று அமித் ஷா தெரிவித்தார்.
தொடர்ந்து, முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கியதாக அமித் ஷா நெகிழ்ச்சி தெரிவித்தார்.
- 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
- பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
பாலிவுட் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
கடந்த 18-ம் தேதி வெளியான இப்படத்தில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய ரன்பீர் கபூர் சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார்.
தொடரின் ஒரு காட்சியில், ரன்பீர் கபூர் திரையில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இ-சிகரெட் புகைப்பது இடம்பெற்றுள்ளது.

இது குறித்து வினய் ஜோஷி என்ற நபர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாட்டில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை இந்தக் காட்சி கவர்ச்சிகரமானதாகக் காட்டுகிறது என்றும், இது இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் அவர் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ரன்பீர் கபூர், தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இளைஞர்களை மோசமாக பாதிக்கும் இதுபோன்ற உள்ளடக்கங்களைத் தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டில் இ-சிகரெட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்களை விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த முழு விஷயத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.
- 2 மணிநேரம் பயணித்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.
- ஒரு ஆர்வத்தில் தான் இப்படி செய்ததாக அவர் கூறியதை கேட்டு அதிகாரிகளே மலைத்துப்போயினர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒளிந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான்.
நேற்று காலை 11 மணிக்கு ஆப்கானிஸ்தான் விமான நிறுவனமான KAM ஏர் விமானத்தில் சிறுவன் இந்த விபரீத சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். 2 மணிநேரம் பயணித்து டெல்லி விமான நிலையத்தை அந்த விமானம் அடைந்த நிலையில் சிறுவனை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
ஆப்கானிய குர்தாவுடன் அந்த சிறுவன் காணப்பட்டான். அவன் பத்திரமாக இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன்பின் சிறுவன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
விசாரணையில், காபுல் விமான நிலயத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்து விமானத்தின் கியர் பெட்டியில் ஏறி ஒளிந்துகொண்டதாக சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளான். ஒரு ஆர்வத்தில் தான் இப்படி செய்ததாக அவர் கூறியதை கேட்டு அதிகாரிகளே மலைத்துப்போயினர்.
இதன்பின் மதியம் 12.30 மணிக்கு அதே விமானத்தில் சிறுவன் ஆப்கானிஸ்தானுக்கே பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டான்.
- கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் உபரி வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது.
- வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவியது.
ஒடிசா மாநிலம் 2022-23 நிதியாண்டில் உபரி வருவாய் ஈட்டியதில் இந்தியாவின் 3ஆவது பெரிய மாநிலம் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19,456 கோடி ரூபாய் உபரி வருவாய் ஈட்டியது பெருமிதம் என பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டில் இருந்து 24 வருடம் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
"விவேகமான நிதி மேலாண்மையுடன், 2022-23 ஆம் ஆண்டில் வருவாய் உபரியைக் கொண்ட முன்னணி மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் "கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் ஒடிசா அதன் சொந்த வளங்களில் இருந்து வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது. வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஏராளமான நலத்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் மாநிலத்திற்கு உதவியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
- ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.
- பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்த பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவின் நெய், பனீர் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவினின் அனைத்து வகை நெய்யும் லிட்டருக்கு ரூ.40 வரை குறைத்து சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனத்தைவிட ரூ.50 வரை குறைவாக 500 கிராம் வெண்ணெய் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
200 கிராம் பனீர் சலுகை விலையில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆவின் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் காரணமாகவும் பண்டிகை கால சலுகையாகவும், ஒரு லிட்டர் ஜார் நெய் ரூ. 690/- லிருந்து ரூ.650/-குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.120/-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110/-க்கும், ரூ.300/- க்கு விற்பனை செய்யப்பட்ட 1/ 2 கிலோ பனீர் ரூ.275/- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய அளவில் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவளம் பொதுமக்கள் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
மேலும், ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.
மேலும் அவ்வப்பொழுது சந்தை நிலவரத்திற்க்கு ஏற்றவாறு இதர கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் போல் பால் மற்றும் பால் பொருட்களின் விNைDI மாற்றியமைக்காமல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்த பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் uns மற்றும் பால் உப பொருட்களை கர்வோருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசால் கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3/-குறைந்து ஆணையிட்டது. இதன் மூலம் தினமும் சுமார் 1.5 கோடி நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.இதுவரை பொதுமக்கள்கு 1073/- கோடியை சேமித்துள்ளனர்.
2023 ஆம்ஆண்டுமாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள். பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டர் ஒன்றுக்கு ரூபாம் 3 வழக உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகின்றனர். 18.12.2023 முதல் இதுவரை ரூ 635 கோடி தமிழ்நாடு அரசால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் இணையம், ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களின் நிதி கட்டமைப்பை வலுபடுத்திட சுமார் 675 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் ஒன்றிய அரசாங் GST வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்வதாலும் மற்றும் பால் தரத்திற்கேற்ப உரிய விலையில் பால் கொள்முதல் செய்வதாலும் ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் கொண்டு சந்தையில் குறைவான விலையில் தாந்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது.
தற்பொழுது ஜிஎஸ்டி (GST) சதவிகிதகுறைப்பின் காரணமாகவும் மற்றும் பண்டிகை கால சலுகையாகவும் ஆவினின் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 40/- ரூபாய் விலை குறைத்து பொது மக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
மேலும் வெண்ணெய் விலையானது இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை விட ரூ.10/- முதல் ரூ.50/- வரை குறைவான விலையில் (அரை கிலோ வெண்ணெய் ரூபாய் 275/- ) ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
மேலும் ஆவின் 200 கிராம் பனீர் ரூபாய் 110/- என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை.
- இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த துணை ஆணையர் வனிதா இன்று ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தன்னுடைய இரண்டு வருட வாழ்க்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கமிஷன் அலுவலகத்தில் கொடுத்த புகாரை இங்கே அனுப்பி வைத்துள்ளனர். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். முதல் திருமணம் முடிந்த நிலையில் என்னை திருமணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதனால்தான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என குற்றம்சாட்டுகிறேன். புகாரை வாபஸ் பெற வேண்டும் என யாரும் என்னை மிரட்டவில்லை. அது தொடர்பாக அணுகவில்லை. எனது குழந்தைக்கு மிரட்டல் இருப்பதாக கேள்ளவிப்பட்டேன். அதற்கான பாதுகாப்பை எடுப்பார்கள்.
எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை. அவர் வெளியே ஜாலியாக சுற்றலாம். நான் போராடுவேன். புகார் நான் கொடுத்துள்ளதால் என்னை முதலில் அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், மாதம்பட்டி ரங்கராஜை அழைத்து விசாரணை நடத்துவார்கள். கண்டிப்பாக அவர் மீது எப்ஐஆர் போடுவார்கள். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன். இதனால் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பாசிட்டிவ் ஆன ரிப்ளை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். என்ன மாதிரியான ஆதாரங்கள் கொடுத்துள்ளேன் என்பதை தற்போது கூற இயலாது.
இவ்வாறு ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.
- இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
- அமெரிக்கா, எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒப்பந்தத்தின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்கா- ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. இருந்தபோதிலும், மேலும் ஒரு வருடத்திற்கு அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா, எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒப்பந்தத்தின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். என்றார்.
ரஷிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்போது புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் 5 பதக்கங்களை இந்தியா வென்றது.
- இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
73-வது ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 13 முதல் 21 வரை சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் டிராக் மற்றும் ரோடு போட்டிகளை உள்ளடக்கியது. இதில் கொலம்பியா, சீன தைபே, ஸ்பெயின், இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, சிலி, எக்குவடார், ஜெர்மனி, பராகுவே, சீனா, தென் கொரியா, பெல்ஜியம் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனை பங்கேற்றனர்.
இந்த தொடரின் முடிவில் ஒட்டுமொத்தமாக 5 பதக்கங்களை இந்தியா வென்றது. அதில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் (வெள்ளிப் பதக்கங்கள் இல்லை) ஆகும். இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது.
இதன்மூலம் உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
- வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
- புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் இன்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.83,440ஆக விற்பனையாகிறது.
காலையில் ஏற்கனவே ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.83,440ஆக உயர்ந்து விற்பனையாகிறது.






