என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இப்படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    'அட்டக்கத்தி' தினேஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'கருப்பு பல்சர்' படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை முரளி கிரிஷ் இயக்கியுள்ளார். முரளி இதற்கு முன்பு 'சிவா மனசுல சக்தி' மற்றும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

    இப்படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டாக்டர் சத்ய முரளி கிருஷ்ணன் தயாரித்த இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    'கருப்பு பல்சர்' படத்தில் தினேஷ் இருவேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவராகவும் மற்றொருவர் மதுரை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியால் ஏற்படும் முன்விரோதத்தில் மதுரை சேர்ந்த தினேஷ் கொலை செய்யப்பட அவருடைய பல்சர் பைக் சென்னையை சேர்ந்த தினேஷிடம் வந்து சேர இதன்பின் நடைபெறும் சம்பவங்களே கதை.

    இந்த நிலையில், 'கருப்பு பல்சர்' வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. 



    • அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வருகிறார்.
    • உண்மை சம்பவங்களை தழுவி இக்கதை எடுக்கப்பட இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    அதனைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்திலும், ஜீத்து மாதவன் இயக்கத்திலும் அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூர்யாவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

     

    அதன்படி எதார்த்தமான படங்களை எடுத்து கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவங்களை தழுவி இக்கதை எடுக்கப்பட இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை.
    • நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார்.

    இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள் தர்மேந்திரா, மம்மூட்டி, நடிகர் மாதவனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷனும், மம்மூட்டிக்கு பத்ம பூஷனும், மாதவனுக்கு பத்மஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் விருதுபெற்ற நடிகர் மம்மூட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், 

    "என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு 'கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்' நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.

    நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
    • மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

    இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. 

    கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொது சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் மம்மூட்டி, நடிகர் மாதவன் ஆகியோருக்கு 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்கா யாக்னிக் (பாடகி) மற்றும் மம்மூட்டி ஆகியோருக்கு 'பத்ம பூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன், பிரசென்ஜித் சட்டர்ஜி (நடிகர்) மற்றும் சதீஷ் ஷா (மறைந்த நகைச்சுவை நடிகர்) ஆகியோருக்கு 'பத்ம ஸ்ரீ' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தின விழாவிற்கு முன்னதாக விருதுகள் அறிவிக்கப்பட்டாலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே குடியரசுத் தலைவர் மாளிகையில் பதக்கங்களை வழங்குவார். 

    • Patriot படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
    • Patriot படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.

    அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த போஸ்டர்களில் Morse Code-ல் ஏப்ரல் 23 என குறிப்பு வைத்து வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை Patriot படக்குழு வெளியிட்டுள்ளனர்

    மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார்.
    • இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

    மதுரையில் தீவிர ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

    இந்நிலையில், தன்னுடைய ரசிகர் ஒருவர் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்று சேவை செய்து வருவதை அறிந்தரஜினிகாந்த் அவரை சந்திக்க ஆசைபட்டார். அவரை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். அப்போது அல்போன்ஸிற்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

    • PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • PATRIOT படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.

    அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், பேட்ரியாட்" படத்தின் நயன்தாரா கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.

    'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் 27.27 கோடி, கர்நாடகாவில் 1.05 கோடி என உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் குவித்துள்ளது. இப்படம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

    இந்நிலையில், சிறை படத்தை பார்த்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,""நேற்று சிறை படம் பார்த்தேன். அருமையான படம். யதார்த்தமான மற்றும் நம் மனதுக்கு நெருக்கமான, நெஞ்சைத் தொடும் ஒரு காதல் கதை. விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது" என்றார்.

    இசையமைப்பாளர் நந்தாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே கடலூர் சிறைச்சாலையில் கைதியாக மருத்துவ கல்லூரி மாணவன் ஜீவா (ஆகாஷ்) அறிமுகமாகிறார். பின்னர், சிறையில் ஏற்படும் இன்னல்களுக்கு நடுவே சிறை மருத்துவர் அவரை காப்பாற்றுகிறார்.

    பின்னர், 2005ம் ஆண்டு பிளாஷ்பேக் தொடங்குகிறது. ஜீவா தாய், தந்தை, அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மருத்துவம் படிக்கும் ஜீவா, விடுமுறை நாட்களில் அவனின் நண்பர்களுடன் பொழுதை கழிப்பதே வாடிக்கை.

    ஆனால், ஜீவாவின் நண்பர்களில் ஒருவனான மோகன் பெண்கள் குறித்தும் அவர்களை எப்படி ஏமாற்றி தங்களின் வலைக்குள் விழ வைப்பது போன்ற சிந்தனையில் இருப்பவன்.

    இந்நிலையில், ஜீவா பேருந்து பயணத்தின்போது சுமதியை (ஜானகி) எதிர்ச்சியாக சந்திக்கிறார். ஜீவாவிற்கு சுமதியை பிடித்துப்போகவே, அவரை பின்தொடர்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட, ஜீவா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு சுமதி நர்ஸாக பணிபுரிய, ஜீவாவிற்கு அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

    ஒரு நாள், நண்பன் மோகனின் பேச்சை கேட்டு சுமதியை தனது அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துக்கொள்ள முயற்சிக்கிறார் ஜீவா. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி அங்கிருந்து அழுதுக்கொண்டே வெளியேற, தான் செய்தது தவறு என்று உணர்ந்த ஜீவா உடனே சுமதியை தேடிச் செல்கிறார்.

    ஆனால், சுமதி வேலையைவிட்டு நின்றுவிட்டதாக தகவல் தெரியவே, ஜீவா சுமதியை தேதி அலைகிறார்.

    இறுதியில், ஜீவா சுமதியை கண்டுபிடித்தாரா? ஜீவா சிறைக்கு செல்ல என்ன காரணம் என்பது படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    நாயகன் ஆகாஷ் பிரபு மருத்துவ மாணவன் ஜீவாவாக நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். சிறைவாசம் காட்சிகளில் அழுத்தத்துடன் உணர்ச்சி பொங்க நடித்துள்ளார். காதலி சுமதியாக ஜானகி எளிமையான மற்றும் தத்ரூபமான நடிப்பில் கண் கலங்க செய்து விடுகிறார்.

    இயக்கம்

    நடுத்தர குடும்பத்தில் நடக்கும் காதல் கதையை 2005ஆம் ஆண்டிற்கேற்ற காட்சிகளுடன் திரைக்கதையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஜே.சுரேந்தர். முதல் பாதியில் சிறையில் இருக்கும் இளைஞனின் நினைவலைகளில் தொடங்கும் படம் குடும்பம், நட்பு, காதல் என்ற கலகலப்புடன் செல்ல, இரண்டாம் பாதி நண்பர்களின் மேலோட்டமான கண்ணோட்டங்கள், காமம் மற்றும் காதலை வேறுபடுத்தி காட்டி உணர்வுகளின் வெளிப்பாட்டை அழுத்தமான காட்சிகளுடன் மனதை தொடும் அளவிற்கு கொடுத்து தடம் பதித்துள்ளார் இயக்குனர் கே.ஜே.சுரேந்தர்.

    இசை

    இசையமைப்பாளர் நந்தாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் எட்வினின் ஒளிப்பதிவு அருமை.

    ரேட்டிங்- 2.5/5

    • மங்காத்தா திரைப்படம் நேற்று ரீரிலீஸானது.
    • ரசிகர்களின் அமோக வரவேற்பை மங்காத்தா பெற்றுள்ளது.

    2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற மங்காத்தா திரைப்படம் நேற்று ரீரிலீஸானது.

    ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ரீ ரிலீசில் கில்லி படம் படைத்த சாதனைகளை முறியடித்து வசூல் சாதனை படைத்தது வருகிறது.

    இந்நிலையில், அஜித்குமார் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மங்காத்தா போஸ்டர்களை எந்தவித எழுத்துகளும் இல்லாமல் Clean போஸ்டர்களாக சன் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ளது.

    இந்த போஸ்டரைகளை பலரும் டவுன்லோடு செய்து மொபைல் வால்பேப்பராக வைத்து வருகின்றனர்.

    அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.

    தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan (எம். எஸ். விஸ்வநாதன்) அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாக "விஸ்வராகம்" உருவாக்கப்பட்டுள்ளது.

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த இசை யாத்திரை, தமிழர்களின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தனது கவிதைத் தொகுப்பை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

    அந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ஒரு வாழ்நாள் இசைப் பயணத்தின் தொடக்கமாக மாறியது. அந்த ஜாம்பவான் விதைத்த இசை விதை, இன்று இசையின் மீதான தூய காதலாக மலர்ந்து 'விஸ்வராகம்' என்ற ஆல்பமாக உருவெடுத்துள்ளது.

    • கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார்.
    • கிங் படம் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

    அடுத்ததாக அவர் நடித்து வரும் கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

    இந்நிலையில், கிங் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

    ×