என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்து இருக்கிறது.

    நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று ஈகோ பிரச்சனைகள் வளர்ந்து விவாகரத்து வரை செல்கிறது. மாளவிகா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறார். ஆனால், ரியோ அவருடன் இணைந்து வாழ விரும்புவதாக சொல்ல, விவாகரத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், மாளவிகா சிக்கல் ஏற்பட்டாலும் விவாகரத்து பெற்றே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

    இறுதியில், ரியோ ராஜ், மாளவிகா தம்பதி சேர்ந்து வாழ்ந்தார்களா? விவாகரத்து பெற்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரியோ ராஜ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா ஒருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக முழு படத்தையும் நடிப்பால் தாங்கி இருக்கிறார்கள். இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சிறு சிறு சண்டைகள் அனைத்தும், தற்போதைய காலக்கட்ட தம்பதிகள் கடந்து போகும் சம்பவங்கள் என்பதால், பார்வையாளர்களை கைதட்டி, விசில் அடித்து ரசிக்க முடிகிறது. வழக்கறிஞர்களாக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த், ஷீலா இருவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

    இயக்கம்

    தற்போதைய காலக்கட்ட தம்பதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன். இருவருக்கும் இடையே ஈகோ, அதனால் ஏற்படும் விளைவுகளை கலகலப்பாக சொல்லி, சிந்திக்க வைக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர். படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றதாக மட்டும் இன்றி, அனைவரது குடும்பத்திலும் நடப்பவைகளாக உருவாக்கி இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ்.

    இசை

    சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையில் கவர்ந்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    • முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர்
    • 3 ஆம் வாரத்தில் ஆதிரை வெளியேற்றப்பட்டார்

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

    முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த வார எவிக்ஷன் பட்டியலில் கலையரசன் , அரோரா சின்கிளேர், பார்வதி, கம்ருதீன், கானா வினோத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி 4 வாரங்களை நெருங்கிய நிலையில் இந்த வாரம் கலையரசன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த இசை நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான வித்யா பாலன், மலைக்கா அரோரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் ஏழு முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளனர்.

    சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரசிகர்களின் அன்பு காரணமாக தான் நான் இந்த நிலைமையில் இன்று இருக்கிறேன்.
    • ரசிகர்களின் அன்பையும் கனவை ஈர்ப்பையும் நாம் கண்காணிக்க வேண்டும்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கும் அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

    நேர்காணலில் பேசிய அஜித்குமார், "ரசிகர்களின் அன்பு காரணமாக தான் நான் இந்த நிலைமையில் இன்று இருக்கிறேன். ஆனால் அவர்களின் அன்பையும் கனவை ஈர்ப்பையும் நாம் கண்காணிக்க வேண்டும்.

    திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, தியேட்டரை புதுப்பிக்கிறார்கள். ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் திரையரங்கிற்கு உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, Once More கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்"என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே, "கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவரும் இதற்கு பொறுப்புதான். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • பொருளாதார ரீதியில் நாம் முன்னேறும்போது தான் சில திட்டமிடல்கள் சாத்தியமாகும்.
    • வெற்றி என்பது காட்டுக்குதிரை. யாரும் அதில் ஏறலாம்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கும் அஜித்குமார் தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    ''நான் சினிமாவுக்கு வந்த புதிதில் தமிழ் பேச தெரியாது. தமிழை கற்றுக்கொண்டு பேச கடுமையாக உழைத்தேன். அந்த போராட்டம் பெரியது. வந்த புதிதில் உன் பெயர் பிரபலமான பெயர் போல இல்லையே... பெயரை மாற்றுப்பா... என்றார்கள். ஆனால் சினிமாவுக்காக என் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை. எனவே வேறு பெயரை சூட்டவில்லை.

    நான் அடைந்த வெற்றிகள் எளிதாக கிடைத்தது அல்ல. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் பின்னரே அவை சாத்தியமானது. சவால்களைத் தாண்டி பயணிக்கும் நான், இன்றைக்கும் கார் ரேசிங்கில் 19 வயது வாலிபராக உழைக்கிறேன். கவனம் செலுத்துகிறேன்.

    ஹாலிவுட் நடிகர் பிராட்பிட் நடித்த 'எப்.1' படம் போல இந்தியாவில் புதிய படமோ அல்லது அதன் ரீமேக்கோ உருவாக்கப்பட்டால் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எந்த வகையிலாவது இந்த விளையாட்டை பிரபலப்படுத்த முடிந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தானே...

    அறிவும், விழிப்புணர்வும் தான் கார் ரேசின் அடிப்படை. கார் ரேசில் சில விபத்துகளைச் சந்தித்தேன். காயங்கள் இருந்தாலும் ரேசை நல்லபடியாக முடிக்கவே என் மனம் நாடும். அந்தவகையில் பந்தயத்தில் இருந்து விலகும் அளவுக்கு எனக்கு காயங்கள் ஏற்பட்டதில்லை. அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். கார் பந்தய வீரர்கள் காயங்களையும், விபத்துகளையும் எதிர்கொள்வது வழக்கம்தான். நான் 29 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறேன். நான் நடிகன் என்பதால் அது பெரியளவில் பேசப்படுகிறது.

    பொருளாதார ரீதியில் நாம் முன்னேறும்போது தான் சில திட்டமிடல்கள் சாத்தியமாகும். தருபவரா, பெறுபவரா? என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் செல்வம் சில நேரங்களில் நம்மை ராட்சசனாக மாற்றிவிடும். வெற்றி என்பது காட்டுக்குதிரை. யாரும் அதில் ஏறலாம். ஆனால் அந்த குதிரையை அடக்க முடியாவிட்டால், அது உன்னை கீழே தள்ளிவிடும்.



    இப்போதில் இருந்து வருகிற மார்ச் மாதம் வரை கார் ரேசில் பிசியாக இருக்கிறேன். எனவே இந்த காலகட்டத்தில் படப்பிடிப்பில் நான் கலந்துகொள்ள முடியாது என்றாலும், எனது புதிய படத்தின் அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும்.

    எனது இத்தனை ஆண்டு பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருக்கும் என் மனைவி ஷாலினி, என் பிள்ளைகள் மற்றும் திரையுலகினர், ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.''

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித்குமார் புதிய படம் நடிக்கவுள்ளார். இது அவரது 64-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் நேற்று வெளியானது.
    • தீபாவளியையொட்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் மாதம் 'இட்லி கடை', 'காந்தாரா சாப்டர்1', 'டியூட்', 'பைசன்', 'ஆர்யன் ', 'ஆண் பாவம் பொல்லாதது', 'தடை அதை உடை', 'தேசிய தலைவர்', 'ராம் அப்துல்லா ஆண்டனி', 'மெசஞ்சர்', 'பரிசு' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின.

    இந்த நிலையில், தமிழ் சினிமா அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 'இட்லி கடை', 'காந்தாரா சாப்டர்1', 'டியூட்', 'பைசன்' ஆகிய 4 படங்கள் மட்டுமே இணைந்து இந்த வசூல் சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இட்லி கடை

    தனுஷ் இயக்கி நடித்த படம் 'இட்லி கடை' இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூலும் குவித்து வருகிறது.

    காந்தாரா சாப்டர்1

    பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வசூலில் சாதனை படைத்து வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் நேற்று வெளியானது.

    டியூட்

    கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளியையொட்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது.

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் தோன்றியிருந்தார்.
    • “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

    பிக் பாஸ் மூலம் புகழ்பெற்று கதயநாயகனாக உருவெடுத்த ஆரவ் கடைசியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் தோன்றியிருந்தார். முன்னதாக மார்க்கெட் ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதாக ஆரவ் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும்  ஊக்கத்தையும்  வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.

    இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "AARAV STUDIOS"-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

     AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது.  விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன்,  இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

    கடவுளின்  அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார்.
    • இந்தப் படத்தின் கதயநாயனான சுபீன், பார்வையற்றவராக நடித்துள்ளார்.

    மறைந்த அசாம் பாடகரும் இசையமைப்பாளருமான சுபீன் கார்க் நடித்த கடைசி படமான 'ராய் ராய் பியன்னாலே' வெளியாகியுள்ளது.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் சுபீன் கார்க்.

    இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த 'ராய் ராய் பியன்னாலே' படம் நேற்று வெளியாகிய நிலையில் முதல் நாளிலேயே அசாமிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஏற்கனவே ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகவும் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் படம் திரையிடப்பட்டு வருவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    இந்தப் படத்தின் கதயநாயனான சுபீன், பார்வையற்றவராக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார். 

    இந்தப் படம் ரூ.50 கோடி வரை வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அசாமில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற பைமோன் டா, ரகுபதி மற்றும் பிதுர்பாய் போன்ற படங்கள் சுமார் ரூ.13 கோடி மட்டுமே வசூலித்துள்ளன.

    செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. 

    • ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.
    • பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.

    ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.  

    படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முனிஷ்காந்த், தீபா, ஷகீலா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    அண்ணா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.  நேற்று மாலை வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் கவனம் பெற்று வருகிறது. 

    • கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.
    • நேர்காணலின்போது இந்த துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.

    கரூரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடந்த பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.

    நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் அண்மையில் அவர்களை சென்னை வரவழைத்து ஆறுதல் கூறி அனுப்பினார்.

    இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது இந்த துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.

    அவர் கூறியதாவது, நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவருக்கும் பொறுப்புதான். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு.

    கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது.

    ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    பள்ளி மாணவர்கள் பின்னணியில் ஒரு கொலை கதை ராம் அப்துல்லா ஆண்டனி.

    பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ராம், அப்துல்லா, ஆண்டனி. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். ஒரு நாள் ராம், அப்துல்லா, ஆண்டனி ஒன்றிணைந்து தொழிலதிபரான வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் போட்டு விடுகின்றனர்.

    இதனை போலீசாக வரும் சௌந்தரராஜன் கண்டுபிடிக்கிறார். கொலை சம்பந்தமாக விசாரணையை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர 3 பேரையும் கைதும் செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு ஏன் இவ்வளவு கொரூரமாக இருக்கின்றனர்? தொழிலதிபரின் பேரனை எதற்காக கடத்தி கொலை செய்தனர். சிறுவர்கள் இவ்வாறு மாறியதற்கு காரணம் என்ன என்பது படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தின் கதைக்கு ஏற்ப பூவையார், அர்ஜூன், அஜய் அர்னால் ஆகியோர் நடித்துள்ளனர். தலைவாசல் விஜய், சௌந்தரராஜன் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.

    இயக்கம்

    ஜெயவேல் எழுதி இயக்கியுள்ள படம் சுவாரஸ்யமான படமாக்கல் மற்றும் இயல்பான காட்சிகளைக் கொண்டு செல்கிறது. சிறுவர்களின் ஆரம்பக் காட்சிகளில் செய்யும் காட்சிகளை திகிலூட்டுகிறது. சாய் தீனா கவனிக்க வைத்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சி உருக்கம்.

    இசை

    படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் புதுமுக இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணசேத்தன்.

    ஒளிப்பதிவு

    கதைக்கு ஏற்ற மேக்கிங் இல்லை. கதையில் சுவாரஸ்யம் இருந்தாலும் மிகவும் சாதாரணமான காட்சிகளாக நகர்கிறது.

    மெஸன்ஜர் ஒரு திகில் மற்றும் பேண்டஸி நிறைந்த படம்.

    நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், "தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்" என்ற செய்தி இருக்கிறது. இதை பார்த்து தற்கொலை முயற்சியை கைவிடுகிறார்.

    பின்னர் அந்த பெண் யார் என்பதை தேடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

    இறந்தவர் எப்படி மெசேஜ் அனுப்பு முடியும், அவர் உண்மையில் இறந்து விட்டாரா? இல்லையா? மெசேஜ் அனுப்பியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஶ்ரீராம் கார்த்திக், தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்திருக்கிறார். அந்த பெண் யார் என்ற தேடுதலும், காதலிப்பதும் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக லிப் லாக் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

    பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இயக்கம்

    நாம் நிறைய காதல் படங்களை பார்த்து இருப்போம். ஆனால், யாரும் எதிர்பார்த்திராத காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி. யாரும் சிந்திக்காத கதையை, தனது கற்பனை கலந்து திகில் மற்றும் ஃபேண்டஸி படமாக கொடுத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனை மற்றும் விபரீதமான காட்சியமைப்புகள் இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம்.  

    இசை

    இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் பால கணேசன் தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    படத்தொகுப்பு

    இயக்குனரின் முயற்சியை சிறப்பாக உள்வாங்கி பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரசாந்தின் பணியும் பாராட்டும்படி உள்ளது.

    ×