என் மலர்
சினிமா செய்திகள்
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டிருந்தார்.
ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.
குழந்தைக பிறந்த நிலையில், ஜாய் கிரிசில்டா தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் ஜாய் கிரிசில்டாவின் விரலை குழந்தை பிடித்திருப்பது போன்று இருந்தது.
அந்த புகைப்படத்துடன் ஜாய் கிரிசில்டா ஹேஷ்டேக் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில்,"கார்பன்காபி ஆப் ஹிஸ் பார்தர் பேஸ்" என குறிப்பிட்டிருந்தார். அதாவது, அப்பாவின் முக ஜாடையை அப்படியே உரித்து வைத்திருப்பதாக ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதில்,"தந்தையை போலவே போஸ் கொடுக்கிறார்.. ஒரே மரபணு" என குறிப்பிட்டுள்ளார்.

கோலிவுட்டில் புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன்.
இப்படங்களை இயக்கியதோடு, மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உள்பட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், கே.பி.ஜெகன் தற்போது 'ரோஜா மல்லி கனகாம்பரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குவதுடன் இப்படத்தில் நாயகனாகவும் அவர் நடிக்கிறார்.
இப்படத்தை 'யுனைடெட் ஆர்ட்ஸ்', எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீஸர் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இதனை, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர்," வாழ்த்துகள் அன்பு அண்ணன் ஜெகன் சார். இந்த படம் உங்கள ஒரு நல்ல நடிகராகவும், ஒரு சிறந்த இயக்குனராகவும் நிலை நிறுத்தும்.. லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.

2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆண்பாவம் பொல்லாதது' படம் கடந்த அக்டோபர் 31-ந்தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'ஆண்பாவம் பொல்லாதது' படம் உலகளவில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
- 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.
- இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கியது தென் ஆப்பிரிக்க அணி.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய மகளிர் அணிக்கு பைசன் படக்குழுவினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பைசன் படக்குழு போஸ்டர் வௌியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
- படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார்.
- இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் இன்றளவும் ரசிர்களால் ரசிக்கப்படுவதும், பலரும் மோடிவேசன் பாடலாக இருப்பதும் குறிப்பிடத்ததும். மேலும் இப்பாடலை பாடிய சித்ரா, பாடலை எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.

- பல்கலை வித்தகர் (Most Versatile Actor) என்ற மதிப்பு மிகுந்த விருதை அல்லு அர்ஜுன் வென்றார்.
- புஷ்பா 2 படத்தை தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார்.
2025 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் அக்டோபர் 30 ஆம் தேதி வழங்கப்பட்டன. அதில் பல்கலை வித்தகர் (Most Versatile Actor) என்ற மதிப்பு மிகுந்த விருதை அல்லு அர்ஜுன் வென்றார்.
இந்த விருதுக்கு அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த நம்பமுடியாத கௌரவத்திற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு நன்றி. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி. இந்த விருதை எனது ரசிகர்களுக்கு பணிவுடன் அர்ப்பணிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில் புஷ்பா 2 படத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த நடிக்கருக்கான விருதை அல்லு அர்ஜுன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 படத்தை தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார்.
- 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கிங் படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
அவர் நடித்து வரும் கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இதற்கிடையே ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.
ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் இதனால் உங்களை மிஸ் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை படம் கடந்த மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் அடுத்தடுத்து நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
D54 (பெயரிடப்படாததால் D54 என அழைக்கப்படுகிறது). இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
D55 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
D56 படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
D57 படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் D55 படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே பீஸ்ட், கூலி படங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் கதை, நமது சமூகத்தில் கவனிக்கப்படாமல் விடப்படும், நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவர்கள் பற்றியது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஒவ்வொரு பிறந்த நாளும் மன்னத் வீட்டில் ரசிகர்களை பார்ப்பார்.
- பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்களை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தனர்.
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.
இதற்கான இன்று காலை முதலே, மன்னத் வீடு முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். வழக்கமாக பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துகளை பெறுவார்.
ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் உங்களை மிஸ்சிங் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை, நான் வெளியே வந்து வரவேற்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உங்கள் அனைவரிடம் எனது ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாக அனைவரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்து கொண்டதற்கு நன்றி, என்னை நம்புங்கள்... உங்களை விட அதிகமாக உங்களைப் பார்ப்பதை நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்க்கவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருந்தேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.
இவ்வாறு ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார்.
பின்னர் கார்த்திகாவிடம் பேசிய அவர்," ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா உன் கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆண்பாவம் பொல்லாதது' படம் கடந்த அக்டோபர் 31-ந்தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 2 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்துள்ளார்.
இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 7-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வௌியாகி வரவேற்பு பெற்றது.
சினிமாவில் வரும் காதலை போன்று நிஜ வாழ்க்கையில் காதலை எதிர்பார்க்கும் கதாநாயகனை சுற்றி கதை அமையும் வகையில் டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. டிரைலருக்கு சிலம்பரசன் குரல் கொடுத்துள்ளார். மேலும், படத்திற்கும் குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தணிக்கை வாரியம் 'ஆரோமலே' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






