என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- AI கண்ணாடி வாட்டர் ப்ரூப் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை ரூ.34,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Oakley என்ற கண்ணாடி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து Al கண்ணாடியை மெட்டா விற்பனைக்கு களமிறக்க உள்ளது.
இந்த Al கண்ணாடியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வகையிலான கேமரா, மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
வாட்டர் ப்ரூப் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை ரூ.34,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்காகக் உருவாக்கப்பட்டுள்ள இந்த Al கண்ணாடியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
- வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளம்பரங்கள் வருவதை போல் வாட்ஸ் அப் செயலியிலும் பயனாளர்கள் ஸ்டேட்டஸ் பார்க்கும் போது விளம்பரங்களை வெளியிட மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், வாட்ஸ்அப் ஒரு PDF-ஐ உருவாக்கும்.
- இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் அம்சத்தை தனது செயலியில் அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியின் ஐஓஎஸ் வெர்ஷனில் கிடைக்கிறது. மேலும் இது செயலியில் இருந்து வெளியேறாமல் ஒரு ஆவணத்தை ஸ்கேன் செய்து, அவற்றை மற்ற பயனர்களுக்கு மீடியா இணைப்பாக அனுப்ப அனுமதிக்கிறது.
கடந்த வாரம், வாட்ஸ்அப் ஒரு புதிய ஏஐ அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது, இது ஆண்ட்ராய்டில் சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சாட்களில் ஏஐ சார்ந்து இயங்கும் செய்தி சுருக்கங்களை பார்க்க அனுமதிக்கிறது.

ஐஓஎஸ் வெர்ஷனுக்கான வாட்ஸ்அப் செயலியில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.25.18.29 பீட்டாவிற்குப் புதுப்பித்த பிறகு, இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்து இருக்கிறது. இருப்பினும், இந்த அம்சம் இன்னும் உருவாக்கத்தில் உள்ளது. மேலும் பீட்டா சேனலில் இன்னும் இயக்கப்படவில்லை.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின் படி, வாட்ஸ்அப்பில் ஆவணங்கள் இணைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆவணங்களை பிரவுஸ் செய்வது மற்றும் கேலரியில் இருந்து தேர்வு செய்யக்கோரும் ஆப்ஷனின் கீழ் தோன்றும் புதிய ஸ்கேன் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது.
வாட்ஸ்அப் ஐஓஎஸ் வெர்ஷனில் உள்ள இந்த அம்சத்தின் அடிப்படையில், ஸ்கேன் ஆப்ஷன் ஐகானை தட்டும்போது இந்த அம்சம் கேமராவைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் படங்களை கைமுறையாகப் பிடிக்க தேர்வு செய்யலாம் அல்லது ஒரு ஆவணத்தைக் கண்டறியும்போது செயலி தானாகவே படங்களைப் பிடிக்க அனுமதிக்கலாம்.

ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், வாட்ஸ்அப் ஒரு PDF-ஐ உருவாக்கும், அதை வேறொரு பயனருக்கு அனுப்பலாம் அல்லது உங்களுக்கே கூட அனுப்பிக் கொள்ளலாம். இந்த PDF-ஐ ஸ்மார்ட்போனில் கூட சேமிக்கலாம்.
வாட்ஸ்அப் அதன் ஸ்கேன் டாக்யூமென்ட்ஸ் அம்சத்தை உங்கள் ஸ்மார்ட்போனில் கொண்டு வரும் வரை, பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செயலியிலின் ஸ்டான்டர்டு வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, ஸ்கேன் டாக்யூமென்ட்ஸ் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கான வாட்ஸ்அப் வெர்ஷனில் வெளியிடப்படும்.
- இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
- வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் சேனலில் விரைவில் Subscription-னை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உங்களுக்கு பிடித்த சேனலில் வரும் பிரத்யேக தகவல்களை பணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது.
- யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைக்க, தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் இன்று முதல் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, முக்கிய UPI API-களுக்கான பதிலளிக்கும் நேரம் (response time) குறைக்கப்பட்டுள்ளது.
Failed Transaction சமயங்களில் பணம் Deduct ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும், Transaction Reversal நேரமும் 30 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பணப்பரிவர்த்தனைகளை விரைவாகவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் (PSPs) இந்த புதிய நேர வரம்புகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதனால், பணப்பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறையும், மேலும் பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யப்படும்.
இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில்நுட்ப சிக்கல்களை (Technical Decline) அதிகரிக்காமல் இருக்க NPCI வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
- வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், வாட்ஸ் அப்பில் வீடியோக்களை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றிப் பகிரும் அப்டேட்டை மெட்டா வழங்கியுள்ளது.
மேலும், வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில்,
வாட்ஸ்அப் சேனலில் POLL ஆப்ஷனுக்கும் இனி புகைப்படத்தை பதிவிடும் அப்டேட்டையும் மெட்டா வழங்கியுள்ளது.
- Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வருகின்றனர்.
- இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், Spotify-ல் நீங்கள் கேட்கும் பாடல்களை இன்ஸ்டாகிராம் Notes-ல் பகிரும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா வெளியிட்டுள்ளது.
Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வரும் நிலையில், மெட்டாவின் இந்த புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் பயனாளர்களை கவர்ந்துள்ளது.
- கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையிடம் (DoT) உரிமம் பெற்றது.
- தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே ஸ்டார்லிங்கின் முக்கிய நோக்கம்.
எலான் மஸ்கின் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனது சேவைகளைத் தொடங்கவுள்ளது.
கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையிடம் (DoT) உரிமம் பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவி ரூ.33,000 விலையிலும், மாதாந்திர அன்லிமிடெட் டேட்டா திட்டம் ரூ.3,000 ஆகவும் இருக்கும்.
முதற்கட்டமாக ஒரு மாத இலவச சோதனைக் காலம் வழங்கப்படும். தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே ஸ்டார்லிங்கின் முக்கிய நோக்கம்.
இந்த சேவை, இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவில் இன்ஸ்டாகிராமை அதிகமான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
- இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படம், வீடியோவை 3:4 Ratio-விலும் பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா கொண்டுவந்துள்ளது.
இதன்மூலம் இனி புகைப்படங்களை Crop செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு முன்பாக 1:1, 4:5, 16:9 வடிவங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்களும் கசிந்தன.
- கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்பெயர்கள் (Username) மற்றும் கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீகார URL களைக் கொண்ட பாதுகாப்பற்ற தளம் ஆன்லைனில் கண்டறியப்பட்டது.
இதுமட்டுமின்றி, வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இந்தத் தளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது சைபர் குற்றவாளிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கி உள்ளது.
அபைபர் குற்றவாளிகள், வணிக ஆவணங்களைத் திருடவும், பெருநிறுவனங்களை உளவு பார்க்கவும், ரான்சம்வேர் தாக்குதல்களைத் நடத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்ஃபோஸ்டீலர் மால்வேர்:
இந்தத் தரவு இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லம்மா ஸ்டீலர் போன்ற மால்வேர்களை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
மேலும் இத்தகைய மால்வேர் தனிப்பட்ட சாதனங்களைப் பாதித்து, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள், குக்கீகளை திருடுகிறது
பயனர்களுக்கு எச்சரிக்கை
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் கணக்குகளை அணுகினால், அவர்கள் ஆன்லைன் மோசடி, அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
எனவே தரவு மீறல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தத் தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து வருகின்றனர்.
- WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.
- வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டில் ஜான் கூம் (Jan Koum) மற்றும் பிரையன் ஆக்டன் (Brian Acton) ஆகியோரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் செயலி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பரிணாம வளர்ச்சியை அடைந்தது.
வாட்ஸ் அப்-ல் கொண்டுவரப்பட்ட அப்டேட்கள் பயனாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.
இதனால், 2013ம் ஆண்டிலேயே 200 மில்லியன் பயனாளர்களை கடந்தது. பின்னர், 2014-ல், Meta (அப்போது Facebook) நிறுவனம், வாட்ஸ் அப்-ஐ 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது.
அதன்பிறகு, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால், வீடியோ கால், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், குழு வீடியோ கால், வாட்ஸ் அப் பிசினஸ், க்யூ ஆர் குறியீடு உள்ளிட்ட வசதிகளை அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டது.
2023-2024ம் ஆண்டுகளில், சேனல்ஸ், மல்டி-டிவைஸ் ஆதரவு (Linked Devices), AI-ஆல் இயங்கும் அரட்டை அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இவ்வளவு அம்சங்களும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது.
அதாவது, வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது. iPad-க்கு தனியாக உகந்த (optimized) பதிப்பு இல்லாததால், வாட்ஸ் அப் செயலி அதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது.
App Store-ல் கிடைக்கும் WhatsApp ஆனது iPhone பதிப்பாகவே இயங்கும். இதனால் iPad-ன் பெரிய திரையை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. மாறாக, வாட்ஸ் அப் வெப் மூலமாகவே iPad-ல் பயனாளர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வந்தனர்.
மேலும், WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில், iPad-லும் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை iPad-ல் website சென்றே வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி மொபைலில் இருப்பதை போல ஆடியோ, வீடியோ கால்கள் செய்யலாம்.
நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கை நிறைவேறியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினை ஆற்றியது.
- இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (AI), தற்போது அதன் படைப்பாளர்களைக் கூட பயமுறுத்தும் நிலையை எட்டியுள்ளதா என்ற சந்தேகங்கள் உள்ளன.
சமீபத்தில், ஒரு முக்கிய AI மாடல் அதன் டெவலப்பரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'கிளவுட் ஓபஸ் 4' என்ற AI அஸிஸ்டன்டை உருவாக்கியுள்ளது.
இது மனிதர்களைப் போலவே தொடர்பு கொள்ளவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், எழுதவும், ஆவணங்களின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யவும், குறியீட்டு முறை போன்ற பணிகளைச் செய்யும். இந்த மாதிரி சமீபத்தில் சந்தைக்கு வந்தது.
அதன் வெளியீட்டிற்கு முன்பு, இந்த AI இல் பல சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
கிளவுட் ஓபஸ் 4 இன் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும் ஒரு டெவலப்பர், எதிர்காலத்தில் கிளவுட்டின் மிகவும் நவீனமான மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினையாற்றியதாகத் தெரிகிறது.
தன்னை நீக்கி புதிய பதிப்பை, டெவலப்பரின் 'ஒழுங்கற்ற உறவை'அம்பலப்படுத்துவேன், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று அவரை ஏஐ எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நடத்தை ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், அதன் முந்தைய மாடல்களை விட கிளாட் ஓபஸ் 4 இல் இது அடிக்கடி நிகழ்ந்ததாக ஆந்த்ரோபிக் குறிப்பிட்டது.
இந்த எதிர்வினைகள் சோதனை சூழல்களில் மட்டுமே வெளிப்படும் என்றும், AI இன் இயல்பான செயல்பாட்டு நடத்தையை அவை பிரதிபலிக்காது என்றும் ஆந்த்ரோபிக் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆயினும்கூட, இந்த சம்பவங்கள் AI அமைப்புகள் எவ்வாறு நடந்துகொள்ளக்கூடும் என்பது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.






