search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை மாத்திரை"

    • இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நேற்று இரவு எஸ்பிளனேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிறுமி, இளம் பெண் 3 வாலிபர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் இளம் பெண்ணை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா (வயது 19) எனத் தெரிந்தது. எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரித்திர குற்றவாளியான சின்னா என்பவர் சேலத்தில் உள்ள சரண்யாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.

    மேலும் விசாரணையில் சரண்யாவை அழைத்து வர சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சின்னா காதலியான 16 வயது சிறுமியை அனுப்பி வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக அரண்மனைக்காரன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

    சரண்யா செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் குறித்த புகைப்படங்கள் ஆவணங்கள், பண பரிமாற்றம் போன்ற தகவல் சிக்கியது.

    இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 10 பேரை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் டேப் பெண்டாடல் ஹைட்ரோ குளோரைடு என்ற போதை தரும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி சரகத்திற்குட்பட்ட மற்ற பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி சமத்துவபுரம் அருகே ராஜதானி போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ராஜதானி பிச்சம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் தினேஷ்குமார் (24), குமாரபுரத்தைச் சேர்ந்த வைரக்குமார் (25), சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த ஜேசுதாசன் (20) மற்றும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மகன் இன்பக்குமார் (19) என தெரிய வந்தது.

    இதில் ஜெகநாதன் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும், இன்பக்குமார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு சக மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் இக்கும்பலுடன் மேலும் சிலர் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ளனர். இவர்கள் எங்கிருந்து இந்த மாத்திரைகளை வாங்கி வந்தனர்? என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • முக்கிய குற்றவாளியான பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.
    • திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து அந்தியூர் பவானி சாலையில் உள்ள சாந்திய பாளையம் பிரிவு மயான பகுதியில் போலீசார் ஆய்வு செய்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் நின்று கொண்ட இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

    போலீசார் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 5 பேர் சிக்கனர். அவர்கள் 5 போலீசார் கைது செய்து பவானி சிறை யில் அடைத்த னர்.

    இதில் முக்கிய குற்ற வாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி சந்தியபாளையம் மண க்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு முக்கிய குற்றவாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.

    மற்றொரு குற்றவாளியான சந்திய பாளையம் மணக்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அந்தியூர் போலீசாருக்கு திருமூர்த்தி அந்தியூர் பகுதியில் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்தது. இதனை அடித்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திரு மூர்த்தியை இன்று காலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • வேறு வேறு இடங்களில் இருந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் ரெயில் சந்திப்பு அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த கூலித் தொழிலாளி மீனாட்சி சுந்தரம் (வயது 24), விஷ்ணு சங்கர் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பெரியக்கடை வீதி போலீசார் பருப்பு குடோன் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் கஞ்சாவை பதுக்கி விற்ற கெம்பட்டி காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனசேகரன் (32),செல்வபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி துரை (43) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சாய்பாபா காலனி போலீசார் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற இடையர்பாளையத்தை சேர்ந்த சரவணகு மார் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் சரவணகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சாஸ்திரி மைதானம் அருகே சிலர் போதை மாத்திரை களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற சுந்தரம் வீதியை சேர்ந்த வசந்தகுமார் (23), இஸ்மாயில் சரீப் (42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 18 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பீளமேடு போலீசார் சவுரிபாளையம் ரோட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற தினேஷ் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 40 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள யஸ்வந்த் என்பவரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தும் கும்பலை கைது செய்து வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக போதை மாத்திரை பயன்படுத்துவது, போதை ஊசி போடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தும் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாஸ்திரி நகரில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவர் பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (19) என்பதும், சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்ததும் தெரிவந்தது.

    அவரை சோதனை செய்தபோது 100 போதை மாத்திரை வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஹரிஷ் என்ற நபரிடம் போதை மாத்திரை வாங்கியதாக கூறினார்.

    அதைத்தொடர்ந்து ஹரிசை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். ஹரிஷ் மீது ஏற்கனவே சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஹரிசை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் போதை மாத்திரை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த கர்மன்ப்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரமேஷுக்கு திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் நஷ்டத்தை சரிகட்ட தனது மைத்துனர். பூனச்சந்திரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து ரமேஷ், பூர்ண சந்திரனுடன் சேர்ந்து கலப்படம் செய்யப்பட்ட அல்ட்ரா சோல்ம் என்ற ஆபத்தான போதை மாத்திரைகளை உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள பல மருந்து நிறுவனங்களில் இருந்து வரவழைத்தனர்.

    இதற்கு அம்பர்பேட்டை சேர்ந்த ராகவ ரெட்டி (வயது 55) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தார்.

    மருந்து கடைகளில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகளை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனர்.

    மேலும் இவர்களுக்கு மருந்து நிறுவனங்களில் இருந்து சட்ட விரோதமாக மருந்துகளை கடத்தி வருவதற்கு ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமணன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நதீம், டெல்லியை சேர்ந்த அருள் சவுத்ரி ஆகியோர் உதவி செய்து வந்தனர்.

    இதன் மூலம் ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார்.

    இவர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆபத்தான போதை மருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் அடிமையாகினர். போதை மருந்து விற்பனை குறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து விற்பனை குறித்து துல்லியமான தகவலை பெற்றனர். ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் எங்கு எங்கு போதை மருந்து விற்பனை செய்கிறார்கள் என கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மலாக் பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த ரமேஷ், ராகவா ரெட்டி ஆகியோரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
    • தப்பி ஓடிய பாலாஜி, திருமூர்த்தி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே சண்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயானத்தில் நேற்று இரவு ஒரு கும்பல் போதை ஊசி, போதை மாத்திரை போட்டுக்கொண்டிருப்பதாக அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் சிறப்பு போலீஸ் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி, மற்றும் போதை மாத்திரையை பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயது உட்பட்டவர்கள். எந்த ஒரு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்து உள்ளனர்.

    பின்னர் பிடிபட்டவர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன், ரூபேஷ், மகேஸ்வரன், வெங்கடேசன், சவுந்தர் ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 50 ஆயிரம் மதிப்பிலான போதை ஊசி, மாத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய பாலாஜி, திருமூர்த்தி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை தவிர வேறு யாரும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • கத்திமுனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜனனி, பிளசிகா. திருநங்கைகளான இருவரும் நேற்று இரவு மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜீசஸ் கால்ஸ் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த போதை வாலிபர்கள் 2 பேர் பிளசிகாவை அழைத்து பேச்சுக் கொடுத்தனர்.

    பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனனி உடனடியாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மகாராஜன் ஆகியோர் விரைந்து வந்தனர் மேலும் கடத்தி செல்லப்பட்ட பிளசிகாவின் செல்போன் "டவர் லொகேஷன்" மூலம் செட்டியார் அகரம் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மறைவான பகுதியில் போதை வாலிபர்களின் பிடியில் சிக்கி தவித்து வந்த பிளசிகாவை பத்திரமாகமீட்டனர்.

    அப்போது போதை வாலிபர்கள் சப் - இன்ஸ்பெக்டர் மகாராஜனை சரமாரியாக தாக்கி அவரது வயிற்றில் கடித்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பிளசிகாவை கடத்தியது ஆவடியை சேர்ந்த ரவுடி ஜெகன் (வயது 30) மற்றும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பது தெரிந்தது. அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த ஜெகன் மற்றும் தினேஷ் இருவரும் பிளசிகாவிற்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது இதனால் மயங்கிய பிளசிகாவை போலீசார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசிடம் இருந்த தப்ப முயன்ற ரவுடி ஜெகனுக்கு வலது காலில் அடிபட்டு எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது. கத்தி முனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது
    • கைது செய்யப்பட்ட விஷ்னுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை மாநகரில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். இதில் ஈடுபடும் கும்பலை பிடிக்க, தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

    அதன்படி, நேற்று கோவை ஆர்.எஸ்.புரம் அருகே ஒரு கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனையில் ஈடுபட்ட போது, அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த கோவை வேடபட்டியை சேர்ந்த விஷ்னு (வயது26) பெயிண்டர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. பின்னர் கைது செய்யப்பட்ட விஷ்னுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் விசாரணை
    • ஒரு கிலோ 200 கிராம் அடங்கிய கஞ்சா பொட்டலம் பறிமுதல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக ராணிப்பேட்டை கலால் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் ராணிப்பேட்டை, பொன்னை சாலையில் அக்ராவரம் பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை காரையைச் சேர்ந்த ஜுஜிலி என்ற பிரதீப் குமார் (26), அம்மூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (23), வாலாஜா அடுத்த மேல் புதுப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (22) என தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் அடங்கிய கஞ்சா பொட்டலமும், 20 போதை மாத்திரைகளும் இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அந்த 3வாலிபர்களையும் கைது செய்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.12 ஆயிரத்து 672 என கலால் போலீசார் தெரிவித்தனர்.

    • போலி மருந்து சீட்டை பயன்படுத்தி போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சமூக விரோத கும்பல் வாங்கி விற்கின்றனர்.
    • போதை மருந்து விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தற்காலத்தில் புதிய, புதிய வகைகளில் போதை பொருட்கள் பயன்படுத்த ப்பட்டு வருகிறது. நோயாளி களுக்கு வலி நிவாரண த்திற்காக தரப்படும் மாத்தி ரைகளும் போதைக்காக பயன்படுத்துவது அதிகரி த்துள்ளது. இந்த மாத்திரை களை தொடர்ந்து போதை க்காக உட்கொள்வதால் பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரையில்லாமல் குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரைகளை வழங்க கூடாது என போலீசார் கண்டிப்புடன் தெரிவித்து ள்ளனர். ஆனால் தற்போது ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலி மருந்து சீட்டை பயன்படுத்தி சமூக விரோத கும்பல் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதனை அதிக விலைக்கு இளைஞர்களை குறிவைத்து விற்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

    இதற்காக சமூக விரோத கும்பல் போலியான மருந்து சீட்டுகளை தயாரித்து அதில் வலி நிவாரண மாத்திரை, ஆண்மைக்குறைவு மாத்திரை, சந்தேகம் ஏற்படாமல் இருப்பதாக வயிற்று வலி மாத்திரைகளை எழுதி அதனை மருந்து கடைகளில் கொடுத்து வாங்குகின்றனர். குறைந்த விலைக்கு மாத்திரைகளை வாங்கும் அந்த கும்பல் பின்னர் அதிக விலைக்கு இளைஞர்களிடம் விற்கின்றனர்.

    போதை மாத்திரைக்கு அடிமையாகும் இளை ஞர்கள் தங்களது வாழ்வை தொலைக்கி ன்றனர். எனவே இது தொடர்பாக உரிய கவனம் செலுத்தி போதை மருந்து விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம்.
    • தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஓ.சி.ஐ.டி. என்ற தனிப்படை அமைக் கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்மைக்காலமாக திருச்சியிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சியில் உள்ள ஒ.சி.ஐ.டி. தனிப் படையினர் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பு வாலிபர்கள் சில நின்று கொண்டு கல்லூரி மாணவரிடம் போதை மாத்திரை விநியோகம் செய்வதை தனிப்படையினர் கண்டுபிடித்தனர். இதைடுத்து அந்த கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட நான்கு பேரை தனிப்படையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், போதை மாத்திரை வெளியூரில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், விற்க இருக்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் உதவியுடன் அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகளை விற்கும் முயற்சியில் இந்த கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    மேலும் போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம். இதையடுத்து அந்த பணம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சென்ற பிறகுதான் போதை மாத்திரையை கும்பல் மாணவரிடம் கொடுப்பார்கள் என தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×