search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narcotic pills"

    • மதுரை மாவட்டத்தில் தமிழழகன் உள்பட 10 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
    • போதை மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

    மதுரை

    மதுரை மாநகரில் புகையிலை, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளை பிடிக்க வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லா குளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படை போலீ சார் நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி வைகை வடகரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரில் ஒருவரை மட்டும் விரட்டி சென்று பிடித்த னர். அவரிடம் விசா ரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.அங்கு விசாரணை நடத்தி யதில் பிடிபட்ட நபர் விக்கிரமங்கலம் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் தமிழழகன் என்பது தெரிய வந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    மதுரை மாவட்டத்தில் தமிழழகன் உள்பட 10 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். தமிழழகன் கொடுத்த தகவலின்பேரில் அண்ணாநகர் முத்துராம லிங்கதேவர் தெருவில் உள்ள மருந்து கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 17,030 போதை மாத்திரைகள், 150 போதை தரக்கூடிய மருந்து பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் காலாவதியானது.

    இதனை தமிழழகன், அவருக்கு உடந்தையாக இருந்த முரளிதாஜ் ஆகியோர் விற்று வந்துள்ளனர். இதை யடுத்து போதை மாத்திரை களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட பி.பார்ம் பட்டதாரி தினேஷ் என்பவரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

    போலீசாரின் கெடுபிடி காரணமாக கஞ்சா விற்பனை குறைந்து வருகிறது. ஆனால் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்துள்ளது. வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சிலர் இதனை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

    மேலும் ஆயிரக்கணக்கில் வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து அதிக விலைக்கு சமூகவிரோத கும்பல் விற்பனை செய்து வரு கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் கிட்னி செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

    காலாவதியான மாத்திரைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடி யவை. இது போதை கும்பலுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும் அவர்கள் காலாவதியான போதை மாத்திரைகளை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து உள்ளனர்.

    கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×