search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narcotic pill"

    • மயக்கம் அடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    • சிறுவர்களுக்கு மர்மநபர் ஒருவர் போதை மாத்திரை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    தென்காசி:

    தென்காசியில் வாலிபன் பொத்தை பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் வாந்தி ஏற்பட்டு திடீர் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அந்த 4 சிறுவர்களுக்கும் மர்மநபர் ஒருவர் போதை மாத்திரை வழங்கியதும், அதனை சிறுவர்கள் தெரியாமல் சாப்பிட்டதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை கொடுத்தது எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியை சேர்ந்த காசிராஜன் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் விசாரணை
    • ஒரு கிலோ 200 கிராம் அடங்கிய கஞ்சா பொட்டலம் பறிமுதல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக ராணிப்பேட்டை கலால் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் ராணிப்பேட்டை, பொன்னை சாலையில் அக்ராவரம் பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை காரையைச் சேர்ந்த ஜுஜிலி என்ற பிரதீப் குமார் (26), அம்மூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (23), வாலாஜா அடுத்த மேல் புதுப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (22) என தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் அடங்கிய கஞ்சா பொட்டலமும், 20 போதை மாத்திரைகளும் இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அந்த 3வாலிபர்களையும் கைது செய்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.12 ஆயிரத்து 672 என கலால் போலீசார் தெரிவித்தனர்.

    • கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வலி நிவாரணி மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் சட்ட விரோதமாக சிலர் வாங்கி போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை மாநகரில் மட்டும் இதுவரை போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.தொடர்ந்து மாநகரில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், குனியமுத்தூர் ஆசாத் நகரில் உள்ள மைதானத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு போைத மாத்திரை விற்பது உறுதியானது.

    இதையடுத்து அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற கரும்புக்கடையை சேர்ந்த அசாருதீன்(வயது25), முகமது யாசர்(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 22 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×