search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "An anti-social gang"

    • போலி மருந்து சீட்டை பயன்படுத்தி போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சமூக விரோத கும்பல் வாங்கி விற்கின்றனர்.
    • போதை மருந்து விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தற்காலத்தில் புதிய, புதிய வகைகளில் போதை பொருட்கள் பயன்படுத்த ப்பட்டு வருகிறது. நோயாளி களுக்கு வலி நிவாரண த்திற்காக தரப்படும் மாத்தி ரைகளும் போதைக்காக பயன்படுத்துவது அதிகரி த்துள்ளது. இந்த மாத்திரை களை தொடர்ந்து போதை க்காக உட்கொள்வதால் பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரையில்லாமல் குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரைகளை வழங்க கூடாது என போலீசார் கண்டிப்புடன் தெரிவித்து ள்ளனர். ஆனால் தற்போது ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலி மருந்து சீட்டை பயன்படுத்தி சமூக விரோத கும்பல் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதனை அதிக விலைக்கு இளைஞர்களை குறிவைத்து விற்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

    இதற்காக சமூக விரோத கும்பல் போலியான மருந்து சீட்டுகளை தயாரித்து அதில் வலி நிவாரண மாத்திரை, ஆண்மைக்குறைவு மாத்திரை, சந்தேகம் ஏற்படாமல் இருப்பதாக வயிற்று வலி மாத்திரைகளை எழுதி அதனை மருந்து கடைகளில் கொடுத்து வாங்குகின்றனர். குறைந்த விலைக்கு மாத்திரைகளை வாங்கும் அந்த கும்பல் பின்னர் அதிக விலைக்கு இளைஞர்களிடம் விற்கின்றனர்.

    போதை மாத்திரைக்கு அடிமையாகும் இளை ஞர்கள் தங்களது வாழ்வை தொலைக்கி ன்றனர். எனவே இது தொடர்பாக உரிய கவனம் செலுத்தி போதை மருந்து விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×