search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 8 பேர் கைது
    X

    கோவையில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 8 பேர் கைது

    • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • வேறு வேறு இடங்களில் இருந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் ரெயில் சந்திப்பு அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த கூலித் தொழிலாளி மீனாட்சி சுந்தரம் (வயது 24), விஷ்ணு சங்கர் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பெரியக்கடை வீதி போலீசார் பருப்பு குடோன் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் கஞ்சாவை பதுக்கி விற்ற கெம்பட்டி காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனசேகரன் (32),செல்வபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி துரை (43) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சாய்பாபா காலனி போலீசார் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற இடையர்பாளையத்தை சேர்ந்த சரவணகு மார் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் சரவணகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சாஸ்திரி மைதானம் அருகே சிலர் போதை மாத்திரை களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற சுந்தரம் வீதியை சேர்ந்த வசந்தகுமார் (23), இஸ்மாயில் சரீப் (42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 18 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பீளமேடு போலீசார் சவுரிபாளையம் ரோட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற தினேஷ் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 40 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள யஸ்வந்த் என்பவரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×