search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லாவரம் சந்தையில் போதை மாத்திரை விற்பனை- வாலிபர் கைது
    X

    பல்லாவரம் சந்தையில் போதை மாத்திரை விற்பனை- வாலிபர் கைது

    • வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாலிபரை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் சந்தையில் வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில், அவர் சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த் (வயது 21) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 40 போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×