search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி நிறுவன அதிபர்"

    • நாகர். விரைவு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
    • வாலிபர் கொலை வழக்கு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திடீரென டேவிட் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    இதையடுத்து ராஜனும், ரமேசும், டேவிட்டை பார்த்து வேலைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வைத்தியநாதபுரம் பகுதியில் கோவில் முன்பு டேவிட் படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து அவரது தாயார் சாந்தி, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் (37), ரமேஷ் (38), கண்ணன் (40),வில்சன்(37) உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட 7 பேரும் ஜாமீனில் விடுதலையான நிலையில் நாகர்கோவில் கூடுதல் விரைவு அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய கண்ணன் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் தொடர்புடைய ராஜன், ரமேஷ், வில்சன் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜரா னார்கள்.

    கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ், வில்சன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் தீர்ப்பில் அவர் கூறி உள்ளார். பரம ராஜன், ரமேஷ், வில்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.

    • நண்பர்களுடன் சென்ற நிதி நிறுவன அதிபரை தாக்கி வழிப்பறி செய்த 5 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் பாலராஜேஷ் (வயது33). இவர் ஜவஹர் மைதானம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நண்பர்கள் வருண் சுக்ரீத், அபி ஆகியோருடன் சாய்பாபா கோவில் அருகே உள்ள நண்பரின் தோப்புக்கு காரில் சென்றார். சோமையாபுரம் சோதனை சாவடி அருகே அடையாளம் தெரியாத வாலிபர்கள் காரை வழிமறித்து சேதப்படுத்தி பாலராஜேஷ் மற்றும் நண்பர்களை தாக்கி செல்போனை பறித்தனர்.

    அப்போது அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து வருவதைக் கண்டதும் அவர்கள் தப்பி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சோமையாபுரத்தைச் சேர்ந்த முத்தையா, ராம்குமார், மாரி செல்வம், வைரமுத்து, கபாலி, கோபாலகிருஷ்ணன் என்ற பீமன் என தெரிய வந்தது. அவர்கள் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள கீழ குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் என்.ஜி.ஓ. காலனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். முருகேசன் தினமும் காலையில் நிதி நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு பின்னர் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று முருகே சன் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்தனர். முருகேசன் வீட்டிற்கு வந்ததும் மோட்டார் சைக்கி ளை நிறுத்தி விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பலில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அவதூறாக பேசி முருகேசனை சரமா ரியாக தாக்கினர். இதில் காயமடைந்த முருகேசன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர். காயமடைந்த முருகேசனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து முருகேசன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராய பண்டாரம் வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். இவரது வீட்டுக்குள் கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் முககவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் சங்கமேஸ்வரன், அவரது மனைவி, மகள் ஆகியோரை கட்டி போட்டு பணம், நகையை கொள்ளையடித்து தப்பினர்.

    இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ் குமார் மேற்பார்வையில் கொங்கு நகர் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த வழக்கில் கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி மருகல் குறிச்சியை சேர்ந்த வானமாமலை (வயது 22), நல்லகண்ணு (21) ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×