என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug tablet"

    • குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    கோவை:

    கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    போலீசார் அடிக்கடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா, போதை மருந்து விற்பவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து போதை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் அதுபோன்று வருபவர்களையும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

    கஞ்சா மற்றும் போதை மாத்திரையுடன் சிக்கியவர் திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது37) என்பது தெரியவந்தது. இவர் அங்கு நிதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார்.

    அப்போது போதைப்பொருள் விற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்த சதீஷ்குமார், அதன்பிறகு கஞ்சா மற்றும் போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்களை வாங்கியும் விற்பனை செய்து வந்துள்ளார்.

    கோவையில் இவருக்கு உறவினர்கள் இருந்துள்ளனர். இதனால் அடிக்கடி இங்கு அவர்களை பார்க்க வருவது போல வந்து, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்று வந்ததும் தெரியவந்தது.

    பின்னர் கோவைப்புதூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் விற்பனையாவதால், அதனையும் வாங்கி சதீஷ்குமார் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் போதைப்பொருள் விற்ற பணத்தை கொண்டு சதீஷ்குமார் பிரெஸ்லெட், மோதிரங்கள் என தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் தங்கி இருந்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சோதனை நடத்தி அங்கிருந்த 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து நகைகள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    நிதிநிறுவன அதிபர் என கூறிக்கொண்டு, போதைப்பொருள் விற்று, அதில் சம்பாதித்த பணத்தில் நகைகளை அணிந்து கொண்டு காரில் வலம் வந்த சதீஷ்குமார், போலீசாரின் சோதனையில் சிக்கி கொண்டார்.

    திருவான்மியூரில் போதை மாத்திரை மற்றும் பவுடரை விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    திருவான்மியூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை, போதை பவுடர் பயன்படுத்தப்படுவதாகவும், கல்லூரி மாணவர்கள் பலருக்கும் போதை மாத்திரை சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அடையாறு துணை கமி‌ஷனர் சஷாங் சாய் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவான்மியூர் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் உத்தரபிரதேச மாநித்தை சேர்ந்த நிகில் திவாரி என்பதும், சென்னையில் பல்வேறு இடங்களில் போதைபொருள் சப்ளை செய்து வந்ததும் தெரிந்தது.

    அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 5 விதமான போதை மாத்திரை, போதை பவுடர், போதை பேப்பர் உள்ளிட்டவை இருந்தன. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.

    நிகில் திவாரி இவற்றை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வாங்கி சப்ளை செய்துள்ளார். அவர் வைத்திருந்த ஒருவகை போதை பேப்பரை நாக்கில் வைத்தால் போதை அதிகரிக்கும். இதனை பயன்படுத்துபவர்களுக்கு சுமார் 5 மணி நேரம் வரை போதை நீடிக்கும்.

    இதனால் நிகில் திவாரியிடம் போதை மாத்திரைகளை வாங்குவதற்கு தனி கூட்டமே இருந்துள்ளது. அதிக அளவில் கல்லூரி மாணவர்களுக்கு அவர் சப்ளை செய்து இருக்கிறார்.

    போதை பொருட்களை அவர் கடந்த 7 மாதமாக சென்னையில் சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

    அவரிடம் போதை மாத்திரைகளை வாங்கியவர்கள் யார்? வெளிநாட்டில் இருந்து எப்படி வருகிறது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×