search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிராஜ்"

    • முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
    • ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்

    தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.

    முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.

    நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.

    இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.

    இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.


    இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.

    கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.

    வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.

    இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

    நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாற்று வீரர்களாக இந்திய அணியில் இடம் பெறுகின்றனர்.
    • காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் அணியில் இருந்து விலகினர்.

    8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

    காயம் காரணமாக நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் காயமடைந்துள்ளதால் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

    இந்நிலையில் மாற்று வீரர்கள் பட்டியலில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கின்றனர். எனினும் மூன்று பேரில் யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    ஷமியின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அவர் அணியில் இடம் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி பெர்த்தில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பின்னர் பிரிஸ்பேனுக்குச் செல்லும் இந்தியா வீரர்கள் அங்கு இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×