search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹானர் 8ஏ ப்ரோ"

    • கறம்பக்குடி அருகே கார் மோதி 8 ஆடுகள் பலியானது.
    • ஆடுகளுடன் மழையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதுக்கோட்டை மழையூர் குருவினாங் கோட்டையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சித்திரவேல், (வயது 37) இவரது தம்பி ராஜ்குமார்.

    இவர்கள் இருவரும் அவரது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வீடு திரும்பினர். அவர்கள் ஆடுகளுடன் மழையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியதில் 7 செம்மறி ஆடுகள், 1 வெள்ளாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    மேலும் பாலகிருஷ்ணன் மகன் சித்திரவேல் என்பவருக்கு தலையிலும். ராஜ்குமார் என்பவருக்கு காலிலும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக மழையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சியில் இன்று மாலை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி புத்தூர் நால் ரோட்டில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் எஸ். ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சாதனைகளை விளக்கி பேசுகிறார்.

    கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஒண்டி முத்து,மாவட்ட பொருளாளர் கே.செல்வதுரை, மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி எம் ராஜேந்திரன், மகளிர் அணி மாநில செயலாளர் வக்கீல் லீமா சிவக்குமார்,

    மாவட்ட செயலாளர்கள் சந்து கடை சி.சதீஷ்குமார், கே.ஸ்ரீராம், மற்றும் மெடிக்கல் பழனி, மார்க்கெட் மண்டல் செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெய கர்ணா, கருமண்டபம் முட்டை செல்வம் மற்றும் திரளான நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    • திருச்சியில் நாளை நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.
    • பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாநகர் மாவட்ட தலைவர் அழைப்பு

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நாளை (7-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) திருச்சி புத்தூர் நால்ரோட்டில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். புறநகர் மாவட்ட தலைவர் ஆர்.அஞ்சா நெஞ்சன் வரவேற்கிறார். திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான கருப்பு முருகானந்தம் எஸ்.சி. அணி மாநில தலைவர் பெரியசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம்,

    விவசாய அணி மாநில துணைத்தலைவர கோவிந்த ராஜன், திருச்சி நகர் மாவட்ட முன்னாள் தலைவர்கள் தனபால், திருமலை, பார்த்திபன், தங்க.ராஜைய்யன், ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், பொன்.தண்டபாணி, பாபு மகாராஜன், அன்பில் சபரி, பொன்னுவேல், ராமச்சந்திரன், முத்தமிழ் செல்வன், ஜெயபால் மற்றும் மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். முடிவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் வி.பி.செல்வராஜ் நன்றி கூறுகிறார்.

    இதற்கிடையே திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் எஸ்.ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாளை (7.6.2022) மாலை 5 மணிக்கு புத்தூர் நால்ரோடு பகுதியில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து ஆலங்குடியில் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன் மூர்த்தி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் கொண்டாடப்பட்டடது.

    இதில் ஆலங்குடி நகரில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தலைவர் வில்லன்துரை, பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் இளஞ்செழியன், சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன் மூர்த்தி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆலங்குடி காவல் நிலையம், ஆலங்குடி பேருந்து நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் இனிப்புகள் வழங்கி கொண்ாடினர்.

    அத்துடன் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் 8-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி மத்திய அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய பத்திரிகை செய்தி மற்றும் பொதுமக்களிடம் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    ஹூவாயின் ஹானர் பிராண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #HONOR8APro



    ஹூவாயின் ஹானர் பிராண்டு ரஷ்யாவில் புதிய ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஹானர் பிளே 8ஏ என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, 87 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஹானர் 8ஏ ப்போ ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும், டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 8ஏ ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
    - 680 MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 217 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad #AnbumaniRamadoss
    புதுடெல்லி:

    மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

    சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும், அரசு நிலம் என்று ஆவணங்களில் மாற்றப்பட்ட நிலங்களை எல்லாம் உரியவர்களிடம் 8 வாரத்துக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்காக வருவாய் ஆவணங்களில் திருத்தம் செய்யவேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். மத்திய அரசு தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்படலாம் என தெரிகிறது.



    இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் பா.ம.க. வக்கீல் கே.பாலு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் 8 வழி பசுமைச்சாலை திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அல்லது வேறு ஏதாவது தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad #AnbumaniRamadoss
    சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad #MadrasHighCourt
    சென்னை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



    இந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை ஐகோர்ட்டில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து 8 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. வாதப் பிரதிவாதங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளனர். #SalemChennaiGreenCorridor #8LaneRoad #MadrasHighCourt
    போயிங் மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், 49 போயிங் மேக்ஸ் 8 ரக விமானங்களை வாங்குவதற்கு வழங்கிய ஆர்டரை இந்தோனேசிய விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது. #Boeing737Max8 #IndonesianAirline #AirlineGarudaIndonesia
    ஜகார்த்தா:

    அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் எத்தியோப்பியாவில் கடந்த 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால் மேக்ஸ் ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

    பல்வேறு நாடுகள் போயிங் மேக்ஸ் ரக விமானங்களை தரையிறக்கி ஆய்வு செய்து வருகின்றன. புதிதாக அந்த ரக விமானங்களை வாங்குவதற்கும் தயக்கம் காட்டி வருகின்றன.



    இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை வாங்குவதற்கு வழங்கப்பட்ட ஆர்டரை இந்தோனேசியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான கருடா ரத்து செய்துள்ளது.

    மொத்தம் 50 விமானங்களை 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க கருடா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. அதில் ஒரு விமானம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 49 விமானங்களை வாங்குவதற்கு வழங்கிய ஆர்டரை ரத்து செய்யும்படி, போயிங் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.

    வாடிக்கையாளர்களின் கவலைகள் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் போயிங் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

    இரண்டு விபத்துகளில் 346 உயிர்கள் பலியான பிறகு, போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானத்தின் ஆர்டர் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737Max8 #IndonesianAirline #AirlineGarudaIndonesia

    எல்.ஜி. நிறுவனம் தனது வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #LGV50ThinQ5G



    எல்.ஜி. நிறுவனம் ஜி8 தின்க் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இது எல்.ஜி.யின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 

    எல்.ஜி. வி50 தின்க் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 மற்றும் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேப்பர் சேம்பர் சார்ந்து இயங்கும் வெப்பத்தை குறைக்கும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 8 எம்.பி. 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    5ஜி ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. நிறுவனம் டூயல் ஸ்கிரீன் சாதனம் ஒன்றையும் வழங்கியிருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் OLED 2160x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளேவை சேர்த்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போனுடன் போகோ பின் மூலம் இணைந்து கொள்கிறது.



    எல்.ஜி. வி50 தின்க் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல்விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU 
    - ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம்
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
    - 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8, 1.22μm, 80° லென்ஸ்
    - 5 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 1.12μm, 90˚ லென்ஸ்
    - கைரேகை சென்சார்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
    - DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ
    - 5ஜி, 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
    - 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. வி50 தின்க் ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரோ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி சேவையை வழங்க எல்ஜி. பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.
    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. #MWC2019 #LGG8ThinQ



    எல்.ஜி. நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தனது ஜி8 தின்க் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஜி8 தின்க் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது.

    முன்புறம் 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது செல்ஃபிக்களில் மிகத் துல்லியமாக பிரதிபலிக்க அதிகளவு டெப்த் வழங்க உதவும். இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க ஹேண்ட் ஐ.டி. மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏர் மோஷன் மூலம் அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. ஜி8 தின்க் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
    - 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 3D ஃபேஸ் அன்லாக்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
    - DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
    - 3,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0



    எல்.ஜி. ஜி8எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2248x1080 பிக்சல் 19.5:9 FHD பிளஸ் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
    - 13 எம்.பி. சூப்பர் வைடு கேமரா
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 3D ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
    - 3550 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போன் கார்மைன் ரெட், நியூ அரோரா பிளாக் மற்றும் நியூ மொராக்கன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை மார்ச் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    எல்.ஜி. நிறுவனத்தின் ஜி8 தின்க் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. #LGG8ThinQ #Smartphone



    எல்.ஜி. நிறுவனம் தனது அடுத்த ஃபிளாஇக்‌ஷிப் ஸ்மார்ட்போனான எல்.ஜி. ஜி8 தின்க் மாடலை 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுதம் செய்ய இருக்கிறது. சோனி எக்ஸ்பீரியா சீரிஸ் மாடலின் 4K டிஸ்ப்ளேவுக்கு அடுத்தப்படியாக எல்.ஜி.யின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்டபோனின் தோற்றம், சில அம்சங்கள் தெரியவந்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் எல்.ஜி. ஜி8 தின்க் மாடலின் விவரங்களை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 3.5 எம்.எம். உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் கைரேகை சென்சார் இடம்பெற்றிருக்கிறது. இவற்றின் கீழ் எல்.ஜி. ஜி8 தின்க் பிராண்டிங் செய்யப்பட்டிருக்கிறது.

    இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் ஒற்றை செல்ஃபி கேமரா, மெட்டல் ஃபிரேம் வடிவமைப்பு மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், வலதுபுறம் பவர் பட்டன் மற்றும் சிம் டிரே இடம்பெற்றிருக்கிறது.



    எல்.ஜி. ஜி8 தின்க் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - நாட்ச் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - டூயல் பிரைமரி கேமரா (ToF லென்ஸ்)
    - ஒற்றை செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    கோவையில் இன்று காலை நகரின் முக்கிய பகுதியில் பார்சல் சர்வீஸ் ஊழியரை தாக்கி 8 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #8KgGoldRobbery
    கோவை:

    கோவை மரக்கடை மில் ரோட்டில் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனம் உள்ளது.

    கோவையில் உள்ள பல்வேறு நகைகடைகளில் இருந்து தங்க நகைகளை இந்த பார்சல் சர்வீஸ் நிறுவனம் மூலமாக விமானத்தில் வெளி மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

    அதன்படி நிறுவன ஊழியரான ராஜஸ்தானை சேர்ந்த பிரித்விசிங்(வயது 26) என்பவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மொத்தம் 8 கிலோ தங்க நகைகளை பார்சல் செய்து மோட்டார் சைக்கிளில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.

    பீளமேட்டில் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே பிரித்வி சிங் சென்று கொண்டிருந்த போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென பிரித்வி சிங்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். எனினும் உடனடியாக எழுந்து தங்க நகைகள் இருந்த பையை எடுத்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களும் பிரித்வி சிங்கின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியதோடு, ஆயுதங்களால் அவரை தாக்கி சாக்கடையில் தள்ளி விட்டனர். பின்னர் 8 கிலோ நகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இச்சம்பவத்தில் காயமடைந்த பிரித்வி சிங் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களும் ஹெல்மெட் அணிந்திருந்ததாக பிரித்வி சிங் கூறினார்.



    கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். இந்த நகைகள் பல்வேறு கடைகளின் உரிமையாளர்களுக்கு சொந்தமானது. பிரித்விசிங் வழக்கமாக அதிகாலை நேரத்தில் நகைகளை கொண்டு செல்வதை அறிந்தே வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து தாக்கி கொள்ளையடித்துள்ளனர்.

    அவினாசி சாலையில் பல்வேறு இடங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #8KgGoldRobbery
    ×