என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    பெரியார் பல்கலை க்கழகத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி தெற்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி, பட்டியல் அணி மாநில பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், வடக்கு மாவட்ட தலைவர் நடராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னத்துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன்,மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், வேதா னந்தம் , சிவகாமி, ஈஸ்வர மூர்த்தி.

    ஊடக பிரிவு தலைவர் அண்ணாதுரை, விவசாய அணி தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ரகுபதி, சிபி சக்கரவர்த்தி, தேசிய செய்தி தொடர்பாளர் சரவணன் ‌, பொருளாளர் சுதர்சனம், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் செயலாளர் பாலமுரளி உள்பட பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×