search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மோடி போட்டியிடுகிறாரா?: எடியூரப்பா பதில்
    X

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மோடி போட்டியிடுகிறாரா?: எடியூரப்பா பதில்

    வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மோடி போட்டியிடப் போவதாக வெளியான தகவலுக்கு எடியூரப்பா இன்று விளக்கம் அளித்துள்ளார். #PMModi #Yeddyurappa
    பெங்களூரு:

    தென்மாநிலங்களில் பா.ஜ.க. வலுவிழந்து காணப்படும் நிலையை மாற்றி, வலிமை சேர்க்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, இதுபோல் வரும் செய்திகள் யாவும் உண்மைக்கு புறம்பானவை. தேவையில்லாமல் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்கள் என்று தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் மூன்று தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வரும் பத்தாம் தேதி கூடும் கட்சி மேலிடக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். #Yeddyurapparubbishes #Modicontesting #LSpolls #ModicontestingfromKarnataka
    Next Story
    ×