search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராய்ச்சி"

    • வாழை, உரிய வளர்ச்சி அடையாததால் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    • கோவை வேளாண்மை பல்கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், நாளை 9-ந்தேதி நேரில் வந்து உரிய வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    அவிநாசி:

    அவிநாசி வட்டம், சேவூர் அடுத்த தண்டுக்காரன் பாளையம், ராமியம்பாளையம், குமாரபாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆதராம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தனியார் நிறுவனம் ஒன்றில், கடந்த 2022 செப்டம்பர் மாதம் வாழைக்கன்றுகள் வாங்கி பயிரிட்டனர். வாழை, உரிய வளர்ச்சி அடையாததால் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    வாழைக்கன்றுகளை விற்ற தனியார் நிறுவனத்தினர், விவசாயிகள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை அவிநாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் மோகனன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமா சங்கரி, துணை தாசில்தார் சாந்தி, சேவூர் ஆர்.ஐ., திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி வாழை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், கோவை வேளாண்மை பல்கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், நாளை 9-ந்தேதி நேரில் வந்து உரிய வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்வர் என்று முடிவு செய்யப்பட்டது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சட்ட விழிப்புணர்வு ஆணை மாநில செயலாளர் சதீஷ்குமார், வேளாண் தொழில் முனைவோர் மன்ற மாநில செயலாளர் வேலுச்சாமி, நவீன்பிரபு, ஜோதி அருணாச்சலம், குருசாமி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

    • வருகிற 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்தும், 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்தும், 23-ந்தேதி கறவை மாடு வளர்ப்பு குறித்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.

    விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியமில்லை. பயிற்சியில் பங்கு பெறுபவர்கள் ஆதார் நகலுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும்
    • மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால் தாக்கப்படுகின்றனர். இவற்றில், 8.8 மில்லியன் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன

    நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் என பலவகை உள்ளன. குழந்தைகளையும் புற்றுநோய் விட்டு வைப்பதில்லை. 2012-ம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் பரவுகிறது.

    உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயாளியின் நிலையை சிக்கலாக்குகிறது.அத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.

    இந்நிலைதான் பெரும்பாலான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணம். கட்டி செல்கள் ரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேறி மற்ற உறுப்புகளுக்கு பரவுகின்றன.

    இதனை தடுக்க அமெரிக்க, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) மற்றும் பிரிட்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசி) விஞ்ஞானிகள் மெட்டாஸ்டாசிஸின் வழிமுறைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்தனர்.

    முதன்முறையாக, விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்கள் உறுப்புகளில் ஊடுருவும் முறையை விரிவாக கண்டுபிடித்தனர். புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    புதிய மருந்துகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    உடலில் ஒரு இடத்தில் புற்றுநோய் தொடங்குகிறது. அங்கிருந்து கட்டி செல்கள் உடைந்து, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.

    இதன் விளைவாக மற்ற உறுப்புகளில் 2-ம் நிலை கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் மண்டலத்தில் நுழைவதற்கு முன்பு முதன்மைக் கட்டியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். கட்டி பெரிதாகி, அருகில் உள்ள திசு, நிணநீர், ரத்த நாளங்களில் பரவும் போது அந்த செல்கள்தான் முதன்மையான தளமாக அமைகிறது.

    புற்றுநோய் பரவலை தடுக்க விஞ்ஞானிகள் அதன் முன்மாதிரியை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.

    ரத்த ஓட்டத்திற்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் எண்டோடெலியம் எனப்படும் ஒரு அடுக்கு உள்ளது. விஞ்ஞானிகள் இதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.

    ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.

    "சேற்றில் சிக்கிக் கொண்டால், வெளியே வருவதற்கு கல் போன்ற சுவர் வேண்டும். புற்றுநோய் செல்கள், எண்டோடெலியத்தில் இருந்து வெளியேறி, மற்ற சுவர்களில் பரவுவதையே தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    உடலில் உள்ள திசுக்களில் அதிக நுண்துளைகள் உள்ளன. மென்மையானதாக இருப்பதால் மேலும் வேகமாக புற்றுநோய் செல்கள் ஊடுருவ முடியும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உடலில் உள்ள குறிப்பிட்ட திசுக்களின் புதிய வேதியியல் பண்புகள் 2-ம் நிலை கட்டிகள் எங்கு உருவாகின்றன என்பதை தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை இந்த ஆராய்ச்சி எழுப்பியுள்ளது.

    மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    இந்த ஆராய்ச்சி மூலம் உடலில் புற்றுநோய் பரவலை தடுக்க முடியுமா? எனவும் மருத்துவ வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி கவின் கிருஷிகா தேர்வானார். இதனால் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ராக்கெட் தொழில்நுட்பங்கள் பார்வையிட இஸ்ரோ நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இதற்காக இளம் விஞ்ஞானி திட்டம் அமல்படுத்தியது. இது இஸ்ரோ நிதி உதவியுடன் பள்ளி மாணவர்களின் கல்விக்கான பயிற்சி திட்டம் ஆகும். இதற்கான தேர்வு ஆன்லைனில் ஸ்பேஸ் க்விஸ் என்ற தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் சத்யா வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.ஆர். கவின் கிருஷிகா தேர்வானார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிர்வாகம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை மாணவி கவின் கிருஷிகாவுக்கு மே 14-ந் தேதி முதல் 26-ந் தேதி பார்வையிடவும், பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன.
    • விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான உயர்தர உள்ளூர் பாரம்பரிய ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பால சரஸ்வதி வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது:-

    இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். அங்கக வேளாண்மையில் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன . விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் (பொ ) ராஜப்பன், முனைவர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உளவியல் துறை இணை பேராசிரியர் இளமதி உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து பேசினார்.

    மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல் நடத்தி பாரம்பரிய நெல் பயிரிடுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதில் முனைவர்கள் தண்டாயுதபாணி, புஷ்பா, ஆனந்தி, சித்ரா, அருள்செல்வி, முன்னோடி விவசாயி தளபதி, வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன் இந்த கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா நன்றி கூறினார்.

    • மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மாணவிகள் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் சிக்கிரி நிறுவனத்திற்கு சென்றனர்.
    • இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் சிக்கிரி நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு வேதியியல் அரி மானம், ஆற்றல் மூல ஆதாரங்கள் மற்றும் கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்பு போன்றவற்றை விபரமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவன் கோவிலில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.
    • இன்னும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளியசாமி கோவிலில் வரலாற்றுக் கள ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

    ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது கிபி 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    தற்போது உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி விக்ரகம் ஏற்கனவே உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தில் இருந்ததாகவும் தற்போது பாதுகாப்பு காரணம் கருதி அந்த மண்டபத்திலிருந்து வேறொரு மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கன்னிமூல திசையில் இருந்த கணபதி தற்போது சிவன் உள்ள கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் முருகன் சந்நிதியும் இதர சன்னதிகளும் பாழடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளை தொல்பொருள் ஆராய்ச்சி துறை சார்பில் ஆய்வு செய்து உரிய ஏற்பாடுகள் செய்தால் பல உண்மைகள் தெரியவரும் எனவும் வரலாற்று கள ஆராய்ச்சியா ளர்கள் தெரிவிக்கின்றனர்.

    வரலாற்று கள ஆராய்ச்சி யாளர் சார்பில் வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் காளி, பழனி குரு உள்பட பலர் இதில் கலந்துகொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்னும் ஆராய்ச்சி களை மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

    ×