search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஷ்வினி வைஷ்ணவ்"

    • ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
    • மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.

    என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.

    ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் மிகப்பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
    • முற்றிலும் போலி தரவுகள் ஜனநாயத்திற்கு புதிய மிரட்டலாக வளர்ந்துள்ளது.

    சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டவர்), இன்ஸ்கிராம் முக்கிய பங்கு வகுக்கின்றன. இந்த வலைத்தளங்களை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவர் ஒரு செய்தியை பதிவிட்டால், நொடிப்பொழுதிற்குள் பெரும்பாலானோரை சென்றடைந்துவிடும்.

    ஆரம்ப காலத்தில் உண்மையான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது போலிச் செய்திகள் மிகப்பெரிய அளவில் பரப்பப்படுகிறது. இந்த செய்திகளை நம்பி வன்முறைகள் ஏற்படுவது. நற்பெயருக்கு கழங்கம் விளைவிக்கப்படுவதும் உண்டு.

    இதை கட்டுப்படுத்த சமூக வலைத்தளங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் முற்றிலும் போலியான செய்திகள் பரப்பப்பட்டுதான் வருகிறது.

    இந்த நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அஸ்வின் வைஷ்ணவ் கூறுகையில் ''முற்றிலும் போலியான செய்திகளை எதிர்கொள்ள நாம் புதிய விதிமுறை கொண்டு வர இருக்கிறோம். சமூக வலைத்தள நிறுவனங்கள், முற்றிலும் போலியான தரவுகளை கண்டுபிடித்தல், தடுத்தல் போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான நடைமுறை தேவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. முற்றிலும் போலி தரவுகள் ஜனநாயத்திற்கு புதிய மிரட்டலாக வளர்ந்துள்ளது" என்றார்.

    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன.
    • இந்த கோர விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின. இதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், ரெயில் விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தவும் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

    • கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசாவின் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
    • இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    புவனேஷ்வர்:

    கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு செல்ல உள்ளேன். ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
    • மத்திய அரசு ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளது என மத்திய மந்திரி கூறினார்.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசின் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் இன்று நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 100 சதவீதம் நிதி பயனாளிகளைச் சென்றடைகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இதற்குப் பின்னால் இருந்தது.

    ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது. மத்திய அரசின் நிதி தற்போது ரூ. 26 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. நேரடி பணப் பரிமாற்றத்தால் ரூ. 2.25 லட்சம் கோடியை அரசு சேமித்துள்ளது.

    வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

    135 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம், அரசின் பணப் பயன் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. நாம் கோ-வின் இணைய தளம் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம்.

    மத்திய அரசின் இ-வர்த்தக தளத்தில் 125 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இந்தத் தளத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு ரூ. 3.5 லட்சம் கோடிக்கு பொருட்களை வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்துள்ளது.

    கடந்த 2014 முதல் 2022 வரை ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் நீக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.

    நல்லாட்சி இருந்தால்தான் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடையும். நல்லாட்சியே அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதனால் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5ஜி தொலைத் தொடர்பு சேவையில் கதிர் வீச்சு அளவு குறைவாகவே உள்ளது.
    • ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரெயில்களை வடிவமைக்க நடவடிக்கை.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், 5ஜி சேவையின் வேகம் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்.

    5ஜி ஆய்வகம் சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 5ஜி தொலைத் தொடர்பு சேவையின்போது வெளிப்படும் கதிர் வீச்சின் அளவு உலக சுகாதார ஆணையம் பரிந்துரைந்த அளவை விட குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    நாடு முழுவதும் முதல் கட்டமாக 13 நகரங்கள் 5ஜி சேவையைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதில் ஒடிசாவும் இருக்கும் என்றும் அவர் கூறினார். ​​தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் சேவையின் தரத்தை மேம்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் குறிபிப்பிட்டார்.

    2023 ஆம் ஆண்டிற்குள் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையில் ரெயில்களை வடிவமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், கதி சக்தி கொள்கையின் மூலம் நாட்டின் இணைக்கப்படாத பகுதிகளை ரெயில்வே மூலம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • 5ஜி சேவையை பொறுத்த வரை 4ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும்.
    • அக்டோபருக்குள் 5ஜி சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. கடந்த ஜூலை 26-ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாளாக 40 சுற்றுகளாக ஏலம் நடந்தது. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் போனது.

    ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், 5ஜி சேவை தொடர்பாக மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி சேவைகளை வெளியிட தீவிரம் காட்டி வருகிறோம். அக்டோபர் 12-ம் தேதிக்குள் அறிமுகப்படுத்துவோம். அதன்பிறகு மற்ற நகரங்களில் மேலும் விரிவுபடுத்தப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

    ×