என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பெரியசாமி"

    • வரலாற்றில் இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் சாலை இல்லாத கிராமங்களுக்கு 23 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் 2-ம் கட்டமாக விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் நெருக்கடி இருந்தது. வருவாய் பற்றாக்குறையாக ரூ.60 ஆயிரம் கோடியை அ.தி.மு.க.வினர் விட்டுச் சென்றனர். அதன் காரணமாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்க சில மாதங்கள் தாமதமானது. இருந்தபோதும் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கூட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு முறையாக வழங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றாமல் சொன்னதை சொன்னபடி நிறைவேற்றி வருகிறோம்.

    வரலாற்றில் இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எந்த திட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்புவார்கள். ஆனால் பா.ஜ.க. குறைகூறுவதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். கடந்த 1½ ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டது எந்த ஆட்சியிலாவது நடந்ததுண்டா. ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ஒருலட்சம் வீடுகள் பழுது நீக்கம் மற்றும் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் சாலை இல்லாத கிராமங்களுக்கு 23 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வன்னியர் இட ஒதுக்கீடு1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் தீர்மானமாக வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது வன்னியர்கள் 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வருகின்றனர். ஆனால் 20 சதவீத இடஒதுக்கீட்டில் 13 சதவீதம் பேர் பயன் அடைந்து வருகின்றனர். என்னிடம் புள்ளி விவரம் உள்ளது. இதில் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர், பிரமலைக்கள்ளர், மறவர் என 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் உள்ளனர். அவர்களுக்கு பெரிய அளவில் ஒதுக்கீடு போவதில்லை.

    வன்னியர் சமுதாயத்திற்கே கேட்கும் அளவை விட கூடுதலாக இருக்கிறது. கேட்பது அவர்களின் உரிமை. தனியாக பிரித்து வன்னியர்களுக்கு என கேட்கின்றனர். பொதுவாகத்தான் அரசு முடிவு எடுக்க முடியும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கொடுத்த இடஒதுக்கீட்டில் கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என பாதிரியாளர்கள் முதலமைச்சரிடம் கேட்டார்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 69 சதவீத இடஒதுக்கீட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் முடிவு செய்வார்.

    பா.ஜ.க.விற்கு இருக்கும் ஆயுதம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை. வழக்கு போட்டு ஜனநாயக நாட்டில் ஒரு அரசை முடக்கலாம் என்று நினைத்தால் நடக்காது. எத்தனை வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தில் நிற்காது. பா.ஜ.க.விடம் உள்ள ஆயுதங்கள் பழுதடைந்தவை. ஆனால் எங்களின் ஆயுதம் வலிமையானவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.
    • அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய ரேசன் கடைகளை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேசன் கார்டுதாரருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் சரியான நேரத்தில் அறிவித்து வருகிறார். குறை எதுவும் இல்லாத ஆட்சியை அவர் நடத்தி வருகிறார்.

    2026 தேர்தலில் 210 தொகுதிகளில் பெற்றி பெறுவோம் என அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடம் இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது. அவ்வாறு உள்ள நிலையில் இவர்கள் எப்படி 210 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்? தி.மு.க. ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊராட்சி துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுமார் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. பழைய வீடுகளுக்கு பதிலாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை. 20 ஆண்டு காலமாக பழுது நீக்காமல் இருந்த வீடுகள் எல்லாம் ரூ.2 ஆயிரம் கோடியில் பழுது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வீட்டில் வசித்த மக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு காலனியிலும் எவ்வளவு வீடு பழுது பார்க்கப்பட்டுள்ளது, மக்கள் எப்படி வாழ்ந்து வருகின்றனர் என்பதை அ.தி.மு.க.வினர் விசாரிக்க வேண்டும். நாங்கள் எந்த திட்டத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்க்கவில்லை. தேர்தலுக்காக லேப்டாப் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுகின்றனர். சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பைத்தான் நிறைவேற்றி வருகிறோம். விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் பணம் வீடு தேடி வரும். விடுபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முதலமைச்சர் தயாராக உள்ளார் என்றார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
    • வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று அம்பேத்கார் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. த.வெ.க. இன்னும் மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் பெறவே இல்லை. இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சியுடன் யார் சேர்ந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு எந்த கவலையுமில்லை.

    திருப்பரங்குன்றம் விஷயத்தில் தி.மு.க. அரசு சரியான பாதையில் செல்கிறது. தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய யார் நினைத்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் அனுப்பியுள்ளேன். பி.எல்.ஓ. எனப்படும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் எந்த வீடுகளுக்கும் நேரடியாக சென்று படிவங்களை வழங்கி கையெழுத்து பெறவில்லை. ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தலை நடத்துங்கள், வாக்காளர்கள் அவர்களாக வாக்களிக்கட்டும். திண்டுக்கல்லில் உயிருடன் உள்ள தி.மு.க. நிர்வாகியை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர். ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட நரிக்கல்பட்டி, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளர் குளறுபடி நடந்துள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் இடமாற்றம் செய்து விட்டதாக பல படிவங்களை தள்ளுபடி செய்து விட்டனர். இது போன்று பல்வேறு தொகுதிகளிலும் குளறுபடி நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை
    • மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராவும், அவரது  துவாரகநாதனும் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகே உள்ள செவாலியே சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்திராவின் வீட்டில் திடீரென கோவை ஜிஎஸ்டி  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்த நிலையில், திமுக தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வீடு மட்டுமின்றி துவாரகநாதனுக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்திலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிறுவனத்தில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகன் செந்தில் குமார் வீடு, இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • திண்டுக்கல் நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டிருந்தது
    • உயர்நீதிமன்ற நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.

    2006 - 2010 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.

    மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

    மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.
    • தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    கேள்வி : தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியதற்கு?

    பதில் : திட்டங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் இதை கூறினாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என கூறியுள்ளார். அது அவரின் உரிமை. 7 ஆண்டு காலமாக ஒரு தூசி கூடப்படாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை பார்த்து வருகிறார்.

    இந்தியாவில் வலதுசாரிகள் ஒரு பக்கமும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் ஜனநாயக கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. எந்த பிரச்சனையும் இல்லை. எந்த திட்டங்கள் எனக்கூறினால் அதனையும் நிறைவேற்றித் தர எங்களது முதல்வர் தயாராக உள்ளார்.

    கேள்வி : தி.மு.க. கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் விலக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது பற்றி?

    பதில் : அது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்கள் தெரியும் போதே தண்ணீர் இல்லாத பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணீர் இருந்தால் குதிக்கலாம். தண்ணீர் இல்லாமல் எப்படி குதிக்க முடியும்.

    இந்தியாவில் தலைசிறந்த அரசாக தலைசிறந்த மாநிலமாக தலை சிறந்த முதலமைச்சராக தமிழ்நாட்டில் திட்டங்கள் வளர்ச்சியிலிருந்து எல்லோரிடத்திலும் முதன்மையான அரசாங்கம் எல்லாத்துறைகளும் உயர்ந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100க்கு 100 சதவீதம் வந்துள்ளது என்றால் படிப்பதற்கு ஆர்வமாக வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் போகாத பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர். கல்லூரிக்கு சென்றால் பணம், பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவு உள்ளது. படிப்பதற்கு இலவசம், கல்லூரி வரை இலவசம் எல்லாமே இலவசம். ஆனால் இதனை இலவசம் என கூற மாட்டேன். கட்டணமில்லா கல்வி பெறுவதற்கு முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.

    கேள்வி : ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து?

    பதில் : ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை. கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.

    தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

    கேள்வி : கூட்டணி கட்சிகள் அதிக இடங்கள் கேட்பது குறித்து?

    பதில் : நான் சாப்பிட வேண்டும் என்றால் எனக்கு மூன்று புரோட்டாக்கள் வைத்தால் சாப்பிட முடியாது. 2 அல்லது 3 இட்லிகள் தான் சாப்பிட முடியும். அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல் கடந்த காலங்களில் எந்தெந்த இயக்கங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த அடிப்படையில் முதலமைச்சர் முடிவு செய்து வழங்குவார். எந்தக் கூட்டணியும் எங்களை விட்டு போகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் கூறி வருகிறார்.
    • ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக தமிழக காவல் துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வைத்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சிறுமலையில் பட்டா கேட்டு 35 வருடம் போராடிய பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. பட்டா கேட்பவர்களுக்கு வனத்துறையுடன் பேசி அதற்கான வாய்ப்புகள் இருந்தால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. பஸ் வசதி இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. நத்தம் தொகுதி மட்டும் புறக்கணிக்கப்படுகிறது என்பதை ஏற்க இயலாது. எங்கெங்கு பஸ்கள் தேவையோ அங்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் கூறி வருகிறார். இந்தியாவிலேயே அமைதிப்பூங்கா என்றால் அது தமிழ்நாடு மட்டும்தான். மற்ற மாநிலங்களை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இளம்பெண்கள் அச்சமின்றி நடந்து செல்லும் வகையில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

    விமானத்தில் ஏறி அமர்ந்த நபரையே தமிழ்நாடு போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக தமிழக காவல் துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வைத்துள்ளார்.

    யார் தவறு செய்தாலும் அமைச்சராகிய நானே தவறு செய்தாலும் அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொள்ள மாட்டார். போலீசார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது அது உண்மையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறு எங்கு நடந்தாலும் அதனை தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
    • தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.

    சின்னாளபட்டி:

    100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,

    தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய ரூ.4039 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.240 முதல் ரூ.270 வரை சம்பளம் கிடைக்கிறது. வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.

    தமிழகத்திற்கு இதேபோல் கல்வி நிதியை வழங்காமலும், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும்.

    நிதியை விரைவில் ஒதுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டமும் தொடரும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் மீடியா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஜய் கூறியதைபோல தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது. மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக தி.மு.க. விளக்கி வருகிறது. தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு யாரும் போட்டி கிடையாது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில் ஒருசிலர் அரசியலுக்காக முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகின்றனர்.
    • பாலார்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் பொங்கல் வைத்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 182-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர்.

    தமிழக அரசின் சார்பில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கிற்கு லண்டனில் சிலை வைத்து உலகறிய செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம். கேரள அரசிடம் நட்பான முறையில் தமிழக அரசு பேசி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

    மேலும் பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். கேரளாவில் ஒருசிலர் அரசியலுக்காக முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகின்றனர். இது ஒருபோதும் நடக்காது. எந்த சூழ்நிலையிலும் அணைக்கான உரிமை மற்றும் கண்ணகி கோவிலின் உரிமையை தமிழக அரசு விட்டு கொடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.ஜக்கையன், பெரியாறு-வைகை பாசன ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ்பாபு மற்றும் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், கூடலூர் நீரிணைப் பயன்படுத்துவோர் சங்கம் நாம் தமிழர் கட்சி, பா.ஜ.கவினர், விவசாயிகள் விடுதலை முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சியினர் உள்பட ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    பாலார்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் பொங்கல் வைத்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியசாமி சார்பில், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
    • வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை.

    சென்னை:

    கடந்த 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

    புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை. சந்தை விலைக்குதான் விற்கப்பட்டது.

    இதற்கு அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வழக்கு தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை. புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து, உத்தரவிட்டுள்ளார்.

    • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முருக பவனத்தில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணியை அமைச்சர் இ.பெரியசாமி, பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதன் பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    பாடநூல்களை பொறுத்தவரையில் தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைவருக்கும் அரசின் இலவச புத்தகங்கள் கிடைக்கும்.

    தேனி மாவட்டத்தில் சுற்றி வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தனது பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. மேலும் இலவச பாட புத்தகங்களுடன் 11 கல்வி உபகரணங்களும் வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைப்பார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக 6ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தால் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திராவிட மொழி குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாறு பாடத்தை சேர்க்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று இதற்கான உத்தரவை வழங்குவார் என்றார்.

    • இந்த திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம். தமிழகத்தில் மிகச் சிறப்பாக 200 சதவீதம் செயல்பட்டு வருகிறது.
    • அடுத்த வாரம் அவரவர் வங்கி கணக்கில் மத்திய அரசிடம் இருந்து நிதி வந்த பின்பு செலுத்தப்பட்டு விடும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நிர்வாக கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை திட்டமிட்டு தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். ஊரக வளர்ச்சித்துறை மட்டுமல்லாது அனைத்து துறையும் மிக சிறப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    100 நாள் வேலைத்திட்டத்தில் 8 வாரம் ஊதியம் விடுவிக்கப்படவில்லை என்று பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.2100 கோடி விடுவிக்க வேண்டி இருந்த நிலையில் ரூ.1,800 கோடி மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள ரூ.300 கோடி அடுத்த வாரம் அவரவர் வங்கி கணக்கில் மத்திய அரசிடம் இருந்து நிதி வந்த பின்பு செலுத்த ப்பட்டு விடும்.

    100 நாள் வேலைத்திட்டத்தை இந்தியாவிலேயே முழுமையாக செயல்படுத்துவது தமிழகத்தில்தான். இந்த திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம். தமிழகத்தில் மிகச் சிறப்பாக 200 சதவீதம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டில் 27 கோடி வேலை நேரத்தை தாண்டவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் இந்த மாதம் வரை 27 கோடி மனித நாட்கள் பயன்படுத்தப்பட்டு விட்டது. குடிநீர் வசதியில் இந்தியாவில் தமிழகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கிராமங்களில் 3500 மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. 2024க்குள் 8 ஆயிரம் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு விடும். தற்போது மழைநீர் குறைவாக உள்ளது. இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் சரியாக திட்டமிடப்பட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர், மின்விளக்கு வசதி, சாலைவசதி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை.

    அதனால் தற்போது அனைத்து கிராமங்களிலும் கடைக்கோடி கிராமம் வரை மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 4 ஆயிரம் கோடியில் சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாதுகாக்கப்பட்ட அரசாக தமிழகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    ×