search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் தொழிலாளர்களுக்கு அடுத்த வாரம் பணம் கிடைக்கும்: அமைச்சர் இ.பெரியசாமி உறுதி
    X

    அமைச்சர் இ.பெரியசாமி.

    100 நாள் தொழிலாளர்களுக்கு அடுத்த வாரம் பணம் கிடைக்கும்: அமைச்சர் இ.பெரியசாமி உறுதி

    • இந்த திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம். தமிழகத்தில் மிகச் சிறப்பாக 200 சதவீதம் செயல்பட்டு வருகிறது.
    • அடுத்த வாரம் அவரவர் வங்கி கணக்கில் மத்திய அரசிடம் இருந்து நிதி வந்த பின்பு செலுத்தப்பட்டு விடும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நிர்வாக கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை திட்டமிட்டு தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். ஊரக வளர்ச்சித்துறை மட்டுமல்லாது அனைத்து துறையும் மிக சிறப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    100 நாள் வேலைத்திட்டத்தில் 8 வாரம் ஊதியம் விடுவிக்கப்படவில்லை என்று பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.2100 கோடி விடுவிக்க வேண்டி இருந்த நிலையில் ரூ.1,800 கோடி மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள ரூ.300 கோடி அடுத்த வாரம் அவரவர் வங்கி கணக்கில் மத்திய அரசிடம் இருந்து நிதி வந்த பின்பு செலுத்த ப்பட்டு விடும்.

    100 நாள் வேலைத்திட்டத்தை இந்தியாவிலேயே முழுமையாக செயல்படுத்துவது தமிழகத்தில்தான். இந்த திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம். தமிழகத்தில் மிகச் சிறப்பாக 200 சதவீதம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டில் 27 கோடி வேலை நேரத்தை தாண்டவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் இந்த மாதம் வரை 27 கோடி மனித நாட்கள் பயன்படுத்தப்பட்டு விட்டது. குடிநீர் வசதியில் இந்தியாவில் தமிழகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கிராமங்களில் 3500 மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. 2024க்குள் 8 ஆயிரம் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு விடும். தற்போது மழைநீர் குறைவாக உள்ளது. இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் சரியாக திட்டமிடப்பட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர், மின்விளக்கு வசதி, சாலைவசதி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை.

    அதனால் தற்போது அனைத்து கிராமங்களிலும் கடைக்கோடி கிராமம் வரை மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 4 ஆயிரம் கோடியில் சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாதுகாக்கப்பட்ட அரசாக தமிழகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×