என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்- அமைச்சர் பெரியசாமி
    X

    பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்- அமைச்சர் பெரியசாமி

    • அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.
    • அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய ரேசன் கடைகளை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேசன் கார்டுதாரருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் சரியான நேரத்தில் அறிவித்து வருகிறார். குறை எதுவும் இல்லாத ஆட்சியை அவர் நடத்தி வருகிறார்.

    2026 தேர்தலில் 210 தொகுதிகளில் பெற்றி பெறுவோம் என அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடம் இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதிகள் போக 24 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. போட்டியிடும் நிலை உள்ளது. அவ்வாறு உள்ள நிலையில் இவர்கள் எப்படி 210 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்? தி.மு.க. ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊராட்சி துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுமார் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. பழைய வீடுகளுக்கு பதிலாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை. 20 ஆண்டு காலமாக பழுது நீக்காமல் இருந்த வீடுகள் எல்லாம் ரூ.2 ஆயிரம் கோடியில் பழுது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வீட்டில் வசித்த மக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு காலனியிலும் எவ்வளவு வீடு பழுது பார்க்கப்பட்டுள்ளது, மக்கள் எப்படி வாழ்ந்து வருகின்றனர் என்பதை அ.தி.மு.க.வினர் விசாரிக்க வேண்டும். நாங்கள் எந்த திட்டத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்க்கவில்லை. தேர்தலுக்காக லேப்டாப் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுகின்றனர். சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பைத்தான் நிறைவேற்றி வருகிறோம். விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் பணம் வீடு தேடி வரும். விடுபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முதலமைச்சர் தயாராக உள்ளார் என்றார்.

    Next Story
    ×