search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் அகர்கர்"

    • கோலி களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
    • கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும்.

    மும்பை:

    20 ஒவர் உலகக்கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்படமாட்டார் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இது குறித்துதேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-

    விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர். 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த உடற்தகுதியை தொடர்ச்சியாக அவர் பராமரித்து வருகிறார். அவர் களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.

    கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும். அணிக்குள் உடற்தகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் கோலியின் பங்கு முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோலியை அகர்கர் பாராட்டி இருப்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.

    • அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர்.
    • ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் உள்ளன. இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஒவ்வொரு அணியும், சுழற்பந்து வீச்சாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருப்பார் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

    குல்தீப் யாதவுடன் ஐ.பி.எல். போட்டியில் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும். அதை இந்திய அணி நிர்வாகம் செய்திருக்கிறது.

    குல்தீப் யாதவ் எங்களுக்கு (இந்திய அணி) ஒரு துருப்பு சீட்டாக இருப்பார். அவரை பெரும்பாலான அணிகள் சவாலாக கருதுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினர்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 5 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்.

    இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதல் 2 ஆட்டங்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரோகித் சர்மா கூறும்போது, "குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாங்கள் நிறைய விஷயங்களை யோசித்தே குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை எடுத்தோம்.

    உலகக்கோப்பைக்கு முன்னதாக குல்தீப் யாதவை அதிகம் வெளிப்படுத்த விரும்பாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக அவரை பார்த்து கொண்டிருக்கிறோம்.

    அதனால்தான் அவரை அதிகம் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் இரண்டு ஆட்டங்களுக்கு வெளியே அமர்ந்து 3-வது ஆட்டத்தில் விளையாடுவது எங்களுக்கு சிறந்த முடிவாகும்" என்றார்.

    • அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது.

    கடந்த பிப்ரவரி மாதத்தில் சேத்தன் ஷர்மா பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் சேத்தனுக்கு பதிலாக அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் தலைமை தேர்வாளருக்கான போட்டியில் முன்னணியில் இருந்தவர்.

    ஒரு தேர்வாளராக, அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது. தலைமை தேர்வாளர் ஆன பிறகு அஜித் அகர்கர் கூறுகையில், "ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது" என்றார்.

    ×